மாலத்தீவில் கவர்ச்சி உடையில் ஜோனிடா காந்தி..!! நடிகையின் அழகிய கிளாமர் போட்டோஸ் வைரல்..!
ஜோனிடா காந்தி மாலத்தீவில் கவர்ச்சி உடையில் கலக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள ஜோனிடா காந்தி, தற்போது தனது மாலத்தீவு பயணத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இசை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் என தொடர்ந்து பிஸியாக இயங்கி வரும் ஜோனிடா, அவ்வப்போது தனது தனிப்பட்ட தருணங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மாலத்தீவில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
ஏ.ஆர். ரகுமான் இசையில் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர்களில் ஜோனிடா காந்தியும் ஒருவர். அவரது குரலில் இருக்கும் தனித்துவமான இளமைத் தன்மை மற்றும் பாடல்களுக்கு ஏற்ப குரலை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவை ஆரம்ப காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இதையும் படிங்க: "பொல்லாதவன்" வாய்ப்பை தவறவிட்ட பசுபதி.. அதன்பிறகுதான் "அசுரன்"..! கமல்ஹாசன் முதல் வெற்றிமாறன் வரை.. சுவாரசியமான சம்பவங்கள்..!
குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம்பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அவர் அறிமுகமானார்.
அந்தப் பாடலுக்குப் பிறகு ஜோனிடா காந்திக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.
ஆரம்பத்தில் சில பாடல்களிலேயே கவனம் பெற்றிருந்த அவர், அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல்வேறு பாடல்களை பாடினார்.
இதன் மூலம் இளம் தலைமுறை ரசிகர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.
இதையும் படிங்க: பெருமையா பேசியதால் போஸ்டிங்கா..!! கோயில் அறங்காவலர் நியமன மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி.. தமிழக அரசின் புதிய உத்தரவு ..!