படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!
எடிட் செய்யப்பட கூலி படத்தை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரிடம் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை என்ற சூழல் இருந்தது ஆனால் இப்பொழுது யார் கண் பட்டதோ என தெரியவில்லை புது நடிகர்களின் முகங்களும் இங்கு தென்படுவதில்லை. காலகாலமாக நடித்து வரும் நடிகர்களின் முகங்கள் மட்டுமே திரையில் தோன்றி வருவதால் ரசிகர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அரசியலில், வாரிசு அரசியல் என்று அனைவரும் கூறுவதை போல் தான் சினிமாவிலும் வாழையடி வாழையாக வாரிசுகள் தோன்றுவது வழக்கமாக இருக்கிறது. இப்படியே சினிமாவில் வாரிசுகளே நடித்து வந்தால் வெளியுலகத்தில் இருக்கக்கூடிய பல திறமை உள்ளவர்கள் எப்படி நடிக்க முடியும், எப்படி தனது திறமைகளை வெளிக்காட்ட முடியும் என்ற சந்தேகம் இன்றும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் தற்பொழுது நடிகர் சங்க தலைவர் ஆன விஷால், இனி படத்தில் நடிக்க வேண்டுமானால் நடிகர் சங்கத்திலிருந்து கொடுக்கப்படும் உறுப்பினர் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இப்படி எல்லாம் சட்டம் வைத்தால் எப்படி புது முகங்கள் சினிமாவில் எடுப்பார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்து உள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!
அதுமட்டுமல்லாமல் 70 வயதில் இருப்பவர்களில் இருந்து 40 வயது வரை உள்ள நடிகர்கள் மட்டுமே தற்பொழுது தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகின்றனர். பெரிய படங்கள் என்றால் கமலஹாசன், ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, விஷால், ஆர்யா, சந்தானம், சமுத்திரகனி, சசிகுமார் என பல நடிகர்கள் மட்டுமே தற்பொழுது தமிழ் சினிமாவை ஆண்டு வருகின்றனர். ஆதலால் ரசிகர்கள் புது முகங்களுக்காகவும் தற்பொழுது ஏங்கி வருகின்றனர். குறிப்பாக 90 காலகட்டங்களில் பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்த இயக்குனர்களே தற்பொழுது உள்ள ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட படங்களை எடுக்க வேண்டும் என்பதில் திணறிக் கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது பழைய இயக்குனர்களை விட புதியதாக வரும் இயக்குனர்களுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது. அதற்கு உதாரணம் தான் நெல்சன் திலிப்குமார், லோகேஷ் கனகராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், பிரதீப் ரங்கநாதன், அட்லி, ஆதிக் ரவிச்சந்திரன், அரவிந்த் ஜீவந்த், அஸ்வத், கார்த்திக் சுப்புராஜ் என பல இயக்குனர்கள் தற்பொழுது ஸ்டார் இயக்குனர்களாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களது வெற்றிக்கு காரணம் இன்றைய தலைமுறைக்கு எப்படி படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை யோசிப்பதே காரணம்.
அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் என்றாலே தற்பொழுது ரசிகர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுப்பதாக இருக்கிறது. எப்படி ஹாலிவுட் சினிமாக்களில் ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன், நார்னியா, அவெஞ்சர்ஸ் என பல திரைப்படங்கள் சீரியஸ்களை போல் வருகிறதோ அதே போல் தான் லோகேஷ் கனகராஜின் ஒவ்வொரு படங்களும் வெவ்வேறு ஹீரோக்களுடன் இருந்தாலும் அத்தனை படங்களும் கடைசியில் ஒரே பேட்டனில் முடிவதை போல் எடுத்துக் கொண்டு வருகிறார். இவர் இயக்கிய "மாநகரம்" திரைப்படம் பலரது பாராட்டைப் பெற்று வந்த நிலையில் அடுத்ததாக இவர் இயக்கிய "கைதி" திரைப்படம் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இத்திரைப்படத்தில் இரவு காட்சிகளை அதிரடியாக வைத்து அர்ஜுன் தாசினுடைய வரிகளில் "இவர்களின் தலைகளை கொண்டு வருபவர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்" என்ற ஒரே வார்த்தையில் படத்தை ஓஹோ என கொண்டு சென்றவர். அதுமட்டுமல்லாது இதனை அடுத்து அவர் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவரது பெயரில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. விஜய் நடித்த கில்லி படத்தில் வரும் பாடலை அட்டகாசமாக மீண்டும் ஒரே சீனில் ரீகிரியேட் செய்து ரசிகர்களை மகிழ்ச்சி பொங்க செய்தார் லோகேஷ் கனகராஜ். இதை அடுத்து, தனது வாழ்க்கையில் தனது கனவு நாயகனாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசனை வைத்து "விக்ரம்" திரைப்படத்தை அட்டகாசமாகவும் அதிரடியாகவும் இயக்கி இன்றைய தலைமுறை மட்டுமல்லாது 90 கால கட்ட தலைமுறைகளையும் தனது கைக்குள் அடக்கி வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இப்படி மிகப்பெரிய தலைகளை வைத்து தன்னுடைய அனைத்து படங்களையும் இயக்கி இன்று வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அட்டகாசமான கூலி திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக இந்த 'கூலி' படம் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில், தற்பொழுது இந்த படத்தின் முதல் பாகம் அனைத்தும் எடிட் செய்து முடித்து இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜயையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் முதல் பாகம் அட்டகாசமாகவும் வெறித்தனமாகவும் இருப்பதாகவும் கண்டிப்பாக இத்திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் எனவும் சூப்பர் ஸ்டார் அவர்களை வாழ்த்தி சென்றதாக பட குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் இரண்டாவது பாகத்தை சீக்கிரமாக எடிட் செய்து முழு படத்தையும் பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் கூறிச் சென்றதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!