பாகிஸ்தானுக்கு ஆதரவாக ட்வீட்.. டெலிட் செய்து எஸ்கேப் ஆன ஏ.ஆர்.ரகுமான்..!
பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இருந்த ட்வீட்டை டெலீட் செய்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
காஷ்மீரில் ஏப்ரல் 22ம் தேதி பாக்கிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 26 பேரை கொடூரமாக சுட்டு கொன்றது. இதில் திருமணமாகி ஹனிமூனுக்கு வந்த ராணுவ கடற்படை வீரரும் சுட்டு கொல்லப்பட்டதால் இது ராணுவத்தின் கௌவ்ரவ பிரச்சனையாக மாறியது. இதனால் பயந்து போன பாக்கிஸ்தான் அரசாங்கம், இங்க பாருங்க இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, நீங்க அடிச்சா நாங்களும் திருப்பி அடிப்போம் என பயத்தில் பிதற்றிக்கொண்டு இருக்க, இந்தியா எதையும் காதில் வாங்காமல் முப்படைகளையும் தயார் நிலைக்கு கொண்டு வந்தது.
இதனை பார்த்து பயந்து போன பாகிஸ்தான் ராணுவம், தங்களது பலத்தை காண்பித்து அமைதியாக்கி விடலாம் என நினைத்து, போருக்கான ஒத்திகை என ஆயுதங்கள் அடங்கிய காட்சிகளை வெளியிட, இந்தியாவும் தங்களது ராணுவ பலத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டது. இதில் முன்பாக வீடியோவை காண்பித்து கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், பின்பாக தீவிரவாத அமைப்புகளுக்கு புள்ளி வைத்து வந்தது பாக்கிஸ்தான் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரியவில்லை.
இதையும் படிங்க: 'வீரா ராஜ வீரா' பாடலுக்கான மெட்டுக்களை எடுக்க இதுதான் காரணம்..! ஏ.ஆர் ரகுமான் தரப்பு விளக்கம்..!
பாகிஸ்தானை முன்பாக ஆடவிட்டு பின்பு ஆட்டம் காட்ட நினைத்த இந்தியா, தான் உறுதிப்படுத்திய 9 பயங்கரவாத அமைப்பின் இடங்களையும் குறிவைத்தது. பின் எப்படி தாக்குதல் நடத்தலாம் தரைவழியாக நடத்தலாமா அல்லது வான்வழி தாக்குதல் நடத்தலாமா. 200 கிலோமீட்டர் தூரம், இந்தியாவிலிருந்து எப்படி என அனைத்தையும் யோசித்து முடிவு செய்த பின்னர் ராணுவ அதிகாரிகள் நள்ளிரவு நேரத்தில் பிரதமரை சந்தித்து "இந்தியாவில் இருந்தபடியே ட்ரோன் வழி தாக்குதல் நடத்தி அழிக்கலாம்" என சொல்ல, பிரதமர் மோடியும் ஒப்புதல் அளித்து கையெழுத்து போட, அதன் பின் ராணுவ வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின் தாக்குதல் 1.44 மணியளவில் அரங்கேற்றப்பட்டது. இந்த தாக்குதலை துல்லியமாக கணக்கிட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கும் பாக்கிஸ்தான் ராணுவ தலங்களுக்கும் எந்த சேதமும் இல்லாமல் தீவிரவாத அமைப்புகளை மட்டுமே குறிவைத்து அளித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று பல திரை பிரபலங்கள் தங்களது பாராட்டுகளை இந்திய ராணுவத்திற்கு தெரிவித்து வந்தனர். நடிகர் சிவகார்த்திகேயன், மம்முட்டி, மோகன்லால், கங்கனா, பிரகாஷ் ராஜ், NTR, அல்லு அர்ஜுன், இளையராஜா, விஜய் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை அள்ளித்தெளித்து வந்தனர். இவர்களை தொடர்ந்து நேற்று, தனது எக்ஸ் தளத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒருபதிவை போட்டார். அதில் "அகிம்சையை விரும்பும் வகையில், வெள்ளைப்புறா பறக்கும் எமோஜியை பதிவிட்டு தன்னுடைய கருத்தை மறைமுகமாக தெரிவித்து இருந்தார்". இந்த பதிவு பலரது கவனத்திற்கும் எட்ட, ரகுமான் வெள்ளை நிறத்தை காண்பித்து சமாதானமாக சொல்கிறார் என பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த சூழலில், ரகுமான் தான் போட்ட பதிவை டெலிட் செய்து இருப்பதால் அவரது ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர். உண் மையில் அவர் போட்ட பதிவில் என்ன தவறு உள்ளது டெலிட் செய்யும் அளவிற்கு. அவரே டெலிட் செய்தாரா..? அல்லது அரசியல் தலையீடுகளால் டெலிட் செய்யப்பட்டதா என அனைவரும் சந்தேகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழுக்காக சின்னம் உருவாக்கிய இசைப்புயல்..! டிஜிட்டல் படம் விரைவில் கட்டிடமாக மாறும் - ஏ.ஆர்.ரஹ்மான் நம்பிக்கை..!