சினிமா-ன்னா என்னனு தெரியுமா..! தனது பேச்சில் மெய்மறக்க செய்த இயக்குநர் மிஷ்கின்..!
இயக்குநர் மிஷ்கின் தனது பேச்சில் மெய்மறக்க செய்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் புதிய படைப்புச் சிந்தனையுடன் உருவாகி வரும் திரைப்படம் “மைலாஞ்சி” தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில், திறமையான இயக்குநர் அஜயன் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், இளம் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
“மைலாஞ்சி” திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க, தமிழ்ச் சினிமாவின் உயிரான இசை மாமேதை இளையராஜா இணைந்திருப்பது இப்படத்தின் முக்கிய அம்சமாகும். இளையராஜா இசையமைப்பது மட்டுமல்லாமல், பாடல்களையும் அவர் தானே எழுதியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி. இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் மிகுந்த விமர்சனத்துடன் நடைபெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சினிமா கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும், இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவரது பேச்சு அனைவரின் இதயத்தையும் தொடுவதாக அமைந்தது. அவரது பேச்சு சினிமா பற்றிய ஒரு வாழ்க்கைச் சிந்தனை போன்று இருந்தது.
அதன்படி மிஷ்கின் பேசுகையில், “இயக்குநர் அஜயன் பாலா ஒரு பேரன்பு மிக்கவர். அவர் எப்போதும் சினிமா குறித்து ஆரோக்கியமான விவாதங்களை முன் வைப்பவர். சினிமா என்பது வெறும் தொழில் அல்ல, அது ஒரு ஆன்மீக அனுபவம். நான் சினிமாவில் இன்று இருக்கும் நிலைக்கு வந்ததற்கு அஜயன் பாலாவும் காரணமாக இருந்தார். மேலும் அஜயன் பாலா போன்ற இயக்குநர்கள் மிகவும் குறைவு. உண்மையில், என்னை விடவும், வெற்றிமாறனை விடவும் முன்னதாக அவர் இயக்குநராகி இருக்க வேண்டும். அவரிடம் உள்ள சிந்தனை, கலைக்கான அக்கறை, சமூக உணர்வு அனைத்தும் அதிசயமாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், அதில் இளையராஜா இசையமைப்பதாகும். அவர் பாடல்களை நான் கேட்டேன், பார்வையிட்டேன். ஒவ்வொரு இசைத் துளியிலும் ஒரு உயிர் இருக்கிறது. சினிமா என்பது இசையில்லாமல் முழுமையடையாது; அந்த உயிரை அளிப்பவர் இளையராஜா போன்ற இசைஞர்கள் தான். அத்துடன் சினிமா துறை போல் நட்பை போற்றும் மற்றொரு துறை இல்லை. சினிமா என்பது மிகப்பெரிய நட்பு சமுத்திரம்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் அடுத்த ஸ்டார் இவர் தான்..! எழுதி வச்சிக்கோங்க.. அஸுரன்ஸ் கொடுத்த இயக்குநர் மிஷ்கின்..!
ஒரு கலைஞன் தன் அனுபவத்தை, தன் சிந்தனையை சமூகத்துடன் பகிர்வது தான் ஒரு படைப்பாளியின் நோக்கம். நாம் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட விஷயத்தை மக்களிடம் திருப்பித் தரவேண்டும். அதுதான் ஒரு தயாரிப்பாளரின் உண்மையான கனவு. சினிமா எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகானது. நட்பு தான் அதன் அடித்தளம். இப்படி இருக்க நல்ல படங்கள் ஒரு சமூகத்திற்குத் தெரபி போன்றவை. சமூகத்தின் துன்பங்கள், அவலங்கள், அச்சங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு அதை கலை வடிவத்தில் வெளிப்படுத்தும் இயக்குநர்கள் தான் உண்மையான தெரபிஸ்ட்கள். ஆனால், சமூகத்திற்காக சிந்திக்கும் இப்படைப்பாளிகள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சினிமா ஒரு மக்களின் மனநலம் சிகிச்சை மையம் போன்றது. அது சிரிக்கவும் சிந்திக்கவும், உணர்வதற்கும் கற்றுக்கொடுக்கிறது. ஒரு சிறந்த திரைப்படம் உருவாகும் முன் மூன்று சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் – தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள். இந்த மூவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சமமாக இருந்தால் தான் ஒரு சிறந்த படைப்பு உருவாகும். இதில் எவரேனும் ஒருவர் பலவீனப்படுத்தப்பட்டால் படம் பாதிக்கப்படும்.
அதேபோல் எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவு மாதிரி இருந்தது. ஆனால் இன்றைய தலைமுறை அதிக வாய்ப்புகளுடன் வருகிறது. அவர்கள் ஒரு மூன்று படங்களுக்கான திட்டமிடலுடன் வரவேண்டும். முதல் படம் அனுபவத்தை அளிக்கும். இரண்டாவது படம் தோல்வியைத் தவிர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும். மூன்றாவது படம் தான் உண்மையான வெற்றியைப் பெறுவதற்கான அனுபவத்தை வழங்கும். இது என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து வந்த கணிப்பு” என்றார். இப்படி இருக்க இயக்குநர் அஜயன் பாலா தற்போது சினிமா ரசிகர்களிடையே கலை உணர்வுடன் கூடிய படைப்பாளியாக பார்க்கப்படுகிறார். அவரது முன்னைய படைப்புகள் சமூக விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் இருந்தன. இந்த நிலையில் “மைலாஞ்சி” திரைப்படம் காதல், உணர்ச்சி, இசை, சமூகப் பின்னணி ஆகிய அனைத்தையும் இணைத்து ஒரு கலைப்படைப்பாக உருவாகி வருகிறது என்று இயக்குநர் கூறியுள்ளார். இளையராஜா இசையமைக்கும் பாடல்கள் வெளியாவதற்கே ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இப்படி இருக்க இந்த விழாவில் நடிகர்கள் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை, தயாரிப்பாளர் டாக்டர் அர்ஜுன், இயக்குநர் அஜயன் பாலா, இசை குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் டீசர் திரையிடப்பட்டது. அதில் காட்சிகள், பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு தரம் அனைவரையும் கவர்ந்தது. இளையராஜா இசையமைத்துள்ளதால், “மைலாஞ்சி” திரைப்படம் இசை ரீதியாக ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஸ்ரீராம் கார்த்திக்கின் நடிப்புத் திறன், க்ருஷா குரூப்பின் திரைப் பங்களிப்பு மற்றும் அஜயன் பாலாவின் கதை சொல்லும் பாணி அனைத்தும் சேர்ந்து ஒரு உணர்ச்சி பூர்வமான படைப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே இயக்குநர் மிஷ்கின் பேச்சு, சினிமாவை ஒரு சாதாரண தொழிலாக அல்லாமல், ஒரு சமூகப் பொறுப்பாகப் பார்க்கச் செய்தது. அவரது “சினிமா என்பது நட்பு சமுத்திரம்” என்ற வாக்கியம் நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தியது. எனவே “மைலாஞ்சி” திரைப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த படத்தின் இசை மற்றும் காட்சிகள் ரசிகர்களிடையே ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் பதவி வேண்டாம்...சினிமாவே போதும்...வருமானம் இல்லைங்க - நடிகர் சுரேஷ் கோபி பேச்சு..!