இரண்டு ரிலேஷன்ஷிப்பில் கயாடு லோஹர்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
நடிகை கயாடு லோஹர் இரண்டு ரிலேஷன்ஷிப்பில் உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டிராகன் திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றதுடன் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனும் தற்பொழுது நிறைய படங்களில் நடிக்கிறார்.
குறிப்பாக இவர் நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சமந்தாவும் கெஸ்ட் ரோலில் அவருடன் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குநரும் அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்குவதில் பிசியாக இருக்கிறார். இப்படி பலரது வாழக்கையை மாற்றிய இப்படத்தின் முக்கிய கதாநாயகியான "கயாடு லோஹரின்" வாழ்க்கையையும் இப்படம் மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது.
இதுவரை அவரது எக்ஸ் தளத்தில் அவர் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு நன்றி, புது படங்களில் நடிக்கிறேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார். அதில் முதலாவதாக அவர் பதிவிட்ட பதிவில், "எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. தனக்கும் டிராகன் படத்திற்கும் அதில் வரும் பல்லவி கதாபாத்திரத்தீர்க்கும் கிடைக்கும் வரவேற்பு இதுவரை எங்கும் கிடைக்காத ஒன்று.
இதையும் படிங்க: ஆஃப் செஞ்சுரி அடித்த டிராகன் திரைப்படம்.. போஸ்ட் போட்டு மகிழ்ந்த தயாரிப்பு நிறுவனம்..!
இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் எனக்கு அடிக்கும் விசிலாகட்டும். இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணும் இல்லை. எனக்கு தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி உங்களுக்கு தருவேன்" என கூறி இருந்தார்.
பின்னர் அமைதியாக இருந்த கயாடு தனது அடுத்த பதிவை பதிவிட்டார் அதில் ஓருபடி மேலாக சென்று, "முதலில் ஜூம் கால் மூலமாக 'அஷ்வத் மாரிமுத்து' எனக்கு கதை சொல்லும்போது "கீர்த்தி" என்ற ரோலுக்காக தான் பேசியிருந்தார். இப்படி ஒரு படத்தில் நடிக்க போகிறேன் என்று மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் அதன் பிறகு அஷ்வத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதால் சோர்ந்து போனேன். அதுமட்டுமல்லாமல் படம் என் கையை விட்டு போய்விட்டது என நினைத்தேன். ஆனால் ஒரு மாதம் கழித்து திடீரென என்னை அழைத்த அஷ்வத் "பல்லவி" என்ற புதிய ரோல் பற்றி கூறினார்.
இது இரண்டு ஹீரோயின் உள்ள கதை என யோசிக்கவேண்டாம், கண்டிப்பாக படம் வெளியாகும் பொழுது மக்களுக்கு உன்னை பிடிக்கும். அந்த வகையில் தான் உன்னை காட்டுவேன் என கூறினார். சரி, என அஷ்வத் வார்த்தையை நம்பி நடிக்க ஒப்புக்கொண்டேன். அவர் சொன்ன மாறியே என்னை மக்களுக்கு பிடிக்க வைத்திருக்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றியதற்கு நன்றி அஷ்வத் மாரிமுத்து. எனக்கு சிறந்த ஒரு அறிமுக படத்தை கொடுத்தீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
மேலும், பிரதீப் மாதிரி உண்மையான நண்பரை வாழ்க்கையில் பார்க்க முடியாது. உங்கள் இயக்கத்தில் நடிக்க மீண்டும் காத்திருக்கிறேன் எனவும் தற்போது டிராகன் படம் தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது. என்னை நடிக்க வைத்து தமிழ் மக்களின் அன்பை பெற்று கொடுத்து வசமாக சிக்க வைத்து விட்டார் அஷ்வத் மாரிமுத்து, கண்டிப்பாக உங்கள் அன்புக்கு பிரதிபலனாக படங்களில் நடிப்பேன்" என பதிவிட்டு மீண்டும் அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இப்படி இருக்க, டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதில், கயாடு லோஹரும் ஒருவர். இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறத. தமிழில் நடிக்கும் 2ஆவது படமே பெரிய ஸ்டார் மற்றும் பெரிய பட்ஜெட் படம் என பலராலும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகை கயாடு லோஹரிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில் ரிலேஷன்ஷிப் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கயாடு, " முன்பு போல காலங்கள் இப்பொழுது இல்லை காலம் மாறிக்கொண்டு வருகிறது. அதில் இன்றைய தலைமுறை நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் புதுப்புது அர்த்தங்களை கண்டுபிடித்து வருகிறார்கள்.
நான் சொல்வது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மை எனக்கு தெரிந்து 'ஷிப்' என்றால் கப்பல் தான். நீங்கள் கூறுவது போல் இப்போது ரிலேஷன்ஷிப், சிச்சுவேஷன்ஷிப் என பல 'ஷிப்'கள் வந்துவிட்டன. நீங்கள் நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் கிடையாது. நான் ரொம்ப நல்ல பொண்ணு. ஆதலால் நான் இப்பொது எந்த ஒரு ஷிப்பிலும் இல்லை. அவ்வளவு சீக்கிரமாக எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டேன்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் சிம்புவின் "STR 49" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!