'மாமன்' பட வெற்றியால் துள்ளிக் குதிக்கும் சூரி.. எமோஷனலாகப் பதிவிட்டு உருக்கம்.!!
கலைஞர்களின் அயராத உழைப்பும், நேர்த்தியும்தான் ‘மாமன்’ படம் உங்கள் இதயங்களில் இடம் பெற்றிருக்க முக்கிய காரணம் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
கலைஞர்களின் அயராத உழைப்பும், நேர்த்தியும்தான் ‘மாமன்’ படம் உங்கள் இதயங்களில் இடம் பெற்றிருக்க முக்கிய காரணம் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில்
சூரி, லட்சுமி ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்த ‘மாமன்’ படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. குடும்பப் படமான இப்படத்துக்கு பாசிட்டிவ்வான வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் படம் ரூ 25 கோடி வசூலை கடந்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளத். இந்நிலையில் நடிகர் சூரி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உண்மையான வெற்றி என்றால்… உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மனதார மதிப்புக் கொடுப்பதில்தான் ஆரம்பமாகிறது. அந்த நம்பிக்கையோடு ‘மாமன்’ கதையை நான் தொடங்கினேன். ‘மாமன்’ என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஓர் உணர்வுப்பூர்வமான பயணம்.
இந்த உணர்வுகளை என் இயக்குநர் மிக நுட்பமாக உணர்ந்து, ஆழ்ந்த அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்போடும் எடுத்துக் கொண்டு, அதை உயிரோட்டமுள்ள திரைப்படமாக மாற்றியதற்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் பயணத்தில், ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களை மனதார உணர்ந்து, உயிரோட்டமுடன் அரங்கேற்றினார்கள். அதேபோல் ஒளிப்பதிவு, இசை, தொகுப்பு, ஒலி, கலைத்துறை, உடை வடிவமைப்பு, நடனம், சண்டை இயக்கம், எழுத்து, தயாரிப்பு நிர்வாகம், வாகன வசதி, ஒவ்வொரு தொழில்நுட்பக் குழுவும் தங்களின் முழு அர்ப்பணிப்போடும், நம்பிக்கையோடும் பணியாற்றினர். அவர்களது அயராத உழைப்பும், நேர்த்தியும்தான் ‘மாமன்’ இன்று உங்கள் இதயங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கிய காரணம்.
இன்று ‘மாமன்’ திரைப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்திலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், ஒலிக்கிறது திரையில் மட்டும் அல்ல, நீங்கள் அளித்த அன்பிலும், பாராட்டிலும், உற்சாக புன்னகைகளிலும்… ஒவ்வொரு குடும்பத்தின் உள்ளத்திலும் அது வாழ்கிறது. உங்கள் அன்பும், ஆதரவும் தான் எனக்கு உண்மையான வெற்றியும் மகிழ்ச்சியும். ‘மாமன்’ படத்தை உங்கள் குடும்பத்தோடு இணைந்து ரசித்து, உள்ளத்தோடு ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியும், என் வாழ்த்துகளும்” என்று சூரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சமிக்காக தாய்மாமனாக மாறிய சூரி..! காது குத்தி அழகு பார்த்த ருசிகர சம்பவம்..!
இதையும் படிங்க: சேலையை முறுக்கி... கிளாமரை கூட்டிய அதுல்யா ரவி! அடிபொலி போட்டோஸ்!