×
 

3வது திருமண வாழ்க்கையும் குளோஸ்..! விவாகரத்துக்குப் பிறகு மனம் திறந்து பேசிய நடிகை மீரா வாசுதேவன்..!

நடிகை மீரா வாசுதேவன் 3வது விவாகரத்துக்குப் பிறகு மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்த மீரா வாசுதேவன், நீண்ட காலம் பிறகு அளித்த சமீபத்திய நேர்காணலில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, விவாகரத்து, மற்றும் வாழ்க்கை மீதான புதிய பார்வை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பல வருடங்களாக தனிப்பட்ட சிக்கல்களை அமைதியாக சமாளித்து வந்த அவர், இந்த முறை வெளிப்படையாக பேச முடிவு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேர்காணலில் பேசும்போது, “நான் வாழ்வில் தவறுகள் செய்துள்ளேன். அதை மறைக்க வேண்டிய அவசியமில்லை. தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் என்பதை முதலில் நான் எனக்கே சொல்லிக் கொண்டேன். என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. இப்போது நான் முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற உறுதியுடன்தான் வாழ்கிறேன்,” என்றார்.

மீரா சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட தனது விவாகரத்து அறிவிப்பு, பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இது குறித்து விளக்கமாக கூறிய அவர், “சொல்லாமல் இருந்தால் நிச்சயமாக தவறான தகவல்கள் பரவும். மக்கள் தங்களுக்குத் தோன்றிய கதைகளை உருவாக்குவார்கள். எந்த விதமான புரிதல் இன்மை ஏற்பட்டாலும் அது நான், என் குடும்பம் மற்றும் என் குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். அதனால் தான் உண்மை தகவலை நான் நேரடியாகப் பகிர்ந்தேன்,” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 7ம் வகுப்பில் ஆரம்பித்த பாலியல் தொல்லை.. இன்னும் End-ஏ இல்லாம போகுது..! பிக் பாஸ் நடிகை ஸ்ரீ சத்யா ஓபன் டாக்..!

இது போன்ற சம்பவங்கள் முன்னரே நடக்கக்கூடும் என்பதையும் மனதளவில் தயாராக இருந்ததாகவும், “எதையும் சமாளிக்கும் வலிமை எனக்குள் உள்ளது. என் வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டு செல்வதே இப்போது என் முதல் குறிக்கோள்,” என்றும் அவர் கூறினார்.

தற்போது திரைப்பட பணிகளில் பிஸியாக இருப்பதாகவும், மனநிறைவுடனும், அமைதியான வாழ்க்கையுடனும் பயணித்து வருவதாக மீரா தெரிவித்தார். “இப்போது நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைச் சுற்றியுள்ளவர்கள் நல்லவர்கள்.. எனக்கு தேவையான மன அமைதி கிடைத்திருக்கிறது. இதுவே எனக்கு பெரிய வரம்,” என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.

மீரா வாசுதேவன் தமிழ் படங்களில் உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, அறிவுமணி, ஆட்ட நாயகன், அடங்க மறு, கத்திக்கப்பல் போன்ற படங்களில் நடித்தவர். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்த ‘தன்மந்த்ரா’ படத்தில் நடித்தது அவருக்கு பெரும் ரசிகர்களை பெற்றுத் தந்தது.

தனது வாழ்க்கை பயணத்தைப் பற்றி பேசும் போது, அவர் கடந்த உறவுகளை நேர்மையாக சுட்டிக்காட்டினார். 2005-ல் பிரபல ஒளிப்பதிவாளர் குடும்பத்திலிருந்து வந்தவரை காதலித்து திருமணம் செய்தார். 2010-ல் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்த அவர், அதுவும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இந்த திருமணத்தில் பிறந்த அரிஹரா என்ற மகனின் நலனே தனது வாழ்க்கையின் மிகப்பெரும் முன்னுரிமை என அவர் தெரிவித்துள்ளார்.

2024 மே மாதத்தில் ஒளிப்பதிவாளர் விபின் புத்யங்கத்துடன் மீண்டும் திருமணம் செய்து கொண்ட அவர், 2025 ஆகஸ்டில் அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார். இந்த சம்பவத்தைப் பற்றி பேசும்போது, “ஒவ்வொரு உறவும் எனக்கு ஒரு பாடம் கற்றுத் தந்தது. நான் மனதில் எந்தக் கோபமும், குற்ற உணர்வும் வைத்திருக்கவில்லை,” என்று தெரிவித்தார்.

மீரா வாசுதேவனின் இந்த நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும், “மன அழுத்தம் இருந்தும் தைரியமாக தன் உண்மைகளை பகிர்ந்தது பெரிய விஷயம்” என்று பாராட்டுகின்றனர். அவரின் நேர்மை மற்றும் மன உறுதியை கண்டு ரசிகர்களும், நெட்டிசன்களும் பெருமை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இளையராஜா–சோனி காப்புரிமை மோதல்..! வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share