×
 

போதை வழக்கில் அடுத்த செக் அருண்விஜய்-க்கா..! உஷாராக அவர் செய்த வேலையை பாருங்க..!

போதை பொருள் வழக்கை குறித்து நடிகர் அருண்விஜய் கூறியதை பாருங்கள்.

நாளுக்கு நாள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க போதை பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இப்படி இருக்க பிள்ளைகளை பெற்றவர்கள் இதற்கு என்ன செய்வது என தெரியாமல் அரசாங்கத்தின் உதவியை நாடி வருகின்றனர். மேலும் வீட்டுக்கு அடங்காத பிள்ளைகளை ஊரில் இருப்பவர்கள் தான் அடுக்குவார்கள் என்பது போல தான் தற்பொழுது வீட்டில் சொல்பேச்சு கேளாமல் போதைப்பொருளுக்கு அடிமையாகி சுற்றும் இளசுகளின் பெண்டை நிமிற்றி வருகின்றனர் காவல் துறையினர். 

இப்படி பிரபலமே இல்லாத மனிதர்களுக்கே சட்டம் கடுமையாக இருந்தால் பிரபலங்களுக்கு எவ்வளவு கடுமையான சட்டம் இருக்கும். அந்த வகையில் தற்பொழுது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி தவித்து வருகிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அந்த வகையில், அதிமுக பிரமுகரான பிரசாந்த் என்பவர் ஒரு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட, அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பிரசாந்த் தன்னிடம் இருந்து நடிகர் ஸ்ரீ காந்த் போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்தார் என வாக்குமூலம் கொடுக்க, தனது விசாரணை வளையத்தில் அவரையும் கொண்டுவந்தனர் காவல் துறையினர். 

இதையும் படிங்க: அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!

இதனை அடுத்து பிரசாந்த் கூறியதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பொழுது பேசிய ஸ்ரீகாந்த், " அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதானதற்கு முன்புதான் அவரிடம் 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன், பின்னர் அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன். எனக்கு அதிமுக பிரமுகரான பிரசாத்தை மட்டுமே தெரியும். அவர் என்னை வைத்து படம் தயாரித்து இருக்கிறார். ஆனால் அவர் தயாரிப்பில் வெளியான படத்திற்கு எனக்கு தர வேண்டிய ரூ.10 லட்சத்தை அவர் தராமல் இருந்தார். அதனை குறித்து அவரிடம் கேட்டபோது, கொக்கைன் கொடுத்து என்னை பழக வைத்தார். பின்பு அவரிடம் நான் பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தினார்" என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்ட நிலையில் போலீசார் இந்த வழக்கில் அவரது பெயரையும் லிஸ்டில் சேர்த்தனர். அவரிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர், " நீங்கள் சொல்வதைப் போல நடிகர் ஸ்ரீகாந்த் எனக்கு நெருங்கிய நண்பர்தான் அதை நான் ஒரு பொழுதும் மறுக்க மாட்டேன். ஆனால் நான் எதற்காக போதை பொருளை பயன்படுத்த வேண்டும். எனக்கு ஏற்கனவே இரைப்பை அலர்ஜி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதயத்துடிப்பும் எனக்கு அதிகமாக இருப்பதால் தற்பொழுது அதற்கான சிகிச்சை மட்டுமே நான் மேற்கொண்டு வருகிறேன். இவ்வளவு குறைபாடுகள் உள்ள என்னால் போதை பொருளை பயன்படுத்த முடியாது என தெரிவித்தார். மேலும் பிரசாந்திடம் போதை பொருளை நான் வாங்கினேன் எனக் கூறிய பிரதீப்பின் வாக்குமூலம் அனைத்தும் பொய்யே. 

பிரதிப்பிடம் எனக்கு எந்த விதமான நட்பும் இல்லை தொடர்புமில்லை அதை நான் திட்டவட்டமாக சொல்லுகிறேன். அதுமட்டுமல்லாமல் முதலில் நீங்கள் தேடுகின்ற கிருஷ்ணா நானே கிடையாது. நீங்கள் முதலில் அதை விசாரித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் அவரது தொலைபேசியை கைப்பற்றிய போலீசார், அதில் ரகசிய மொழியில் ஏதோ கோர்டு வேர்டு சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் பல சினிமா பிரபலங்கள் பெயர் அடிபட்ட தொடங்கி உள்ளது. அந்த வகையில், போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் சிக்குவது குறித்து நடிகர் அருண் விஜய்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அருண்விஜய், " நோ கமெண்ட்ஸ்.. நான் இங்கே என் பட நிகழ்ச்சிக்கு தான் வந்திருக்கிறேன்.. இதை பற்றி பேசுவதற்கு அல்ல" என கூறி பதில் அளிக்காமல் மழுப்பி சென்றுவிட்டார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன அருண்விஜய் சார் இப்படி ஜகாவாங்கி போறிங்க உங்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என பதிவிட்டு வருகின்றனர்.  

இதையும் படிங்க: இனி ராஷ்மிகாவை கையில் பிடிக்க முடியாது..! மந்தனாவின் திணறடிக்கும் போஸ்டர் வைரல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share