இயக்குனர் மணிரத்தினத்திற்கு ஷாக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மணிரத்தினம்.
தமிழ் திரையுலக சரித்திரத்திலேயே பிரபலமான இயக்குனர் என்றால் கே.எஸ்.ரவிக்குமார், பாரதிராஜா, சுந்தர்.சி என பலரும் கூறுவர். இவர்கள் வரிசையில் படத்தை இயக்குவதில் அடித்துக் கொள்ள முடியாத ஒரு இயக்குனர் என்றால் அவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவர் தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். இப்படிப்பட்ட மணிரத்தினத்தின் உண்மையான பெயர் என்னவென்றால் 'கோபால ரத்தினம் சுப்பிரமணியம்' என்பதே ஆகும். இப்படிப்பட்ட இவர் தனது பள்ளி படிப்பினை சென்னையில் முடித்தார்.
பிறகு தனது இளங்கலை படிப்பான வணிகவியல் படிப்பை சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்தார். இதனை அடுத்து முதுகலை பட்ட படிப்பை படிக்க நினைத்த மணிரத்தினம் மும்பை ஜமுனலால் பஜாஜ் மேலாண்மை கல்லூரியில் படித்து முடித்தார். இதனை அடுத்து மீண்டும் சென்னைக்கு திரும்பிய மணி ரத்தினம், சிறிது நாட்கள் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆக இருப்பதால் அவர்களது உதவியுடன் சில நாட்கள் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமா ஏன் இப்படி பண்ணுறீங்க.. வருத்தம் தெரிவித்த அனுராக்.. பதிலடி கொடுத்த மணிரத்தினம்..!
இதனைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு 'பல்லவி அணுப்பல்லவி' என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் இதய கோவில், பகல் நிலவு, மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், சத்ரியன் அஞ்சலி தளபதி ரோஜா திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.
இப்படிப்பட்ட மணிரத்தினம் தான் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்திற்காக 'பிலிம்பேர் விருதும், தேசிய விருதும் வென்றார். மேலும் ஏ.ஆர். ரகுமானை திரையுலகில் அறிமுகப்படுத்த காரணமான திரைப்படமும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இந்த 'ரோஜா' திரைப்படம் தான். அதுமட்டுமல்லாமல் மணிரத்தினத்தின் திரை உலக சாதனையை கண்டு இந்திய அரசு அவருக்கு கடந்த 2002ம் ஆண்டு 'பத்மஸ்ரீ விருதை' வழங்கி கௌரவித்தது.
இந்த சூழலில், இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இயக்குனர் மணிரத்தினம். இந்த நிலையில் அவரது பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவருக்கு தனது எக்ஸ் தளத்தில் மூலாமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவரது பதிவில் "தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் திரு. மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு inspiration-ஆக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன் " என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: என்னடா இது கண்ணப்பா படத்துக்கு வந்த சோதனை..! படம் வெளியாகும் நேரத்தில் ஹார்ட்டிஸ்க்கை பறிகொடுத்த டீம்..!