தனது இரண்டு அழகு தேவதைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகன் கன்னிகா தம்பதி..!
முதன் முதலாக தனது இரண்டு அழகு தேவதைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகன்.
தமிழ் திரையுலகில் திருமணம் ஆன அடுத்த சில நாட்களில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து அவர்கள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருபவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர். இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான சினேகன் மற்றும் அவரது காதல் மனைவியான கன்னிகாவிற்கும் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் இரட்டை குழந்தை பிறந்து அனைவரது ஆசிர்வாதத்தையும் அன்பையும் பெற்று உள்ளனர்.
இப்படி இருக்க, அரசியல், கதை, கதாநாயகன், பாடலாசிரியர் என பல பரிமாணங்களை தன்னுள் அடக்கி வைத்திருபவர் கவிஞர் சினேகன். இவர் தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு "புத்தம் புது பூவே" என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக களமிறங்கினார். பின்னர் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்த "பாண்டவர் பூமி" படத்தில் வந்த "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், தோழா தோழா அழகிய தோழா" ஆகிய பாடல்களை எழுதி பலரது கவனத்தையும் பெற்றார். மேலும், "மௌனம் பேசியதே" திரைப்படத்தில் ஆடாத ஆட்டமெல்லாம் என்ற பாடலை எழுதி அசத்தி இருப்பார்.
இதையும் படிங்க: சட்டம் தன் கடமையை செய்யும்.. பாடகி கெனிஷா வெளியிட்ட பகீர் அறிக்கை..! சரண்டரான நெட்டிசன்கள்..!
அடுத்து விக்ரமின் 'சாமி' திரைப்படத்தில் வந்த கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா என்ற பாடலையும், சேரன் இயக்கி நடித்த 'ஆட்டோகிராப்' படத்தில் ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே, நடிகர் ஜீவா நடிப்பில் தாய் பாசத்தை போற்றும் வகையில் உருவான 'ராம்' திரைப்படத்தில் ஆராரிராரோ, நடிகர் தனுஷின் ஹிட் படமான 'ஆடுகளம்' படத்தில் 'உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தங்களா' என்ற யாத்தே பாடல் என பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
இப்படி பல பாடல்களின் வரிகளுக்கு சொந்தக்காரரான சினேகன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது மனதையும் வென்றார். அந்த நிகழ்ச்சிக்கு பின் தனது நீண்டநாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார். கடந்த ஆண்டு தன்னுடைய காதல் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியாக குறிப்பிட்டு இருந்தார் .
இதனை தொடர்ந்து, கன்னிகாவின் வளைகாப்பு, நாட்கள் செல்ல கன்னிகாவின் ஆரோக்கியத்தில் சினேகன் எடுத்த முயற்சி என பல நிகழ்வுகள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகி, சினேகன் கன்னிகாவுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க, ரசிகர்கள் கடவுளை வேண்டும் அளவிற்கு மாறியது.
இந்த சூழலில், பலரது வேண்டுதலுக்கு பலனாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அழகான இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார் கன்னிகா. இரு பெண் குழந்தைகளுக்கு தன்னை தகப்பனாக்கிய கன்னிகாவிற்கு "ஐபோனை" பரிசளித்தார் அவரது கணவர் சினேகன். இந்தநிலையில் நீண்ட நாட்களாக தனது குழந்தைகளின் முகத்தை மக்களுக்கு காண்பிக்காமல் மூடிமறைத்து வைத்திருந்த சினேகன் கன்னிகா தம்பதியினர் இன்று அவர்களது இருதேவதைகளின் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அழகிய தேவதைகளுக்கு நிறைய கண்திருஷ்டி விழுந்திருப்பதால் சுத்திப்போட வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சூர்யாவின் "ரெட்ரோ" ஓடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம்...! அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட படக்குழு..!