×
 

ஒரே ஹீரோ மூன்று ஹீரோயின்..! அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த மச்சக்காரி நடிகை..! 

அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தில் இணைந்துள்ளார் மச்சக்காரி நடிகை.

இதுவரை நான் தொட்டது ஒன்றும் வீணாக போனதில்லை என்று சொல்வதை போல் நான் உருவாக்கிய ஒரு படம் கூட தூவியில் முடிந்ததில்லை என்று காலரை உயர்த்தி சொல்லுவார் தான் இயக்குனர் அட்லீ. இதுவரை ஐந்து படங்களை எடுத்துள்ள இவரது படங்களை அனைத்து ஆயிரம் கோடிகளை கடந்து வசூல் செய்யும் படங்களாகவே இருக்கும். அந்த வகையில், இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் என பலப்படங்களை இயக்கி அசத்திய அட்லீ. தனது அடுத்த படத்தை எப்படி எடுப்பார், யாரை வைத்து எடுப்பார், எவ்வளவு கோடி பட்ஜெட்டில் எடுப்பார் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. 

இப்படி பலரும் ஆவலோடு காத்திருக்க தனது அடுத்த படத்தை சல்மான் கானை வைத்து எடுக்க இருப்பதாக முதலில் அட்லீ கூறிவந்த நிலையில், திடீரென புஷ்பா படத்தின் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுக்க இருப்பதாக கூறினார். மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா சோப்ரா என அனைவரும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

இதையும் படிங்க: அட்லீயை ரிஜெக்ட் செய்த தெலுங்கு தயாரிப்பாளர்கள்..! சம்பள விவகாரத்தில் வந்த வருத்தம்..!

அதன்படி, இயக்குனர் அட்லீயின் 6வது படமும் அல்லு அர்ஜுனின் 22வது படமுமான இப்படத்தை பிரபல சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்புக்கு மட்டுமே சுமார் 600 கோடி ரூபாய் தேவைப்படும் என்பதால் அந்த தொகையை வாரி கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் லண்டனில் LOLA VFXல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள முக்கிய நபர்கள் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு மிரண்டுபோயுள்ளனர் என்ற தகவலும் கிடைத்து இருந்தது. 

LOLA VFX அவெஞ்சர்ஸ், டெர்மினேட்டர், அவதார் போன்ற மாபெரும் படங்களுக்கு பணிபுரிந்துள்ளனர். LOLA VFXல் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் தங்களது படத்திற்காக முன் தயாரிப்பு பணிகள் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகளையும் இந்த அறிவிப்பு வீடியோவில் காட்சிகளாக காண்பிக்க, தற்பொழுது மக்கள் இந்த படத்தை காண ஆவலுடன் காத்து கொண்டு இருகின்றனர். 

இந்தநிலையில், இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இப்படத்தில் நடிக்க முதலில் கமிட்டாகி இருந்த நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் திடீரென நடிக்க மாட்டேன் என சொன்னதால் யாரை அடுத்த ஹீரோயினாக சேர்ப்பது என தெரியாமல் அட்லீ புலம்பி கொண்டு இருக்க தற்பொழுது மூன்று ஹீரோயின்களும் கிடைத்ததற்கான அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாகூர் ஆகிய இருவரும் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க தற்பொழுது மூன்றாவது ஹீரோயினாக அனன்யா பாண்டே களமிறங்கி இருக்கிறார் என்ற இனிப்பான தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: இத்தனை ஹீரோயின்களும் எனக்கா..! அல்லு அர்ஜூனுக்கு ஷாக் கொடுத்த அட்லீ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share