கோடி கணக்கில் பேசப்பட்ட பேரம்... ஓடிடி வசமானது அனுஷ்காவின் "காட்டி" திரைப்படம்..!
மீண்டும் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் அனுஷ்காவின் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
கோலிவுட் பாலிவுட் திரை உலகில் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படத்தில் அனிருக்கும் பிடித்த திரைப்படம் என்றால் 'அருந்ததி'. இந்தத் திரைப்படத்திற்கு முதலில் அவர் சரிவரமாட்டார்...அவரெல்லாம் கவர்ச்சியை காட்டத்தான் லாய்க்கி என இயக்குனர்கள் கூறிய நிலையில், அந்த படத்தில் தனது அசாத்திய நடிப்பை காண்பித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அனுஷ்கா.
அருந்ததி படத்தில் ஜக்கம்மாவாக வந்த அனுஷ்காவை இன்றும் யாராலும் மறக்க முடியாது. இதனை அடுத்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'பாகுபலி' திரைப்படத்தில் தேவ சேனையாக வந்து நீலாம்பரியையே ஆட்டம் காண வைப்பார் என்றால் அனுஷ்கா வேற லெவல் தான். அதுமட்டுமல்லாமல் அத்திரைப்படத்தில் அவரது பேச்சுக்களும் அவரது நடவடிக்கைகளும் நடிப்பும் அட்டகாசமாக இருந்த படியினால் அவரை பலரும் புகழ்ந்து தள்ளினர். இப்படி இன்று ஒரு சில படங்களில் நடித்து தன்னை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என சொல்லிக் கொள்ளும் பல பிரபலங்கள் மத்தியில் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் ஆகவே இருந்து எதையும் வெளி காட்டாமல் அமைதியாக இருக்கும் அனுஷ்காவுக்கு ரசிகர் பட்டாளம் சற்று அதிகமாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது.
இதையும் படிங்க: 'கைதி 2' படத்தில் நடிகை அனுஷ்கா... தமிழில் ரீஎண்ட்ரிக்கு வழிவகுத்த லோகேஷ் கனகராஜ்..!
இப்படிப்பட்ட அனுஷ்கா ஷெட்டி இத்தனை நாட்கள் திரையுலகில் தோன்றாமல் இருக்க காரணம் 'இஞ்சி இடுப்பழகி’ படம் தான். இந்த படத்துக்காக அனுஷ்கா தனது உடல் எடையை அதிகரித்தார். அதன்பிறகு உடற்பயிற்சி, யோகா என்று பல்வேறு முயற்சிகள் செய்தார். ஆனால் எதுவும் அவருக்கு பலனளிக்க வில்லை. உடல் எடையும் குறைந்த பாடில்லை. குறிப்பாக, பாகுபலி முதல் பாகத்தில் இருந்தது போல, பாகுபலி-2ம் பாகத்தில் அனுஷ்கா ஒல்லியாக வரவேண்டும் என இயக்குனர் ராஜமௌலி எண்ணினார். ஆனால் அனுஷ்கா எவ்வளவோ முயற்சித்தும் ஒல்லியாக முடியாததால் வேறு வழியின்றி அவரை கிராஃபிக்சில் ஒல்லியாக காண்பித்து இருப்பார்.
இதனால் மிகவும் மனவேதனையிலும் மன அழுத்தத்திலும் இருந்த அனுஷ்கா. "அவ்வளவு தான் இனி நம் வாழ்க்கை" என நினைத்து கொண்டிருந்த வேளையில் அவர் வாழ்க்கையில் கடவுளாய் வந்தார் ஒருவர். இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என கூற, முதலில் தயங்கிய அனுஷ்கா அதன் பின் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டு, நீண்ட நாள் மருத்துவ ஒய்வு பெற்று தற்பொழுது பழைய அனுஷ்காவாக ரசிகர்களுக்கு காட்சியளிக்க தயாராகி இருக்கிறார்.
இப்படி இருக்க, அனுஷ்காவின் ரீஎன்ட்ரிக்காக தயாராக இருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்காவின் 50-வது படமான 'காதி' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ளார்.முழுக்க முழுக்க போதை பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல தடைகளுக்கு பின் இப்படம் வருகின்ற ஜூலை மாதம் 11ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என எக்ஸ் தளம் வாயிலாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த சூழலில் இப்படத்திற்கான அட்டகாசமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் அனுஷ்காவின் ’காட்டி’ படத்தின் ஓடிடி உரிமையை ரூ. 36 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர் படக்குழுவினர். படம் வெளியான பின்பு ஓடிடி தளத்தின் பெயர் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு NO..! கமல் மன்னிப்பு கேட்காமல் படம் ஓடாது - நீதிபதி திட்டவட்டம்..!