×
 

சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காதுலே..! போதை பொருள் வழக்கில் ஷாக் கொடுத்த கிருஷ்ணாவின் மெடிக்கல் ரிப்போர்ட்..!

போதை பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

என்னதான் நடக்கிறது சினிமா உலகில் என அனைவரும் வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு தற்பொழுது போதைப் பொருள் விவகாரம் சூடு பிடித்திருக்கிறது என்றே கூறலாம். ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் வழக்கில் கைதானது நம் அனைவருக்கும் தெரியும். அவரை தொடர்ந்து அந்த வழக்குகள் பல பிரபலங்களும் சிக்கினர். ஆனால் இதனை கண்ட மக்கள் மக்களுக்கு விழிப்புணர்வை கற்றுக் கொடுக்கின்ற முக்கியமான இடத்தில் இருக்கக்கூடிய நடிகர்களே போதைப் பொருளுக்கு அடிமையானால் சிறுசுகளுக்கு யார் புத்திமதிகளை சொல்வார்கள் என புலம்பி வருகின்றனர்.

இப்படி இருக்க சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருளை தன்னிடம் வாங்கி பயன்படுத்தியதாக அதிமுக பிரமுகரான பிரசாந்த் தெரிவிக்கையில் அதிரடியாக போலீசார் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர் காவல்துறையினர். மேலும் போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்ட நிலையில் போலீசார் இந்த வழக்கில் அவரது பெயரையும் லிஸ்டில் சேர்த்தனர்.

இதையும் படிங்க: #BREAKING நடிகர் கிருஷ்ணா வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீஸ் படை.. 2 மணி நேரமாக நீளும் தேடுதல் வேட்டை...!

பிரபல திரைப்பட இயக்குனரான விஷ்ணுவர்தனின் சகோதரன் தான் நடிகர் கிருஷ்ணா. இந்த போதைப் பொருள் வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் படப்பிடிப்பிற்காக கேரளாவுக்கு சென்று இருப்பதாக குடும்பத்தினர் கூற, அவர்களிடமே அந்த சம்மனை ஒப்படைத்து சென்றனர் காவல்துறையினர். மேலும் அவரது தொலைபேசி தொடர்ந்து சுவிட்ச் ஆஃபில் இருப்பதால் அவர் தலைமறைவாக வாய்ப்பு இருக்கிறது எனக்கு கருதிய காவல்துறையினர் உடனடியாக ஐந்து தனி படைகளை அமைத்து கேரளாவிற்கு சென்று அவரை தேடி வந்தனர். 

இதனை அடுத்து காவல்துறையினர் தன்னை தேடி வருவதை அறிந்து கொண்ட கிருஷ்ணா, தான் தவறு செய்தால் தானே தலைமறைவாக வேண்டும் நான் படப்பிடிப்பில் தானே இருக்கிறேன் என்று சொல்லி அவரே நேற்று காவல்துறையினரிடம் நேரடியாக ஆஜரானார். இதனை தொடர்ந்து கிருஷ்ணாவை கைது செய்த சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர்.

இந்த சூழலில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் கிருஷ்ணா, நீங்கள் சொல்வதைப் போல நடிகர் ஸ்ரீகாந்த் எனக்கு நெருங்கிய நண்பர்தான் அதை நான் ஒரு பொழுதும் மறுக்க மாட்டேன். ஆனால் நான் எதற்காக போதை பொருளை பயன்படுத்த வேண்டும். எனக்கு ஏற்கனவே இரைப்பை அலர்ஜி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதயத்துடிப்பும் எனக்கு அதிகமாக இருப்பதால் தற்பொழுது அதற்கான சிகிச்சை மட்டுமே நான் மேற்கொண்டு வருகிறேன்.

இவ்வளவு குறைபாடுகள் உள்ள என்னால் போதை பொருளை பயன்படுத்த முடியாது என தெரிவித்தார். மேலும் பிரசாந்திடம் போதை பொருளை நான் வாங்கினேன் எனக் கூறிய பிரதீப்பின் வாக்குமூலம் அனைத்தும் பொய்யே. பிரதிப்பிடம் எனக்கு எந்த விதமான நட்பும் இல்லை தொடர்புமில்லை அதை நான் திட்டவட்டமாக சொல்லுகிறேன். அதுமட்டுமல்லாமல் முதலில் நீங்கள் தேடுகின்ற கிருஷ்ணா நானே கிடையாது. நீங்கள் முதலில் அதை விசாரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதனால் ஒருவேளை இவர் உண்மை சொல்கிறாரா? அல்லது பொய் சொல்கிறாரா? என குழப்பத்தில் இருக்கும் காவல்துறையினர் இன்று காலை அதிரடியாக சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள அவரது வீட்டில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ஆனால் அவரது வீட்டில் இருந்து எந்த ஒரு பொருள்களும் எடுத்த மாதிரி தெரியவில்லை என அங்கு இருப்பவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர் பயன்படுத்தும் மருந்துகள் முதல் அவருடைய கார்கள், அவருடைய ரூம் என அனைத்திலும் காவல்துறையினர் தீவிரமாக தேடிச் சென்றனர். இவ்வளவு இடர்பாடுகள் மத்தியிலும் இவ்வளவு சோதனைகளின் மத்தியிலும் தற்பொழுது ஒரு ட்வீஸ்ட் நடந்திருக்கிறது. அதன்படி பார்த்தால் நடிகர் கிருஷ்ணாவின் மருத்துவர் ரிப்போர்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி அவர் உடலில் எந்த விதமான போதைப்பொருளும் பயன்படுத்தியதற்கான சாத்திய கூறுகள் கிடைக்கவில்லை என தகவல் வந்திருக்கிறது. இந்த ரிசல்ட்டை வைத்து பார்க்கும் பொழுது ஒருவேளை கிருஷ்ணா சொல்வது தான் உன்னை போல என பலரும் பேசி வருகின்றனர். 

ஆனால் காவல்துறையினரோ அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் அவரிடத்தில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் அதில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளிவரலாம் எனவும் காவல்துறை வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கோலிவுட்டில் கொக்கைன் மாஃபியா.. நடிகர் கிருஷ்ணா விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share