எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!
தனக்கு நடிக்க தெரியவில்லை என பலர் கூறுவதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை தெரிவித்து இருக்கிறார்
இந்திய திரை உலகத்தின் கவர்ச்சி நாயகிகளுக்கு அடிமையாக இருக்கும் பல இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளை கொள்ள வந்தவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவரது அழகை போற்றி பாடும் ஒரு கூட்டம் அவரது இடை அழகையும் சேர்த்தே பாடி வருகிறது.
இப்படிப்பட்ட அனுபவமா பரமேஸ்வரன் அனைத்து உலகத்திற்கும் தெரிய காரணமாக இருந்த திரைப்படம் என்றால் அதுதான் பிரேமம். இப்படத்தில் 'கண்ணுச் சிவகணும் பல்லு கடிக்கணும்' என்ற ஒரு பாடலைக் கேட்ட உடனே நாடி நரம்பு எல்லாம் எப்படி துடிக்கிறதோ அதேபோலத்தான் அனுபமாவை கண்டால் இளசுகளுக்கு நாடி நரம்பெல்லாம் காதல் வயப்படும் அளவிற்கு மாறும். அப்படிப்பட்ட அனுபவமா அழகாக இருக்க காரணம் அவர் கேரளாவை சேர்ந்த பெண்மணி என்பதாலோ நடிகை என்பதாலோ அல்ல. இயற்கையிலேயே அவர் சிரிப்பழகுடையவர் தான். இருப்பிடம் அவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர். தனது சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் நடிகையாக அவதரித்தார்.
இதையும் படிங்க: என்ன சூரி கலக்குறீங்களே.. எக்ஸ் தளமே அவர் கண்ட்ரோல் தான்.. ஒரே போஸ்டில் வேர்ல்டு லெவல் ஃபேமஸ்..!
படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் இல்லாமல் இருந்தாலும் படத்தில் தங்கையாக 'மேரி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். இதனை அடுத்து நடிகர் தனுஷின் 'கொடி' திரைப்படத்தில் 2016-ம் ஆண்டு நடித்து தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்ந்தார். இதனை அடுத்து பல வருடங்களாக சினிமா இண்டஸ்ட்ரியல் காணாமல் போயிருந்த அனுபமா, 2021-ம் ஆண்டு ஆர்.கண்ணன் இயக்கத்தில் வெளியான "தள்ளி போகாதே" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து 2024-ம் ஆண்டு இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான "சைரன்" திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான "டிராகன்" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனுபமா.
இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. 2025 அக்டோபர் 17-ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் "பைசன்" திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி இருக்க இயக்குனர் பிரவீன் நாராயணன் இயக்கத்தில் சுரேஷ்கோபி, திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் ஆகியோருடன் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த மலையாளத் திரைப்படம் ஆன "ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா " என்ற திரைப்படம் வருகின்ற ஜூன் 27ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கேரளாவில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
அப்பொழுது பேசிய நடிகை அனுபமா, "எனக்கு நடிக்கவே தெரியாது என பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்... அதனை ட்ரோல் ஆகவும் செய்து எனது மனதை வேதனைப்படுத்தி வருகின்றனர். இவர்களது இந்த பதிவால் சினிமாவிலிருந்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.. நீங்கள் போடும் பதிவுகளால் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஆகவே, என்னை விமர்சனம் செய்யுங்கள் அதில் நான் எந்த தவறும் சொல்லவில்லை... ஆனால் அந்த விமர்சனம் என் வாழ்க்கையை மொத்தமாக அழித்து விடாதபடிக்கு போடுங்கள்" என வருத்தமாக பேசி இருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து பேசிய சுரேஷ் கோபி, "இது அனுபமாவினுடைய பிரச்சனை மட்டுமல்ல மலையாள சினிமாவில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே இதுதான். ஏற்கனவே நடிகை சிம்ரன் இங்கு வந்து நடித்த பொழுது அவரை மிகவும் குறைத்து மதிப்பீட்டீர்கள். ஆனால் பின் நாட்களில் பாருங்கள் அவர் பிரபல நடிகையாக வலம் வந்தார். அவர்மட்டுமல்ல தற்பொழுது பிரபல நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் அசின், நயன்தாரா போன்ற உச்சபட்ச நட்சத்திரங்களையும் இப்படி தான் ஆரம்ப காலத்தில் குறைத்து மதிப்பீட்டீர்கள்.
இதுதான் இந்த மலையாள திரை உலகின் மிகப்பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. ஆனால் என்ன பயன் அவர்களை விமர்சிக்கும் இயக்குனர்களே அவர்கள் உச்சபட்ச நட்சத்திரமாக மாறும்பொழுது அவர்களிடத்தில் போய் வாய்ப்புக்காக ஓடி நிற்கிறீர்கள். இது போல தான் அனுபமா உங்களுக்கும் நடக்கிறது. நீங்கள் பெரிய நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கிறீர்கள். அது உங்கள் கண்கள் கண்டு கொண்டிருக்கிறது அதுதான் கர்மா" என பேசி இருக்கிறார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் உங்கள் அழகிற்கும் திறமைக்கும் உங்களது படம் பத்து நாள் அல்ல 20 நாள் அல்ல ஒரு வருடம் கூட ஓடும் ஆதலால் நீங்கள் கவலைப்படாமல் நடியுங்கள் நாங்கள் இருக்கிறோம் என அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையை அலறவிட்ட காலா நடிகை.. கோவிலுக்குள் அவர் செய்த வேலையை பாருங்க..!