பான் இந்தியா ராணியாக வளம் வரும் நடிகை சோபிதா துலிபாலா..!! புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!
நடிகை சோபிதா துலிபாலா பான் இந்தியா ராணியாக வளம் வரும் புதிய போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இரண்டு பாகங்களாக வெளியான இந்த வரலாற்று புனைவு படத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையில், பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் வருகிறதா பாகுபலி..? நெட்பிளிக்ஸ் ஆவணத் தொடரால் வெடித்த புதிய எதிர்பார்ப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அந்த வரிசையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா, தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் தனது நுட்பமான நடிப்பு, அமைதியான முகபாவங்கள் மற்றும் வலுவான திரை முன்னிலை மூலம் கவனம் பெற்ற சோபிதா, அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நடிகையாக மாறினார்.
குறிப்பாக, வரலாற்று கதைக்களத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு பாராட்டுகள் கிடைத்தன.
ஆனால், அந்த படத்திற்குப் பிறகு அவர் தமிழ் திரையுலகில் புதிய திட்டங்களில் இதுவரை அதிகமாக இணைக்கப்படவில்லை.
இருப்பினும், பான் இந்தியா அளவில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார். தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் சர்வதேச அளவிலான திட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், பல்வேறு மொழி படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: எல்லாராலும் ராஷ்மிகா மந்தனாவாக முடியாதே..!! Bigg shot-யை வம்புக்கிழுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!