×
 

‘பெத்தி’ படத்தில் ராம் சரணுடன் இணையும் நடிகை சமந்தா..! ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடுவதாக தகவல்..!

நடிகை சமந்தா ‘பெத்தி’ படத்தில் ராம் சரணுடன் இணைந்து ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகில் தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்களில் ஒன்றாக திகழ்கிறது ‘பெத்தி’. புச்சி பாபு சன இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தில், தெலுங்குத் திரையுலகின் இளைய சூப்பர் ஸ்டார் ராம் சரண் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையான ஜான்வி கபூர் முதல் முறையாக தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார் என்பதாலும், இப்படத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்படி, ‘பெத்தி’ படத்தில் இடம் பெறும் ஒரு சிறப்பு பாடல் ஒன்றில், நடிகை சமந்தா நடனமாட உள்ளதாக ஒரு பெரிய சினிமா கிசுகிசு வெளியாகியுள்ளது. புஷ்பா படத்தில் வெளியான, 'ஊ சொல்ல்றியா' என்ற மாஸ் ஸ்பெஷல் பாடலின் மூலம், சமந்தா வெகு பெரிய அளவில் ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடலில் அவர் காட்டிய நடனமுறை, அழகு மற்றும் ஸ்டைல், அவரது படங்களிலேயே சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இப்படி இருக்க இப்போது, ராம் சரண் மற்றும் சமந்தா இணையும் புதிய பாடல் உருவாக இருப்பது என்றால், அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சாங் அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆக ராம் சரண் மற்றும் சமந்தா இணைந்து நடனமாடும் ஸ்பெஷல் பாடல் நவீன தொழில்நுட்பங்களுடன் சேர்த்த ஒரு மாஸ் பாடலாக இருக்கும். இந்த பாடலுக்கான நடன இயக்கம், இந்தியாவின் முன்னணி கொரியோகிராபர்களில் ஒருவரால் அமைக்கப்படுகிறது. சமந்தாவுடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், உத்தியோகப்பூர்வ ஒப்பந்தம் விரைவில் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. திட்டமிட்டபடி, படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்படும் போது, ‘ரங்கஸ்தலம்’ படத்திற்குப் பிறகு ராம் சரண் மற்றும் சமந்தா மீண்டும் ஒரு படத்தில் இணையும் வாய்ப்பு இது என்பதால், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். ரங்கஸ்தலத்தில் இருவரும் செம்ம கேமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தனர். 'பெத்தி' படத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது, ஏனெனில் இது புச்சி பாபு சனின் 'உப்பேனா' வெற்றிக்கு பின் இயக்கும் அடுத்த படமாகும். மேலும், படத்தில் கிராமிய பின்னணியில் மாபெரும் உணர்வுகளுடன் கூடிய ஒரு சமூகமே விரிவாகக் காணப்படும் என்றும், ராம் சரண் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'பெத்தி' திரைப்படம் 2026 மார்ச் 27-ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்லிம் லுக்கில் கலக்கும் நடிகை சமந்தா..! டயட் பற்றிய ரகசியங்களை சிதறவிட்ட "Neighbors".!

இப்படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமந்தாவின் ஸ்பெஷல் சாங் தகவல் வந்ததும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும், வியாபார ரீதியான மதிப்பீடும் பல மடங்கு உயர்ந்துள்ளது. சமந்தா தற்போது, திரைப்படங்களில் மட்டுமல்லாது, வலைத்தள தொடர்கள், ஆன்மீக பயணங்கள், யோகா பயிற்சி, சமூக ஊடகங்களின் மூலம், தனது புதிய பரிமாணங்களை பகிர்ந்து வருகிறார். புஷ்பா திரைப்படத்தில் இருந்த தனி ஸ்பெஷல் பாடலுக்குப் பிறகு, தற்போது ராம் சரணுடன் மீண்டும் இணைவது ஒரு தனி ஹைலைட்டாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இசை, கலை இயக்கம், வசனங்கள், வித்தியாசமான பாடல் டீசைனிங் என அனைத்தும் ஹை ஸ்டாண்டர்டில் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமந்தா ஏற்கனவே இந்த கம்பினேஷனில் புகழ் பெற்றவர் என்பதால், இந்த பாடல் கண்டிப்பாக வெறும் அழகுக்காக அல்ல, ஒரு எமோஷனலான இம்பேக்ட் கொண்டதாகவும் அமைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இது போன்ற ஹைபுடன் கூடிய அப்டேட்கள், தற்போது தயாராகி வரும் “பெத்தி” திரைப்படத்தைப் பற்றி மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கின்றன. ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகத்திற்குள்ளேயும் இந்த அப்டேட் ஒரு புதிய திருப்புமுனையைக் கொண்டு வந்திருக்கிறது.

இதையும் படிங்க: “மகாவதார் நரசிம்மா” படத்தை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்..! பல காட்சிகள் கண்ணீர் வர வைத்தது என புகழாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share