ஒரே வருடத்தில் இத்தனை சோதனையா.. விபத்தில் தந்தையை பறிகொடுத்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ..!
சாலை விபத்தில் உயிரிழந்தார் நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை.
சமீபத்தில் நடிகை வின்சி அலோசியஸ் தனியார் சேனலுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தன்னிடம் வந்து ஆடை மாற்ற உங்களுக்கு உதவி செய்யட்டுமா என கூறியதாகவும். படப்பிடிப்பு தளத்தில் அவர் போதை மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும் பெரிய புகார் ஒன்றை கூறினார். இதனை அடுத்து, இதுபற்றி விசாரிக்க அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றும் சாராயு மோகன் ஆகிய 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனை அடுத்து கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு 11 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக ரெய்டு செய்தனர். அப்பொழுது அங்கு தனது நண்பர்களுடன் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜன்னல் வழியாக எகிறி குதித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போலீசார் அவரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பிய போது நேரடியாக காவல் நிலையம் சென்று தான் போதை மருந்து உபயோகித்ததை ஒப்பு கொண்டார். இந்த சூழலில், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு ஷைன் டாம் சாக்கோவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிரைவேற்றி இருந்தனர். இதனை குறித்து செய்தியாளர்களுக்கு சமீபத்தில் பேட்டியளித்த கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் உன்னி கிருஷ்ணன், படப்பிடிப்பில் போதையில் நடிகர் ஒருவர் தனக்கு தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரசிகர்களின் தீர்ப்பே தயாரிப்பாளரின் தீர்ப்பு..! ரீரிலீஸ் ஆகிறது அஜித்தின் "குட் பேட் அக்லி"..!
நடிகரின் பெயரை தயவு செய்து வெளியிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவரிடம் சட்டத்தின்படி உள்புகார்கள் குழுவில் புகார் அளிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. இதனை அடுத்து, படப்பிடிப்பு தளத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவையும் அழைத்தோம். அப்பொழுது வந்த அவர் தான் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எங்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துடன், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு நேரடியாக விவாதித்தது. அப்பொழுது போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களுடன் நாங்கள் நடிக்க ஒத்துழைக்க மாட்டோம். ஏற்கனவே போதைப் பொருட்களுடன் பிடிபட்ட ஒப்பனை கலைஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படி இருக்க, இவர்களது பிரச்சனைகளை விசாரிகத்து முடிவு செய்ய நினைத்த "உள் புகார் குழு" இருவரையும் நேரில் அழைத்தது. அப்போது நடிகை வின்சி அலோசியஸ் தனியாகவும், நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடனும் வந்தார். அப்போது பேசிய டாம், "உண்மையில் நான் எந்த வித உள்நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை உங்களிடம் கேட்கவுமில்லை. நான் பேசும் பாணியே அப்படி தான். உங்களிடம் மட்டும் அல்ல நான் யாரிடம் பழகினாலும் உரிமை எடுத்து தான் பேசுவேன். இனிமேல் இப்படி எந்தவித தவறுகளும் நடக்காமல் பார்த்து கொள்கிறேன். மனதார எனது தவறுக்கு வருந்துகிறேன். மேலும் நடிகை வின்சி அலோசியஸிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்". என தனது மன்னிப்பை கேட்டு கொண்டு அங்கிருந்து சென்றார்.
இப்படி பல பிரச்சனைகளை கடந்து தற்பொழுது நிம்மதி பெருமூச்சு விட்ட பின் இனி நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தார். ஆனால் தற்பொழுது நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கேரளாவிலிருந்து பெங்களூருக்கு மருத்துவ பரிசோதனைக்காக காரில் சென்று கொண்டிருந்த பொழுது லாரி மீது கார் மோதியதில் உயிரிழந்தார்.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த சாக்கோ, அவரது தாயார் மரியா கார்மல் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்ததான காரணத்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கனவை நினைவாக்கிய நடிகர் அஜித்..! AK வாங்கிய புதிய கார்.. விலைய கேட்டா அசந்து போயிடுவீங்க..!