×
 

இசையமைப்பாளரை நம்பி ஏமாந்த ரசிகர்கள்..! அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த டி.இமான்..! 

இசையமைப்பாளர் இமான் கச்சேரி திடீரென நிறுத்தப்பட்டதால் வருத்தத்தில் உள்ளனர் ரசிகர்கள் அனைவரும்.

தமிழ் திரையுலகில் கிராமத்து பாடல்களையும், கிராமத்து காதல்களால் வரும் கண்ணீர் கவலைகளையும் தனித்துவமாக காண்பித்து, தனது இசையால் அனைவரையும் கலங்கடிக்க செய்து காதல் வயப்படுத்தும் ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமைககொண்டவர் தான் டி.இமான். 

இப்படிப்பட்ட, இமான் முன்பெல்லாம் பார்க்க குண்டாக எஸ்.பி.பி போல் இருந்தார். ஆனால் கொஞ்ச நாளில் மெலிந்து காணப்படுகிறார். அந்த அளவிற்கு அவரது வாழக்கையில் சோகங்களை அனுபவித்து உள்ளார். இப்படி மிகவும் பிரபலமான இவரை அதிகமாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் சூரி உடன் காணலாம். எந்த மேடை நிகழ்ச்சிகள் சென்றாலும் எந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்றாலும் இவர்கள் மூவரும் ஒரே கூட்டணியாக நின்று அண்ணன் தம்பி என்று பேசிக் கொண்டு இருப்பதோடு மற்றவர்களை கலாய்த்து கொண்டு இருப்பர். இப்படி அண்ணன் தம்பி போல் ஒன்றாக உறவாடிய சிவகார்த்திகேயன் மீது ஒருநாள் பயங்கரமான குற்றச்சாட்டை வைத்தார் டி.இமான். நம்பி வீட்டுக்குள் வைத்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் காதல் வயப்பட்டு உள்ளதாக கூறி அனைவரையும் திடுக்கிட வைத்தார். 

இதையும் படிங்க: படப்பிடிப்பு தளத்தை விசிட் அடித்த சுனாமி.. தண்ணீரில் தத்தளித்து உயிர் தப்பிய பட குழுவினர்..!

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காலப்போக்கில் இந்த செய்தி மக்கள் மனதில் இருந்து நீங்கி விட்டது.இப்படி இருக்க நீண்ட நாட்கள் கழித்து, தனது பிரச்சனைகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மீண்டும் தனது இசை பயணத்தை தொடங்கி உள்ள டி இமான், தற்பொழுது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் "சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியில் நடுவராக தனது கமெண்ட்ஸ்களை கொடுத்து வருகிறார். இப்படி தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் மத்தியிலும் நடுவராகவும் இசைகளையும் வாசித்துக் கொண்டும், எப்பொழுதுமே பிசியாக இருந்து வருகிறார். 

இப்படிப்பட்ட இமான் 2002 ஆம் ஆண்டு அப்துல் மஜீத் இயக்கத்தில் வெளியான 'தமிழன்' திரைப்படத்தில் இசையமைத்து பிரபலமானார். இதனை அடுத்து விசில், கிரி, தக்க திமி தா, சின்னா, ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம், தலைநகரம், லீ, தவம், மருதமலை, வீராப்பு, நான் அவன் இல்லை, துரை, ஐந்தாம் படை, மாசிலாமணி, நான் அவன் இல்லை 2, வாடா, கச்சேரி ஆரம்பம், மைனா, தம்பிக்கோட்டை, சாட்டை, கும்கி, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டியநாடு, தெனாலிராமன், சிகரம் தொடு, ஜீவா, என்னமோ ஏதோ, வெள்ளைக்காரதுரை, கயல், ரம்மி, ஜில்லா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ரோமியோ ஜூலியட், பத்து என்றதுக்குள்ள, பாயும் புலி, வெற்றிவேல், மிருதன், முடிஞ்சா இவன புடி, மாவீரன் கிட்டு, ரஜினி முருகன், 

மருது, வீரசிவாஜி, வாகா, றெக்க, மீன் குழம்பும் மண் பானையும், தொடரி, பொதுவாக எம்மனசு தங்கம், ரூபாய், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், நெஞ்சில் துணிவிருந்தால், இப்படை வெல்லும், டிக் டிக்  டிக், பஞ்சு மிட்டாய், கடைக்குட்டி சிங்கம்,, கென்னடி கிளப், பக்ரீத், விஸ்வாசம்,  நம்ம வீட்டு பிள்ளை, தீமை தான் வெல்லும், சீறு, டெடி, அண்ணாத்த, பொன்மாணிக்கவேல், உடன்பிறப்பே, லாபம், பூமி, நவரசா, காரி, மை டியர் பூதம், கேப்டன், யுத்த சத்தம், பொய்க்கால் குதிரை, டிஎஸ்பி, எதற்கும் துணிந்தவன், கழுவேத்தி மூர்கன், வள்ளி மயில், பிளாக், வினோதன், பேட்ட ராப், இங்க நான் தான் கிங், டீன்ஸ், புலனாய்வு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து ஃபேமஸ் ஆக இருக்கிறார்.

இப்படி இசையில் பயங்கரமாக இருக்கும் இமான் முதல் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத், ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஹாரிஸ் ஜெயராஜ்  என பலரும் தனது இசைக் கச்சேரிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரது இசை கச்சேரி நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படும் பொழுதும் அதனை காண பல கோடி மக்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் டி.இமான் அவர்களின் இசை நிகழ்ச்சி கச்சேரி என்றால் அதற்கு என ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருவர். இப்படி இருக்க,  ஜூன் 14ஆம் தேதியான நாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி மைதானத்தில் இவரது இசைக்கச்சேரி நடக்க இருந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இது குறித்து டி. இமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அன்புள்ள ரசிகர்களே, எதிர்பாராத காலநிலை காரணமாக, ஜூன் 14, 2025 அன்று நந்தனம் YMCA-வில் நடைபெறவிருந்த சென்னையில் நடைபெறவிருந்த D. இமான் நேரடி இசை நிகழ்ச்சியை ஒத்திவைக்க நாங்கள் கடினமான முடிவை எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் உங்கள் பொறுமை, ஆதரவு மற்றும் புரிதலை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்!!! வாங்கிய அனைத்து டிக்கெட்டுகளும் மறு திட்டமிடப்பட்ட தேதி வரை செல்லுபடியாகும், அல்லது ஜூன் 12, 2025 (வியாழக்கிழமை) முதல் 7 நாட்களுக்குள் முழு பணத்தையும் திரும்பப் பெறலாம்.

உங்கள் தொடர்ச்சியான அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி, விரைவில் உங்களுடன் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். அன்புடன், டி.இமான் " என பதிவிட்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: மீண்டும் திரையில் வந்த நடிகர் விஜயகாந்த்.. படைத்தலைவன் படத்தைக் குறித்து கண்ணீர் மல்க பேசிய பிரபலங்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share