×
 

சுப்ரிம் கோர்ட் கொடுத்த டோஸ்.. அதிரடி முடிவெடுத்த கன்னட துணை முதல்வர்.. விரைவில் தக் லைஃப் ரிலீஸ்..!

சுப்ரிம் கோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவால் தக் லைஃப் ரிலீசுக்காக பேசிய கன்னட அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்த துணை முதல்வர்.

ஒரே ஒரு இசை வெளியீட்டு விழாவை வைத்து அதில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை சிறப்பு விருந்தினராக அழைத்து, "உயிரின் உறவே தமிழே...! எனது வாழ்க்கையும் குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும்தான். எனது குடும்பம் அனைத்தும் இங்குதான் இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியிலிருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என சொல்லி இன்று இணையதளத்தை தொட்டாலே கரண்ட் ஷாக் அடிப்பதை போல் அவருடைய செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. 

கன்னட மொழியை கமலஹாசன் அவமதித்துவிட்டார் எனவும் இவர் என்ன தமிழ் வல்லுனரா எனவும் பலரும் கேள்விகளை கேட்டு தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் கர்நாடகர்கள். அது மட்டுமல்லாமல் சில அரசியல் கட்சிகளும் இதில் தலையிட்டு நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடித்து வருகின்றனர். அதையும் மீறி அவர் மன்னிப்பு கேட்காமல் படத்தை வெளியிட்டால் தியேட்டர்களை அடித்து உடைப்போம் கொளுத்துவோம் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

இதனால் கமலஹாசனின் கன்னட ரசிகர்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இத்திரைப்படத்தை கர்நாடக்காவில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வெளியிடவும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடியது நடிகர் கமலஹாசனின் தரப்பு. 

இதையும் படிங்க: என்னையா நடக்குது இங்க... கன்னடத்தில் பேசி வீடியோ வெளியிட்ட கமல்ஹாசன்... குழப்பத்தில் ரசிகர்கள்...!

இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகள், கமலஹாசன் என்ன மொழி வல்லுனரா என கேள்வி கேட்டதுடன் உங்கள் படத்துக்கு பாதுகாப்பு தருவதெல்லாம் இரண்டாவது விஷயம், மொழியைப் பற்றி பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறீர்கள் ஆதலால் முதலில் நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என காலக்கெடு கொடுத்து உத்தரவிட்டனர். இதனை அடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் கமலஹாசன், " நான் கன்னட மொழி மட்டுமல்ல அனைத்து மொழிகளையும் மதிக்க கூடியவன். ஆதலால் தான் மொழியின் அடிப்படையில் சிவராஜ்குமார் எனது குடும்பம் என தெரிவித்து இருந்தேன்.

நான் கூறிய தகவல் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என தெரிவித்து இருந்தார். இதனைப் பார்த்த நீதிபதி நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள விஷயங்கள் எல்லாம் சரிதான். ஆனால் இதில் மன்னிப்பு என்ற வார்த்தைகளே இல்லையே என கூறினார். அதற்கு நடிகர் கமலஹாசனின் தரப்பில் இருந்து தவறாக பேசியிருந்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு எதற்காக மன்னிப்பு என கேட்டனர்.  

இதனை அடுத்து மகேஸ்ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கர்நாடகத்தில் 'தக் லைப்' படத்திற்கு கன்னட சினிமா வர்த்தக சபை தடை விதித்து நீதித்துறையின் அதிகாரத்தை மீறி வருவதாகவும் ஆதலால் இதனை உடனே பரிசீலனை செய்து கர்நாடகத்தில் தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இதனை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த்குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் இறுதியில், கமல்ஹாசன் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் எப்படி கேட்கலாம், இது உயர் நீதிமன்றத்தின் வேலை அல்ல என தனது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.

மேலும், இந்த எதிர்ப்புவாத அமைப்பில் ஏதோ தவறு இருக்கிறது, ஒரு நபர் தனது சுயலாபத்திற்காக ஒரு அமைப்பை உருவாக்குகிறார்.. இந்த விவகாரம் குறித்து விவாதம் நடக்கட்டும். அவர் தவறு என்ன என்று மக்கள் சொல்லட்டும்," என்று நீதிபதி மன்மோகன் கூறினார். "பெங்களூரில் உள்ள அனைத்து அறிவொளி பெற்ற மக்களும் கமல்ஹாசன் தவறு என்று அறிக்கை வெளியிடலாம். ஆனால் ஏன்? அச்சுறுத்தல்களை நாட வேண்டும்?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதனை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற பெஞ்ச் உத்தரவிட்டது. அதேபோல் எதன் அடிப்படையில் இப்படத்தை வெளியிட கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது என்பதை  ஜூன் 19 அன்று விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.  இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தற்பொழுது கன்னட அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அவர் பேசுகையில், “கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நாம் அனைவரும் கண்டிப்பாக மதிக்க வேண்டும்.

கன்னட ஆதரவு அமைப்புகளிடம் நான் இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் நமது வரம்புகளை ஒருபொழுதும் மீறக் கூடாது, எப்பொழுதும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி செய்தால் அது நமது மாநிலத்தின் அமைதியை கெடுத்து விடும்.. நமது மாநிலம் அமைதியை விரும்பும் மாநிலம்,” என்று பேசியுள்ளார்.


அவரது பேச்சால் தற்பொழுது கமல் ஹாசனின் தக் லைஃப் படம் கன்னட திரையில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 

இதையும் படிங்க: அடி மேல அடி விழுந்துட்டே இருக்கே.. நாவலில் இருந்து எடுக்கப்பட்ட தக் லைப் படம்...! டென்ஷனில் மணிரத்தினம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share