×
 

கோலிவுட்டில் தீவிரமாக நடந்த கொகைகன் சப்ளை.. ஸ்ரீகாந்திற்கு அடுத்ததாக மாட்டப்போகும் முக்கிய நடிகர்..!

கோலிவுட்டில் ஆல் அட்ரஸ் இல்லாமல் போன ஸ்ரீகாந்த் தற்போது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அறிமுகமான முதல் படத்திலேயே பெண்களின் கனவு நாயகனாக மாறினார். இதன்பின் ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். நண்பன் திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இதன் பின்பு சரியான படவாய்ப்பு கிடைக்காததால் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் கேரக்டரில் மட்டுமே நடித்து வந்தார். கோலிவுட்டில் ஆல் அட்ரஸ் இல்லாமல் போன ஸ்ரீகாந்த் தற்போது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத், அஜய் வாண்டையார் உட்பட ஒன்பது பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். பிரசாத் மீது பல மோசடி புகார்கள் குவிந்ததால் அந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். இவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்தபோது கொகைன் போதை பொருள் கடத்தல் நபருடன் அவர் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: போதை பொருள் வழக்கில் வசமாக சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்..! பதற்றத்தில் முக்கிய புள்ளிகள்..!

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரசாந்தின் நண்பரான சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 கிராம் கொகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்துக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பிரதீப்குமார் கொகைன் போதை பொருளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

பிரசாத்துக்கு போதை பொருள் விற்பனை செய்தது போல் பிரபல நடிகர் ஸ்ரீகாந்துக்கும் கொகைனை கொடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார் பிரதீப்.
நடிகர் ஸ்ரீகாந்துக்கும் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் மூலம் தான் கொகைன் போதை பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் தெரிவித்தார். இதை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்தை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் சோதனை செய்ததில் போதைப் பொருள் எதுவும் சிக்கவில்லை. இதை அடுத்து அவருக்கு சம்மன் கொடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானதாக கூறப்படுகிறது. 

போதை பொருள் உறுதியானதை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன. பிரசாத் தீங்கரை என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தார். இந்த படத்தில் ஹீரோவாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த இருவரும் போதை பொருள் பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போதை பொருளை பிரசாத்துக்கு சப்ளை செய்யும்போது நடிகர் ஸ்ரீகாந்தும் இருப்பார் என பிரதீப் வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்துக்கு வேண்டும் என்றுதான் பிரசாத் போதை பொருளை வாங்கியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

நடிகர் ஸ்ரீகாந்துக்காக பலமுறை பிரதீப்குமார், பிரசாத் மூலம் கொகைன் சப்ளை செய்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் பிரசாத் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அந்த பார்ட்டிக்கு பிரதீப் கொகைன் போதை பொருளை சப்ளை செய்துள்ளார். அதில் ஸ்ரீகாந்துடன் மற்றொரு நடிகரும் கொகைன் பயன்படுத்தியதாக கைதான பிரதீப் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நடிகரையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் நடிகைகள் பலர் சிக்கினர். இதே போன்று கேரள சினிமாவில் போதை பொருள் பயன்படுத்தியதாக பிரபல நடிகர் டாம் சாக்கோ சிக்கினார். தற்போது கோலிவுட்டில் போதை பொருள் பயன்பாடு இருப்பது ஸ்ரீகாந்த் விவகாரம் மூலம் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதையும் படிங்க: Time to #GetChikitufied.. வெளியானது 'கூலி' படத்தின் மாஸ் அப்டேட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share