துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!
பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
இந்திய இசை உலகில் மிகவும் பிரபலமான ராப் பாடகர்களில் ஒருவராக திகழ்பவர் பாட்ஷா. பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ள அவர், இந்திய அளவில் பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றிருக்கிறார். குறிப்பாக ஹிந்தி மற்றும் ஹரியான்வி ராப் பாடல்களால் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய பாடல் காரணமாக அவர் கடும் சர்ச்சைகளில் சிக்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் வெளியான அவரது புதிய பாடல் தாதேரி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்த பாடல் வெளியான சில நாட்களிலேயே இணையத்தில் வைரலாகி, மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த பாடல் குறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக பாடல் வரிகளில் பெண்கள் மற்றும் சிறார்களை குறிக்கும் விதத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பாட்ஷாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன. சிலர் இது ஒரு கலைச் சுதந்திரத்தின் வெளிப்பாடு என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றொரு தரப்பு, இந்த பாடல் சமூக நெறிமுறைகளை மீறுவதாகவும், பெண்கள் குறித்து அவமதிப்பான கருத்துகளை கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!
இந்த சர்ச்சை மேலும் பெரிதாக மாறியுள்ள நிலையில், தற்போது பாட்ஷாவுக்கு எதிராக கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பிரபல குற்றக் கும்பலாகக் கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான குழுவின் பெயரில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சிலர் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், பாட்ஷாவை நேரடியாக மிரட்டியுள்ளனர். அந்த பதிவில், “பாடகர் பாட்ஷா, நீங்கள் ஹரியானாவின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சித்துள்ளீர்கள். 2024-ஆம் ஆண்டு உங்கள் கிளப்பில் நடந்த சம்பவத்தின் மூலம் நாங்கள் டிரெய்லரை காட்டியிருந்தோம். அடுத்த முறை நேரடியாக உங்கள் நெற்றியில் சுடுவோம்,” என்று கடுமையான வார்த்தைகளில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாட்ஷாவின் ரசிகர்கள் மற்றும் இசை ரசிகர்கள் பலரும் இந்த மிரட்டலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக 2024 ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவமும் மீண்டும் பேசப்படுகிறது. அப்போது சண்டிகரில் உள்ள ஒரு கிளப்பிற்கு வெளியே வெடி விபத்து ஏற்பட்டது. அந்த இடம் பாட்ஷாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் செவில்லே பார் மற்றும் லவுஞ்ச் என்ற கிளப்பாகும். அந்த வெடி சம்பவத்திற்கு கனடாவில் இருப்பதாக கூறப்படும் குற்றவாளி கோல்டி ப்ரார் பொறுப்பேற்றதாக அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன. அவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் பாட்ஷாவை குறிவைத்து மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், “ததீரி” பாடல் குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. பஞ்ச்குலாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாட்ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த புகாரில், பாடல் வரிகள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாடல் பாட்ஷாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதால், குறுகிய காலத்திலேயே அது பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது. சிலர் இந்த பாடல் இளைஞர்களை தவறான வழியில் வழிநடத்தக்கூடும் என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சர்ச்சை அதிகரித்த நிலையில், கடந்த வாரம் பாட்ஷா இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில், தனது பாடல் மூலம் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தன்னிடம் ஒருபோதும் இல்லை என்று அவர் கூறினார். மேலும், தனது பாடல் வரிகள் காரணமாக யாராவது மனவருத்தம் அடைந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் இன்னும் நீடித்து வருகிறது. ஒருபுறம் கலைச் சுதந்திரம் குறித்து பேசப்படுகின்ற நிலையில், மறுபுறம் சமூக பொறுப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கிடையில், பாட்ஷாவுக்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் கொலை மிரட்டல் தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த மிரட்டல் உண்மையா, அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த சர்ச்சை இந்திய இசை உலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அஜித்.. விஜய்.. இருவரும் எதில் வல்லவர்கள்..! கம்பரீஷன் போட்டு பேசிய நடிகை தமன்னா..!