சேலையில் தேவதை போல ஜொலித்த ப்ரியாமணி..!! ட்ரெடிஷ்னலில் கலக்கும் நடிகையின் கிளிக்ஸ் இதோ..!
நடிகை ப்ரியாமணி சேலையில் தேவதை போல ஜொலித்த போட்டோஸ் ரிலீஸ் ஆகியுள்ளது.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ப்ரியாமணி. தனது இயல்பான நடிப்பு, கதாபாத்திர தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இவர், தற்போது தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் திரையுலகிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகை ப்ரியாமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகின்றன.
இதையும் படிங்க: தியேட்டரில விட்டதை வீட்டுல பிடிக்கலாமா..!! இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள், வெப் தொடர்கள் லிஸ்ட் இதோ..!
தமிழ் சினிமாவில் ப்ரியாமணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பருத்திவீரன்.
இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ப்ரியாமணி, தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
அந்த கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளையும், கிராமத்து பெண்ணின் இயல்பையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்திய அவர், விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்றார்.
குறிப்பாக, “பருத்திவீரன்” திரைப்படம் ப்ரியாமணியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. அந்த படத்தில் நடித்ததற்காக அவர் தேசிய விருது உட்பட பல்வேறு பாராட்டுகளை பெற்றார். இதன் மூலம், ஒரு திறமையான நடிகையாக தமிழ் சினிமாவில் தனது இடத்தை உறுதி செய்தார்.
அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த ப்ரியாமணி, தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
வழக்கமான கதாநாயகி கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்யாமல், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.
சமீப ஆண்டுகளில் ப்ரியாமணி பாலிவுட் திரையுலகிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ் தளங்களிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதனால், தென்னிந்திய சினிமாவைத் தாண்டி இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக அவர் மாறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திலும் ப்ரியாமணி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் அவரது நடிப்பை ரசிகர்கள் கவனித்த நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்தும் பல்வேறு கருத்துகள் வெளியாகின.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவுல இப்ப இருப்பது காதல் அல்ல.. காமம் மட்டும் தான்..!! ஒரே பேட்டியில் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா..!