1000 கோடி பட்ஜெட் நடிகை ராஷ்மிகாவா..! சொல்லவே கூச்சமா இருக்கு.. தனுஷ் பேச்சுக்கு ஹீரோயின் ரியாக்ஷன்..!
குபேரா ட்ரெய்லர் விழாவில் நடிகர் தனுஷ் பேசிய வார்த்தைகள் இணையத்தில் வைரல்.
தற்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கும் அனைத்து திரைப்படங்களும் தோல்வியிலேயே முடிந்து வரும் நிலையில் வருகிற ஜூன் 20-ம் தேதி நடிகர் தனுஷின் 'குபேரா' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் திரைப்படத்திற்கான பலகட்ட பிரமோஷன்கள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் தமிழில் பேசி அனைவரையும் ஆரவாரப்படுத்தினார். மேலும் தனக்கு ஹிந்தி தெரியாது ஆதலால் தனக்குத் தெரிந்த மொழியிலேயே நான் பேசுகிறேன் என்று சொல்லி பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். தற்பொழுது பல படங்கள் தோல்வி அடைந்திருக்கும் இந்த வேலையில் நடிகர் தனுஷின் 'குபேரா' திரைப்படம் எத்தனை நாட்கள் ஓடும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: ஒன்னில்ல ரெண்டில்ல 1600 தியேட்டரில் தனுஷ் படம்.. தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் தகவல்..!
மேலும், இந்த குபேரா திரைப்படத்தை குறித்து பார்த்தால், பல அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் முதல் மிகப்பெரிய பணக்காரர்களினுடைய கருப்பு பணங்களை அக்கவுண்டன்ட் ஆன நாகர்ஜுனா ஒயிட் மணியாக்க, பாடுபட்டு வருவார் அதற்காக தெரு ஓரங்களில் இருக்கும் பிச்சைக்காரர்கள் முதல் ஏழையான தனுஷ் வரை பலரது பெயரில் ஸ்விஸ் பேங்கில் அக்கவுண்ட் ஓபன் செய்து கருப்பு பணங்களை எல்லாம் புழக்கத்தில் கொண்டு வருவார். இப்படியாக நாகார்ஜுனா செய்யும் தில்லுமுல்லு வேலைகளை அருகில் இருந்து கற்றுக் கொள்ளும் நடிகர் தனுஷ், அதே தொழிலை பல பணக்காரர்களிடம் செய்வதால் நாகர்ஜுனாவுக்கும் அவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிகழ்கிறது. இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதையே படமாக வைத்திருக்கின்றனர்.
இப்படி இருக்க, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற தனுஷின் குபேரா படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ராஜமௌலி, தனுஷை பற்றியும் குபேரா படத்தில் நடித்த நாகார்ஜுனா, ராஷ்மிகா முதலானவர்களை குறித்தும் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசிச் சென்றார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ், " தற்பொழுது உள்ள சினிமாவில் யாரும் திறமைகளை பார்ப்பதில்லை பாக்ஸ் ஆபிஸில் வரும் நம்பர்களை மட்டுமே அதிகமாக பார்க்கின்றனர். ஆனால் இதில் மிகவும் வித்தியாசமானவர் தான் இயக்குனர் சேகர் கம்முலா, அனைவரும் நம்பர்கள் பின்பு ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர் மட்டும் பட்டாம்பூச்சிகளுக்கு பின்னாடி ஓடிக் கொண்டிருக்கிறார். தனக்கு தேவையான விஷயம் வரும் வரை பொறுமையாக காத்திருந்து அதில் உறுதியாக இருந்த அவர் இந்த படத்தை அழகாக முடித்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ஒரு சிலர் கூறுகிறார்கள் நடிகை ராஷ்மிகா மந்தனா 1000 கோடி ஹீரோயின் 2000 கோடி ஹீரோயின் என்றெல்லாம் சொல்லுகின்றனர். ஆனால் இப்பொழுது நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் அதை அனைத்தையும் நீங்கள் மறந்து விடுங்கள். ஒவ்வொரு படத்திற்கும் ராஷ்மிகா போடும் உழைப்பு என்பது அதிகமாகவே இருக்கிறது. அதேபோலத்தான் இந்த குபேரா படத்திலும் தனது முழுத் திறமையும் அவர் காண்பித்து இருக்கிறார். ஆதலால் நம் உழைப்பு என்பது நம்மிடம் அதிகம் இருக்கும் பொழுது அதற்குண்டான அதிர்ஷ்டம் நம்மை தேடி தானாகவே வந்துவிடும் என அவர் கூற ராஷ்மிகா உணர்ச்சி பொங்க செய்த செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
தொடர்ந்து பேசிய தனுஷ், எனது சிறு வயதில் இருந்தே பத்திரிகைகளில் நான் படிக்கும் பொழுதெல்லாம் தோட்டா தரணி என்ற பெயரை அதிகமாக பார்த்திருக்கிறேன். ஆனால் அப்பொழுது எல்லாம் அவர் துப்பாக்கிக்கு தோட்டா செய்பவர் என்றுதான் நினைத்து இருக்கிறேன். ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது அவர் எவ்வளவு பெரிய லெஜெண்ட் என்று. அவருடன் பணியாற்றும் அனுபவம் கிடைத்ததை நினைத்து நான் மிகவும் கர்வம் கொள்கிறேன். மேலும் இந்த படத்தில் என்னுடன் ராஷ்மிகா, நாகார்ஜுனா சார் எல்லாம் பட்ட கஷ்டத்தை விட தோட்டா தரணி, இயக்குனர் சேகர் கம்முல்லா,
ஸ்ரீதேவி பிரசாத் மற்றும் உதவி இயக்குனர்கள் என அனைவரும் பட்ட கஷ்டங்கள் தான் அதிகம். அவர்களையெல்லாம் நினைத்தால் நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று கூற எனக்கு கூச்சமாக இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்களை நானே இந்த நிகழ்ச்சியில் தான் பார்க்கிறேன். அவர்களைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் பட குழுவின் ஒட்டுமொத்த உழைப்பும் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் மக்கள் ரியாக்ஷனிலும் திரையிலும் தான் தெரியும்" என்றார்.
இதனைப் பார்த்த மக்கள் படம் வெளியாவதற்கு முன்பாக என் படம் இத்தனை கோடி பட்ஜெட், படத்தை பார்க்க பயங்கரமாக இருக்கும் என்று சொல்பவர்கள் மத்தியில் படம் திரையில் வெளியானால் மட்டுமே தான் எங்களுடைய உழைப்பு என்ன என்பது தெரியும் என்று தனுஷ் சிம்பிளாக பேசி சென்று இருப்பது பலரது பாராட்டியும் பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: குபேரா படத்தின் கதை லீக் ஆனதால் டென்க்ஷனில் படக்குழு..! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி..!