×
 

என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின் 'குபேரா' பட இயக்குனர் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்..! 

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா பேச்சால் அதிர்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள் அனைவரும்.

தற்பொழுது பான் இந்தியா திரைப்படமாக அனைவரது எதிர்பார்ப்பையும் எகிர செய்திருக்கும் திரைப்படம் தான் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகவுள்ள 'குபேரா' திரைப்படம். இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி  மற்றும் அம்மிகோ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். இத்திரைப்படத்தில் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாநாயகர்களாக நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா முதலானோர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட ரூ.102 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 1600 தியேட்டர்களில் இந்த திரைப்படத்தை திரையிட தயாரிப்பாளர் திட்டமிட்டு இருப்பதாக சமீப காலத்தில் செய்திகள் வெளியாகின. 


இப்படி இருக்க இத்திரைப்படத்தின் மிக முக்கியமாக பார்க்கப்படுபவர் தான் இயக்குனர் சேகர் கம்முலா. இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். இப்படிப்பட்ட சேகர், நியூ ஜெர்சியில் கணினி அறிவியல் பட்டப்படிப்பை படித்து இருக்கிறார். அதற்குப் பின்பு ஐடியில் வேலை செய்து கொண்டிருந்த இவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு திரைத்துறையில் தனது காலடித்தடத்தை பதித்தார்.

இவரது இயக்கத்தில் வெளியான "வணிக சூத்திரங்கள்" என்ற திரைப்படம் பலரது பாராட்டைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸில் வணிகரீதியாக வெற்றியும் அடைந்தது. இந்த படத்திற்காக இவருக்கு அறிமுக இயக்குனருக்கான விருதும் கிடைத்தது. இதனை அடுத்து அவர் பல படங்களை இயக்க 2004 ஆம் ஆண்டு 'ஆனந்த்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. 


இதனைத் தொடர்ந்து பல விருதுகளை தன் கையில் வைத்திருக்கும் சேகர், இயக்கிய படங்கள் என பார்த்தால், இதுவரை ஆனந்த், கோதாவரி, ஹாப்பி டேஸ், அவ கை பிரியாணி, லீடர், லைப் இஸ் பியூட்டிபுல், அனாமிகா, நீ எங்க என் அன்பே, ஃப்பிடா, பிரேம தீரம், லவ் ஸ்டோரி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இவரைக் குறித்து நடிகர் தனுஷ் பேசுவியில், சினிமாவில் தற்பொழுது வருமானங்களை மட்டுமே கண்ணில் பார்த்து ஓடுகின்ற பல இயக்குனர்கள் மத்தியில் பட்டாம்பூச்சிகளுக்கு பின்பாக ஓடுகிற இயக்குனர் தான் சேகர் கமுல்லா.

இவர் பல வருடங்கள் காத்திருந்து பொறுமையாக நேர்த்தியாக ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு, தற்பொழுது 3 வருட காலமாக அதற்குண்டான உழைப்பை போட்டு உருவான படம் தான் 'குபேரா' என தெரிவித்து இருந்தார். இப்படி இருக்க, இந்த குபேரா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் பட குழுவினர் பலரும் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜமௌலி அழைக்கப்பட்டார். இவர்கள் அனைவரையும் தொடர்ந்து பேசிய இயக்குனர் சேகர் கமுல்லாவின் பேச்சி பலரது கவனத்தை வைத்துள்ளது. 

இதையும் படிங்க: குபேரா படத்தின் கதை லீக் ஆனதால் டென்க்ஷனில் படக்குழு..! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி..! 

 அதன்படி அவர் பேசுகையில், " இந்த மாதிரியான ஒரு திரைப்படத்தை இதுவரைக்கும் உங்கள் வாழ்வில் நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதனை கர்வத்துடன் சொல்லவில்லை ஆனால் இத்திரைப்படம் சினிமாவில் எங்கும் பார்த்திராத புது வகையான சினிமாவாக இருக்கும். இந்தக் கதைக்கலம் மிகவும் புதுமையாக இருக்கும். மேலும் இத்திரைப்படத்தில் எமோஷன், காதல், திரில்லர் என அனைத்தும் கலவையாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை இந்தியா மட்டுமல்லாமல் எந்த நாட்டினர் பார்த்தாலும் அத்தனை பேராலும் இந்த படத்தை அவர்களுடன் கனெக்ட் செய்ய முடியும். ஆதலால் குபேரா திரைப்படம் ஒரு தரமான சிறப்பான திரைப்படம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன் " என தெரிவித்தார். 


இதனைப் பார்த்த பல நெட்டிசன்கள், படங்கள் வருவதற்கு முன்பாக நீங்கள் கூறுவது அனைத்தும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் படங்கள் வெளியான பின்பு தான் அதில் உள்ள காட்சிகளும் கதைகளும் வீணாக இருப்பதை நாங்கள் பார்த்து வேதனையில் இருக்கிறோம். ஆதலால் உங்கள் படம் வெளியாகட்டும் நீங்கள் சொல்வதைப் போல் நன்றாக இருந்தால் அதற்கு பின்பு பார்க்கலாம் என தங்களது பதிவுகளை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்

இதையும் படிங்க: குப்பை கிடங்கில் தனுஷ் ராஷ்மிகா... ஏழு மணி நேரம் என்ன செய்தார்கள் - நடிகரே கூறிய உண்மை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share