×
 

ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா மற்றும் சமந்தா..! ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த பதிவு..!

நடிகை சமந்தாவையும் நாக சைதன்யாவையும் மீண்டும் ஒன்றாக காண அவளுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

உலக சினிமாவில் நாகார்ஜுனாவிற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் வந்த "சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா" பாடலை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அதே போல் இவர் நடிகர் கார்த்திக்குடன் நடித்த 'தோழா' திரைப்படத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் நடிகர் நானியுடன் இவர் நடித்த டாக்டர் தாஸ் எம்பிபிஎஸ் எம்டி கோல்ட் மெட்டாலிஸ்ட் என்று சொல்லும் படங்களும் ஹீரோவாக, தாதாவாக வரும் கேரக்டர்கள் அனைத்துமே பின்னி பெடலெடுக்கும்.

இப்படி பட்ட நாகார்ஜுனாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒன்று நாகசைதன்யா மற்றொருவர் அகில் அக்கினேனி. இருவரும் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக வளம் வந்து கொண்டு இருக்கின்றனர். இப்பயி இருக்க, நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு, இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். இந்த சூழலில் நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யா தரப்பில் இருந்து ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுத்த நிலையில் அதனை சமந்தா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: மச்சக்காரி சமந்தா முதுகில் இருந்த டேட்டோ எங்கப்பா..! திணறும் இணையவாசிகள்..!

சமந்தாவுடனான பிரிவுக்கு பின், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்பின் முதலில் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த இவர்களது திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது. 

இதனால் படங்களில் நடிக்காமல் அமைதியாக இருந்த சமந்தா, பல இடங்களில் தனது தனிமையை போக்க சுற்றி கொண்டு இருந்தார். இப்படி இருக்கையில் சமீபகாலமாக இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் (Raj Nidimoru) சுற்றி திரிவதால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், தமிழில் நடிகர் சிம்பு, திரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான அட்டகாசமான திரைப்படம் தான் "விண்ணைத் தாண்டி வருவாயா". இந்த திரைப்படத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களும் கேட்பவர்களே வருடி இழுப்பதாகவே இருக்கும். 

இப்படிப்பட்ட படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அதன்படி, தெலுங்கில் "யே மாய சேசாவே" என்ற பெயரில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது.. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் இருவரது காதலுக்கும் அச்சாணியாக இருந்த திரைப்படமான இத்திரைப்படத்தை இன்றும் ரசிகர்கள் தங்கள் காதல் கிளாசிக் திரைப்படங்களாக பார்க்கின்றனர். இப்படிப்பட்ட திரைப்படத்தை வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் ரீ - ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர் தெலுங்கு தயாரிப்பாளர்கள். 

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தரைப் படம் ரீ - ரீலீஸ் செய்யப்படும் என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

இதையும் படிங்க: துபாயையே மிரள விட்ட நடிகை சமந்தா..! செல்பி எடுக்க படையெடுத்த கூட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share