கழுத்தை நெரித்து வெளியேற்றப்பட்ட நடிகரின் மனைவி...! பெற்ற கடனுக்காக வங்கி ஊழியர்கள் செய்த அட்டூழியம்..!
நடிகரின் மனைவியின் வீட்டை ஜப்தி செய்துள்ளனர் வங்கி ஊழியர்கள்.
சினிமா மற்றும் சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் மறைந்த முன்னாள் நடிகர் ராஜசேகர். அவர் வீட்டுக் கடனை சரிவர கட்டாததால் இன்று அவருடைய வீட்டை ஜப்தி செய்து உள்ளனர் வங்கி ஊழியர்கள்.
தமிழ் திரை உலகில் 'நிழல்கள்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமான ராஜசேகர், பல திரைப்படங்களை இயக்கியும், பல சின்னத்திரை தொடர்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக அவர் உயிர் இழந்தார். இப்படிப்பட்டதான சூழலில் மரணம் அவரை நெருங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் வீடு ஒன்றை வாங்குவதற்காக வங்கியில் இருந்து அவர் கடனை பெற்றதாக கூறப்படுகிறது. அக்கடனின் அடிப்படையில் வீடு வாங்கி இருந்த அவர் கிரகப்பிரவேசம் செய்து குடி பெயர்வதற்கு முன்பாகவே இறந்துவிட்டார்.
இந்த நிலையில், குழந்தைகள் இல்லாத சூழலில் அவரது மனைவி தாரா மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இப்படி இருக்க, சில வருடங்களாகவே வீடு வாங்குவதற்காக பெறப்பட்ட கடனை செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தாராவிற்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தாரா தனது கணவர் மறைவுக்கு பின்பாக தனக்கு எந்தவித வருமானமும் இல்லாததால் தானே தவித்து வருவதாகவும் எப்படியாவது தங்களுடைய கடனை திருப்பி செலுத்தி விடுவதாகவும் கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனக்கு வேறொரு சொத்து இருப்பதாகவும் அதனை வைத்து எப்படியாவது உங்கள் கடனை அடைத்து விடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பலவருட கனவு நிறைவேறும் தருணத்தில் பறிபோன உயிர்.. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு பிரபலங்கள் அஞ்சலி..!
ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் ராஜசேகருடன் சினிமாவில் பயணித்த பலரிடமும் பிரபலங்களிடமும் உதவி கேட்டு இருக்கிறார் ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இப்படி இருக்க, நீண்ட நாட்களாக வங்கிக்கு பணம் செலுத்த முடியாததால் அவருடைய வீட்டை வேறொருவருக்கு வங்கி விற்று இருப்பதாகவும், அந்த வீட்டை பெற்றுக் கொண்ட நபருக்கு வீட்டை கொடுக்காமல் ராஜசேகரின் மனைவி தாரா நாள் கடத்தி வந்ததால் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் அந்த நபர். இதனைத் தொடர்ந்து அவருடைய வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜசேகர் வீட்டை, வங்கி ஊழியர்கள் விற்ற நபருக்கு சீக்கிரம் திருப்பி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும் வங்கி தரப்பில் காலம் தாழ்த்தப்பட்டதால் இன்று காலை மீண்டும் அந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இதனால் பதறிப்போன வங்கி ஊழியர்கள் காவல்துறை உதவியுடனும் நீதிமன்ற ஊழியரின் உதவியுடனும் தாராவின் வீட்டுக்குச் சென்று வீட்டை சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் இதைக் குறித்து அப்பகுதியில் உள்ள பலரும் எழுப்பும் கேள்வி என்னவென்றால், வங்கி மறைந்த நடிகருக்கு எதன் அடிப்படையில் கடன் வழங்கியிருக்கிறது, அவருக்கு நிரந்தர வருமானம் என்பதே கிடையாது என்னும் வகையில் அவர் இன்சூரன்ஸ் ஏதாகிலும் எடுத்திருக்கிறாரா என பல கேள்விகளை கேட்டு இருக்கின்றனர். அனால் அதற்கு எந்தவித பதில்களும் சொல்லாமல் வங்கி ஊழியர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேதனை தாங்க முடியாத தாரா, கண்ணீர் மல்க ரோட்டில் நின்றபடி, என்ன செய்கிறது என்று எனக்கே தெரியவில்லை, பல பேரிடம் உதவி கேட்டேன் நடிகர் சங்கம் சின்னத்திரை நடிகர் சங்கம் என எல்லாரிடமும் உதவி கேட்டேன் எல்லோரும் கையை விரித்து விட்டார்கள். யாராகிலும் ஒருவர் உதவி செய்தால் கூட நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். தற்பொழுது அவர் மறைவிற்குப் பின்பு நடுரோட்டில் நிற்கும் நிலைமைக்கு நான் தள்ளப்பட்டு இருக்கிறேன் என்று வேதனையுடன் கூறிவிட்டு செய்வதறியாது நின்றார் தாரா.
இதையும் படிங்க: ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை..! கணவரின் முகத்தில் குத்துவிட்ட இந்திரஜா சங்கர்..!