×
 

சீனா, அமெரிக்காவிடம் இந்தியா கற்று கொள்ள வேண்டும்..! அமீர்கான் பரபரப்பு பேச்சு..!

மேடையில் இந்தியாவை சீனா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் நடிகர் அமீர்கான்.

1973ம் ஆண்டு "யாதோன் கி பாரத்" என்ற திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானவர் தான் அமீர்கான். பின்னர் இவரது நண்பரும் இயக்குநருமான அசுதோஷ் கோவரிகருடன் இணைந்து 1984ம் ஆண்டு "ஹோலி" என்ற படத்தில்துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, 1988ம் ஆண்டில் "கயாமத் சே கயாமத் தக்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் அமீர்கானுக்கு தேடி தந்தது. அடுத்ததாக "ராக்" படத்தில் சிறப்பாக நடித்து 'தேசிய திரைப்பட விருதை' பெற்றார். மிக குறுகிய கால நடிப்பின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஸ்டாராக மாறிய பெருமை அமீர் கானையே சேரும். 

அதன் பிறகு, 1990ம் ஆண்டு "தில்", 1991ம் ஆண்டு "தில் ஹை கே மந்தா நஹின்", 1992ம் ஆண்டு "ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்", 1993ம் ஆண்டு "ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே", அதே வருடம் மீண்டும் "பரம்பரா", 1994ம் ஆண்டு "அண்டாஸ் அப்னா அப்னா", 1995ம் ஆண்டு "பாஸி", அதே வருடம் மீண்டும் "ரங்கீலா" மற்றும் "டிராஜானி",1997ம் ஆண்டு "இஷ்க்",1998ம் ஆண்டு "எர்த்"மற்றும் "குலாம்",1999ம் ஆண்டு  "சர்பரோஷ்",2001ம் ஆண்டு"தில் சஹ்தா ஹை", 2001ம் ஆண்டு "லகான்", 2005ம் ஆண்டு "மங்கள் பாண்டே", 2006ம் ஆண்டு "ஃபனா" மற்றும் "ரங் தே பசந்தி" மற்றும் தங்கல் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். 

இதையும் படிங்க: ஹிட் கொடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி படம்..! ஒரே நாள் வசூலில் சாதனை..!

2007 ஆம் ஆண்டு, அமீர் கான் "தாரே ஜமீன் பர்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் தந்தது. இதனை தொடர்ந்து, லகான், தில் சாஹ்தா ஹை, ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் மற்றும் அந்தாஸ் அப்னா அப்னா போன்ற அவரது பல படங்கள் பாரம்பரியமிக்க படங்களாகக் கருதப்படுகின்றன. 

இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமீர்கான், அதில் " நம் நாட்டின் பரப்பளவையும் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தியாவில் மிகவும் குறைவான திரையரங்குகளே உள்ளது. தோராயமாக பார்த்தால் கூட சுமார் 10,000 திரையரங்குகள் மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த 10,000 திரையரங்குகளில் பாதி எங்குள்ளது தெரியுமா தெற்கு இந்தியா பகுதியில். ஏன் பல கோடி மக்கள் வாழ்ந்து வரும் இந்தியாவில் இவ்வளவு தான் திரையரங்கம் உள்ளது. அதிலும் நம்மில் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான அமெரிக்கா அங்கு 40,000 திரையரங்குகளும், சீனா 90,000 திரையரங்குகளும் கொண்டுள்ளன.

உண்மையில் திரைப்படங்களை அதிகம் விரும்பும் நம் நாட்டில், வெறும் 2 சதவீத மக்கள் மட்டுமே திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கிறார்கள். மீதமுள்ள 98 சதவீதத்தினர் எங்கே படம் பார்க்கிறார்கள்? என தெரியவில்லை. இந்தியாவின் கொங்கண் போன்ற பல பகுதிகளில் ஒரு திரையரங்கு கூட இல்லை. அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் திரைப்படங்களைப் பற்றிக் கேள்விப்படுவார்களே தவிர பார்க்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு பார்க்க வழி இல்லை. எனவே நாம் திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
என கூறினார்.

இதையும் படிங்க: கோடை காலத்தில் NO THEATRES..! ஓடிடியில் வெளியாகும் படங்களை வீட்டிலிருந்தே பாருங்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share