×
 

இந்த படத்தில் பார்க்க எப்படி இருக்கேன் தெரியுமா... தன்னைத்தானே புகழ்ந்த ரவி மோகன்..!

கராத்தே பாபு படத்தில் தனது கதாபாத்திர அழகை தானே ரசித்து கொண்டுள்ளார் நடிகர் ரவிமோகன். 

ஜெயம் ரவி என்று அழைப்பதை சற்று நிறுத்தி இனி வரும் காலங்களில் ' ரவி மோகன்' என்ற உண்மையான பெயரில் மட்டும் தன்னை அழையுங்கள். அதுவே எனக்கு பிடிக்கும் என்ற இவர், தமிழில் அவருடைய  தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். இதனால் தான் ரவி மோகன் என்ற இவரது பெயர் மக்களால் ஜெயம் ரவி என மாறியது. இதனை அடுத்து "எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி" என்ற படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

பல பெண்களின் மனதில் கதாநாயகனாகவும் திகழ்ந்தார், அதற்கு பின் தாஸ், மழை, இதயத் திருடன்,சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதிபகவன், நினைத்தது யாரோ, நிமிர்ந்து நில், பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், டிக் டிக் டிக், மற்றும் அடங்கமாறு இன்னும் பல படங்களில் நடித்து உள்ளார். 

இதையும் படிங்க: ஆர்த்தி ரவி ஜீவனாம்சம் கேட்டதால் ரவிமோகன் எடுத்த அதிரடி முடிவு..! என்ன செய்திருக்கார் பாருங்க..!

இவர் தனது மனைவியின் மீது ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு எடுத்து அதற்க்கான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஏறிய ரவிமோகன் நடிகர் வினையை பார்த்து  "ப்ரோ ஆசம் ப்ரோ.. ஜில் ப்ரோ.." என்று சொன்ன டயலாக் பலரால் பகிரப்பட்டு வருகிறது . பலரும் விவாகரத்து பெற்றால் கவலையில் இருபார்கள் ஆனால் ரவி மோகன் தற்பொழுது தான் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் என பலராலும் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரனும் ஐசரி கணேஷ் மகள் இல்லாதிருமண விழாவில் தெரிந்தது. அதில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் மகிழ்ச்சியாக வருவதை பார்த்தவுடன் அனைவருக்கும் தெரிந்தது அவர் மகிழ்ச்சிக்கு யார் காரணம் என. 

இந்த நிலையில், சமீபத்தில் ஈஞ்சம்பாக்கத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரவி மோகனிடம், உங்களின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என ரசிகர்கள் மற்றும் பத்திக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர், வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிபில், ஏ.ஆர்.ரகுமான் இசையில்,சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி முதலானோர் தன்னுடன் நடித்து வெளியாகவுள்ள "ஜீனி" படத்திற்கான அப்டேட் விரைவில் வரும் என்றார். மேலும் தனது 34வது படமான, கணேஷ் பாபு அற்புதமாக இயக்கி வரும், 'கராத்தே பாபு' படத்தின் படப்பிடிப்பும்  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் அப்டேட்டும் உங்களுக்கு விரைவில் தெரியவரும் என கூறிஇருந்தார். 

அதன்படி தற்பொழுது " கராத்தே பாபு படத்தை குறித்து அப்டேட் தெரிவித்துள்ளார் ரவிமோகன், அதில், கிட்டதட்ட இறுதிகட்ட படப்பிடிப்பு நெருங்கிவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே எடுக்கவேண்டி உள்ளது. இந்த படத்தில் நான் இருப்பது போன்ற காதாபாத்திரம் மற்றும் காஸ்ட்டியூமில் என்னை நானே இதுவரை கண்டதில்லை. உண்மையில் இந்த படத்தின் கதையை கேட்டபொழுது புதிதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்தால் என்ன என்ற எண்ணம் மட்டும் தான் எனக்குள் இருந்தது. அது ‘கராத்தே பாபு’ படத்தில் உண்மையாக நடக்கிறது. இப்படம் என் சினிமா கெரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  

இதையும் படிங்க: சட்டம் தன் கடமையை செய்யும்.. பாடகி கெனிஷா வெளியிட்ட பகீர் அறிக்கை..! சரண்டரான நெட்டிசன்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share