×
 

அப்ப நான் 11ம் வகுப்பு படித்தேன்.. கூட படித்த பையனால் வந்த வினை..!! நடுராத்திரியில் நடந்த கொடுமை.. பூஜிதா பொன்னாடா ஓபன் டாக்..!

நடிகை பூஜிதா பொன்னாடா, தான் 11ம் வகுப்பு படித்தபொழுது நடந்த சிஷயத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் இளம் நடிகைகளில் ஒருவர் பூஜிதா பொன்னாடா. இயல்பான நடிப்பு, அழகான திரைநிலை மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவற்றால் அவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார். குறிப்பாக துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டும் நடிகையாகவும் அவர் அறியப்படுகிறார்.

தெலுங்கு திரையுலகில் ஆரம்பித்த அவரது சினிமா பயணம் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் விரிவடைந்துள்ளது. தமிழில் “செவன்”, “ஜாலியோ ஜிம்கானா”, “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்”, “படையாண்டா மாவீரா”, “யோகிடா” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெரிய அளவிலான வணிக வெற்றிகளை இன்னும் பெறாதிருந்தாலும், தொடர்ந்து பல மொழிகளில் வாய்ப்புகளை பெற்றுவரும் நடிகையாக பூஜிதா பார்க்கப்படுகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், ரசிகர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்து வருகிறார். படப்பிடிப்பு அனுபவங்கள், பயண புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தருணங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவதால் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: என் அம்மாவுக்கே இப்படி பண்ணிட்டாங்க.. அப்ப நீங்களும் உஷாரா இருங்க..!! மக்களுக்கு வார்னிங் கொடுத்த நடிகை வேதிகா..!

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பூஜிதா பொன்னாடா, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை மிகவும் உருக்கமாக பகிர்ந்துள்ளார். சிறுவயதில் நடந்த அந்த அனுபவம் இன்று வரை தனது மனதில் இருந்து நீங்கவில்லை என்று அவர் கூறியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

அவர் கூறுகையில், “நான் 11ஆம் வகுப்பு படிக்கும்போது, என்னுடன் படிக்கும் ஒரு பையன் somehow என் செல்போன் நம்பரை கண்டுபிடித்து எனக்கு போன் செய்து பேசினான்” என்று தெரிவித்துள்ளார். சாதாரணமாக பள்ளி பருவத்தில் நடைபெறும் ஒரு சம்பவமாக இதை பலர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பிறகு நடந்த விஷயம்தான் அவரை மிகவும் பாதித்துள்ளதாக பூஜிதா கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, “இதையை நான் நேராக என் தந்தையிடம் சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார். பொதுவாக பல குழந்தைகள் இப்படியான விஷயங்களை பெற்றோரிடம் சொல்ல தயங்கும் சூழலில், தன்னிடம் நடந்ததை நேர்மையாக பகிர்ந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவரது தந்தை காட்டிய எதிர்வினை தான் அவரை மனதளவில் மிகவும் பாதித்ததாக பூஜிதா தெரிவித்துள்ளார். “அவர் கோபத்தில் என் செல்போனை தூக்கி போட்டு உடைத்துவிட்டார்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் போது கூட அவர் மிகவும் வேதனையுடன் பேசியதாக கூறப்படுகிறது. “நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவே இல்லை. உண்மையை சொன்னது குற்றமா? என்று அப்போது மிகவும் வருத்தப்பட்டேன்” என்று அவர் மனம் திறந்து பேசியுள்ளார். பூஜிதாவின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக இளம் வயதில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே இருக்கும் நம்பிக்கை, உரையாடல் மற்றும் புரிதல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பல ரசிகர்கள், “அவர் செய்தது தவறே இல்லை”, “உண்மையை சொல்லும் குழந்தைகளை புரிந்துகொள்ள வேண்டும்”, “அந்த வயதில் இப்படியான அனுபவங்கள் மனதில் ஆழமாக பதியும்” என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர், “அந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் பாதுகாப்பு காரணமாக கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம்” என்றும் கூறி வருகின்றனர். ஆனால் அதே சமயம் குழந்தைகளின் உணர்வுகளையும் கவனிக்க வேண்டியது அவசியம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பூஜிதா மேலும், “அந்த சம்பவம் இன்னும் என் மனதில் இருந்து நீங்கவில்லை. அதை மறக்க முயற்சிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த வரிகள் பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. சினிமா பிரபலங்கள் பொதுவாக தங்களது வெற்றிகள், படங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் பூஜிதா போல சிலர் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மன வேதனைகளையும் வெளிப்படையாக பகிர்வது ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கிடையில் மனநல நிபுணர்கள் கூட இப்படியான சம்பவங்கள் குழந்தைகளின் மனதில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறி வருகின்றனர். குறிப்பாக பெற்றோரின் கோபமான எதிர்வினைகள், குழந்தைகள் எதிர்காலத்தில் உண்மைகளை பகிர அஞ்சும் நிலையை உருவாக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் தற்போது பலரும் “குழந்தைகள் பேசும்போது கேட்க வேண்டும்”, “அவர்களை குற்றவாளி போல உணர வைக்கக்கூடாது” போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பூஜிதாவின் பேட்டி இந்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை பூஜிதா தற்போது தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில புதிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் என அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மொத்தத்தில், நடிகை பூஜிதா பொன்னாடா தற்போது பகிர்ந்துள்ள சிறுவயது அனுபவம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ஒரு சாதாரண சம்பவமாக தோன்றினாலும், அது ஒரு இளம் பெண்ணின் மனதில் எவ்வளவு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது என்பதை அவரது பேட்டி வெளிப்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: CM விஜய் ஓகே.. ஆனா நடிகர் விஜய் பத்தி உங்களுக்கு தெரியுமா..! அவரு என்னலாம் பண்ணிருக்காரு தெரியுமா.. பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share