×
 

எனக்கு ஒரு முகம் இல்ல 100 முகம்.. தனது பயோபிக் படத்திற்கு பெயர் வைத்த சாய் பல்லவி..!

படம் எண்ணுது அதனால பேர நான் தான் வைப்பேன் என தனது பையோபிக் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார் சாய் பல்லவி.

மலையாளத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் 'சாய் பல்லவி' என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் தனியார் தொலைகாட்சி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தோல்வியை தழுவியவர் என்றாலும் இன்று இவரது நடனத்தையும் நடிப்பையும் பாராட்டத்தவர்கள் யாருமில்லை. இவை ஒருபக்கம் இருக்க, சாய் பல்லவி என்பதை விட இவரை புடவை பல்லவி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு போகும் இடம் எல்லாம் பாரம்பரியமாய் புடவையில் செல்வதால் அதற்கும் ரசிகர்கள் உண்டு.

இன்று பல படங்களில் நாயகியாக கலக்கி வரும் சாய்பல்லவி, ஒரு காலத்தில் நடன கலைஞர் தான். நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடைய இவர், தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். இதனை அடுத்து தனது முழு திறமையையும் வெளிக்காட்ட நினைத்த சாய்பல்லவி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன போட்டியில் பங்கேற்று தனது நடனத் திறமையை வெளிப்படுத்தினார். அடிப்படையில்  மருத்துவரான சாய் பல்லவி, நடன நிகழ்ச்சிக்கு பிறகு "பிரேமம்" இயக்குனரின் கண்களில் பட, அப்பிடத்தில் மலர் டீச்சர் ஆக நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதுவரை சாய்பல்லவி என்று இருந்த பெயரை மலர் டீச்சர் என மாற்றி ரசிகர்கள் பித்து பிடித்து அலைந்தனர். 

இதையும் படிங்க: சேட்டைக்காரி சாய் பல்லவியின் ரசிக்க வைக்கும் கேண்டிட் போட்டோஸ்!

இதனை அடுத்து, பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளில் நடித்து தற்பொழுது "பான் இந்தியா" நடிகையாக தனக்கென அந்தஸ்தை பெற்றுள்ளார். தற்பொழுது உள்ள நடிகைகள் "லேடி சூப்பர் ஸ்டார்" யார்..? என அடித்துக் கொண்டிருக்கும் வேளையிலும், தனக்கான ஜாக்பாட் அடித்து விட்டது என "தனி சூப்பர் ஸ்டாராக" வலம் வருகிறார் சாய் பல்லவி. இந்த சூழலில், அவர் நடித்த அமரன் திரைப்படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது. இதற்கிடையே கடந்த 2024ம் ஆண்டு நடிகை சாய்பல்லவியின் தங்கையான பூஜாவுக்கும், வினித் என்பவருக்கும் கோத்தகிரியில் படுகர் இன முறைப்படி திருமணம் நடந்தது. இதனை முன்னின்று நடத்தி வைத்த, சாய்பல்லவி திருமணத்தில் வந்தவர்களோடு சேர்ந்து ஆடிய நடனம் அப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக மாறியது.

இதனை அடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு வரை தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக மட்டுமே வைத்திருந்த நடிகை சாய்பல்லவி, 'அமரன்' படத்திற்குப் பின்பு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்த சாய்பல்லவி, தற்பொழுது பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அவர் சம்பளமாக ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பெற்று இருப்பதால் அதிக சம்பளம் வாக்கும் நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்து இருக்கிறார் சாய் பல்லவி.

இப்படி இருக்க, தற்பொழுது தனியார் சேனலுக்கு பேட்டியளிக்க வந்த சாய்ப்பல்லவியிடம், 'உங்களது ஃபையோபிக்  திரைப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலறித்த சாய்பல்லவி, " என்னுடைய ஃபையோபிக் படத்தை யாராகிலும் எடுத்துவிட்டு என்ன பெயர் வைக்கலாம் என என்னிடம் கேட்டால், கண்டிப்பா அதற்கு '50 SHADES OF PALLAVI' என்று தான் வைக்க சொல்வேன். காரணம், எனக்கு பல முகங்கள் உண்டு... நம்ம எல்லாரும் ஒவ்வொருத்தர் கூடவும் இருக்கும்பொழுது வேற வேற மாதிரி நடந்து கொள்வோம் இல்லையா, நானும் அப்படி தான்.

எனது வீட்டில் அப்பா அம்மாவுடன் இருக்கும் பொழுது ஒரு மாதிரி, வெளியில் ஃபிரண்ட்ஸ் கூட இருக்கும்போது ஒரு மாதிரி, இண்டஸ்ட்ரில ஒரு மாதிரி, சூட்டிங் செட்டில் ஒரு மாதிரி, என இடத்துக்கு ஏற்றார் போல் என்னை நான் மாற்றி கொள்வேன். அதனால் தான் '50 SHADES OF PALLAVI' என்ற பெயர் எனது ஃபயோபிக் படத்திற்கு சரியானதாக இருக்கும் என்று சொல்லுகிறேன்" என கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சித்தப்பு நீங்க எங்க இங்க.. தளபதியின் தவெக கட்சியில் ஆக்ஷன் கிங்..! சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share