பாதியிலேயே நிறுத்தப்பட்ட "காஞ்சனா 4" படப்பிடிப்பு...! வருத்தத்தில் ரசிகர்கள்..!
புதிய படத்தில் கமிட்டான லாரன்ஸால் காஞ்சனா 4 படப்பிடிப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
"பேய்க்கும் பேய்க்கும் சண்டை அத ஊரே வேடிக்கை பாக்குது" என்ற டயலாக்கை இன்று கேட்டாலும் நமது அனைவருக்கும் நினைவில் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ் மட்டுமே... தற்பொழுது நடிகர் சந்தானம் 'தில்லுக்கு துட்டு' என்ற பெயரில் காமெடி பேய் படங்களை எடுத்து வந்தாலும், மறுபக்கம் இயக்குனர் சுந்தர்.சி 'அரண்மனை' என்ற பெயரில் நகைச்சுவையான பேய் திரைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தாலும் என்றும் மக்கள் மனதில் திகில் ஊட்டும் காமெடி கலந்த பேய் திரைப்படங்கள் என்றால் அது ராகவா லாரன்ஸின் திரைப்படங்கள் மட்டுமே. அந்த அளவிற்கு தனது படங்களின் படைப்புகளை மக்கள் மனதில் ஆழமாக விதைத்திருக்கிறார் லாரன்ஸ்.
இப்படி மக்கள் மத்தியில் கொடை வள்ளலாக வளம் வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், சினிமாவில் இதுவரை பரவசம், பார்த்தாலே பரவசம், அற்புதம், ராஜபூழு, மாஸ், ஸ்டைல், லட்சியம், டான், டான் நம்பர் 1, முனி, பரது, பாண்டி, ராஜாதி ராஜா, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், ஆரவாரம், காஞ்சனா, உயிரெழுத்து, நண்பன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, மொட்டை சிவா கெட்ட சிவா, சிவலிங்கா, கால பைரவா, நாகா, காஞ்சனா 3, லக்ஷ்மி, ருத்ரன், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், சந்திரமுகி 2, புல்லர்ட் போன்ற தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மேலும், ஹண்டர், பென்ஸ், துர்கா, காஞ்சனா 4, அதிகாரம் போன்ற படங்கள் இன்னும் இவரது நடிப்பில் வரவிருக்கிறது.
இதையும் படிங்க: அடி மேல அடி விழுந்துட்டே இருக்கே.. நாவலில் இருந்து எடுக்கப்பட்ட தக் லைப் படம்...! டென்ஷனில் மணிரத்தினம்...!
இன்று பல படங்களில் நடித்து சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இடம் பிடித்திருக்கும் லாரன்ஸ், இதற்காக பல வருடகாலம் போராட்டங்களை சந்தித்து வந்திருக்கிறார். அதன்படி, 1993 ஆம் ஆண்டு நடன இயக்குனராக திரையுலகில் தோன்றினார். பிறகு நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட லாரன்ஸ், கிடைத்த சிறிய வேடங்களில் நடித்து வந்தார். அதன் பின், 1998 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின் 2004 ஆம் ஆண்டு இயக்குநராக புதிய அவதாரம் எடுத்த லாரன்ஸ், நாகார்ஜுனா மற்றும் ஜோதிகாவை வைத்து 'மாஸ்' என்ற தெலுங்கு திரைபடத்தை இயக்கினார்.
இப்படி இருக்க, தமிழில் 'முனி' என்கின்ற பேய் படத்தை இரண்டாவது முறை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். அதன்பின் காஞ்சனா ஒன்று, இரண்டு, மூன்று எனும் பாகங்களை தனித்தனியாக பிரித்து வித்தியாசமான பேய்களை காண்பித்து தனக்கு என ஒரு அடையாளத்தை கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் உருவாக்கினார். பேய் படங்கள் பார்க்க பயமாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்று பலரும் கூறி வந்த நிலையில், பேய் படத்தையும் காமெடியாக சித்தரிக்கலாம் என்பதை காண்பித்தவர் தான் நம்ப ராகவா லாரன்ஸ் என மக்களையே பேச வைத்தவர்.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் கண்டிப்பாக, கோவை சரளா முதல், பல முன்னணி நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என பலரும் இடம்பெற்று இருப்பார்கள். அவர்களின் வரிசையில், ராகவா லாரன்ஸ் படத்தில் எப்பொழுதும் சிறப்பு பாடல் ஒன்று இருக்கும். அதில் அவர் தனது பிள்ளைகளாக என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் கைவிடப்பட்டவர்களையும், உடல் உறுப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களது திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்துவார்.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸின் பேய் படங்களின் சீரியஸில் நான்காவது சீரிஸான 'காஞ்சனா-4' திரைப்படத்தை கோல்ட் மைன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனைவரது எதிர்பார்ப்பையும் பெற்ற இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்ட்டே லாரன்ஸ்க்கு துணையாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகையான நோரா பதேகி முன்னணி கதாபாத்திரத்திலும், கே.ஜி.எஃப் ராமச்சந்திரா ராஜு வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'காஞ்சனா-4' திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தற்பொழுது நிறுத்தப்பட்டு இருக்கிறது. காரணம், தற்பொழுது ராகவா லாரன்ஸ் 'பென்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் காஞ்சனா - 4 படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 40 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் விரைவில் புதுச்சேரி பகுதியில் துவங்க இருப்பதாக அப்டேட்டுகள் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: பாடகி சின்மயி குரலுக்கு நான் கேரண்டி...Ban செய்தாலும் பாட வைப்பேன்..! வாக்கு கொடுத்த இசையமைப்பாளர்..!