×
 

'காந்தி கண்ணாடி' படத்திற்கு கிடைத்த சம்பளம்..! KPY பாலா செய்த நெகிழ்ச்சி செயல்.. கண்ணீர் விட்ட குடும்பம்..!

Kpy பாலா நடிப்பில் உருவான காந்தி கண்ணாடி படத்திற்கு கிடைத்த சம்பளத்தை வைத்து பெரிய உதவியை செய்திருக்கிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி ஷோவில் போட்டியாளராக வந்து தன்னை தாழ்த்தி அனைவரையும் சிரிக்க வைத்து பிரபலமானவர் தான் சின்னத்திரை பாலா. ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்து 10 நிமிடங்கள் தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டு பணத்தை பெற்று சென்று விடுவார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் இவர் இருந்தாலும் சட்டை வாங்க காசு இல்லாமல் மிகவும் பழைய ஆடைகளை உடுத்தி கொண்டு செல்வாராம். இவரை கவனித்த அந்த தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அவருக்கு தைரியம் கூறி அவருக்கு சர்ப்ரைஸாக ஒரு பெட்டி முழுவதும் ட்ரெஸ் மற்றும் ஷுக்களை வாங்கி கொடுத்தாராம். அவர் யாரும் இல்லை தொகுப்பாளர் மகாபா ஆனந்த் தான். இதனை பலமுறை பாலா மேடையில் கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து தனக்கு வரும் சம்பளங்களில் ஒரு பகுதி பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்ய முடிவு எடுத்த பாலா, தனது இன்ஸ்ட்டா மூலம் உதவி என வருபவர்களை தேர்வு செய்து, உதவி செய்ய ஆரம்பித்தவர் இன்று பல குடும்பங்களில் உதவி செய்யும் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளார். இதனை அடுத்து இவர் மக்களுக்கு செய்து வரும் உதவிகளை பார்த்த ராகவா லாரன்ஸ் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேள் என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். 

இதையும் படிங்க: ரூ.800 கோடி பட்ஜெட்.. மிரளவைக்கும் ராமாயணம் படம்..! ரிலீசானது படத்தின் முதல் டீசர்..!

இதனை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து, ஆம்புலன் வாங்கி கொடுப்பது, லேப்டாப் வாங்கி கொடுப்பது, கடை வைத்து கொடுப்பது, குடிநீர் வசதி செய்து கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, வீடு கட்டி தருவது, மருத்துவ உதவிகள் செய்வது என பல உதவிகளை செய்து மக்கள் மனதில் லாரன்சும் பாலாவும் நீங்கா இடம்பிடித்து உள்ளனர். இவர்களை பார்க்கும் பொழுது மக்கள் மனதில் நினைவுக்கு வருபவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் தான் என பலர் கூறுகின்றனர். அவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்பொழுது "என்னடா காசு காசு, செத்தா அர்னா கொடிய கூட எடுத்துட்டு தான் புதைப்பாங்க இருக்குற வரைக்கு நாலுபேருக்கு நல்லது செஞ்சிட்டு போங்கய்யா" என்றார். அதுபோல தான் இன்று இவர்கள் இருக்கின்றனர் என பல மக்கள் கூறிவருகின்றனர். 

இப்படி இருக்க, மக்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்து வரும் பாலாவை எப்படியாவது ஒரு படத்தில் நடிகராக நடிக்க வைத்து அழகுபார்க்க வேண்டும் என நினைத்த ராகவா லாரன்ஸ், அவரை வைத்து படத்தை தயாரிக்க நல்ல தயாரிப்பாளரை தேடி வந்துள்ளார். தற்பொழுது அதற்க்கான தயாரிப்பாளர் கிடைக்க, தற்பொழுது பாலா கதாநாயகனாக களமிறங்கி உள்ளார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷெரிப் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில், நடிகர் பாலா கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் தான் "காந்தி கண்ணாடி" .

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில்  உன்னை எல்லாம் டீவில பாக்குறதே பெருசு... பாக்க நரம்பு மாதிரி இருந்துக்குட்டு...நக்கல பாத்தியா.. ஹீரோ ஆவதற்கு ஒரு தகுதி வேண்டாமா.. சப்ப மூஞ்சு இதெல்லாம் ஹீரோவா நடிக்க வந்துடிச்சின்னு எல்லாரும் புறணி பேசுவது போன்ற ஆடியோ ஒலிக்க, பின்பாகவே பாலா, இந்த மாதிரி என் முதுவுக்கு பின்னாடி எவ்வளவு விமர்சனம் வந்தாலும் அதை அனைத்தும் எரித்து உங்களால் இங்கு நிற்கிறேன்" என அவர் பேசும் ஆடியோவும் சேர்த்து வெளியாகி தற்பொழுது அந்த படத்தை பார்க்க வேண்டும் என ஆர்வத்தை அனைவருக்கும் தூண்டியுள்ளது. 

இப்படி இருக்க, இந்த படத்தில் தான் வாங்கிய சம்பளத்தை kpy பாலா என்ன செய்திருக்கிறார் தெரியுமா? அவர் இரண்டு பேருக்கு வீடு கட்டி கொடுத்து இருக்கிறாராம். இதனை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் பாலா, " நீங்கள் எதிர்பார்க்காததை விட உங்களுக்கு பிடித்த படமாக நான் நடித்த ‘காந்தி கண்ணாடி’ படம் இருக்கும். இந்தப் படத்தின் மூலம் எனக்கு கிடைத்த சம்பளத்தில் தான் இன்று இரண்டு குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கிறேன். அதுவே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்று நான் நடிக்கும் இந்த பட வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் மக்கள் தான். நீங்கள் இல்லை என்றால் நான் இன்று சினிமாவில் இல்லை. எனது மூச்சு இருக்கும் வரை கண்டிப்பாக மக்களுக்கு சேவகனாக இருப்பேன்.

கவலை வேண்டாம் இன்னும் என்னால் முடிந்த நிறைய உதவிகளை மக்களுக்குச் தொடர்ந்து செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: குளோனிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்..! அச்சு அசலாக அவரை போலவே இருக்கும் இவர் யார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share