திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் சொன்ன காட்டமான பதில்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
நடிகை ஸ்ருதிஹாசன் தனது திருமண ஆசையை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலைக் கேட்டால் எப்படி ஏ.ஆர்.ரகுமான் நினைவுக்கு வருகிறாரோ அதேபோல் தான் நடிகை சுருதிஹாசனும் நம் நினைவுக்கு வருவார் அந்த அளவிற்கு குரலில் அநேகரை வசியம் செய்த ஸ்ருதிஹாசன் நடிப்பில் பலரை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.இப்படி உலக நாயகன் கமலஹாசனுக்கும் நடிகை சரிகாவுக்கும் பிறந்தவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.
இயற்கையாகவே ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளர் மற்றும் பாடகர், திரைப்பட நடிகை என பல்வேறு கோணங்களில் சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட இவர் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கமல் சரிகா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தார். உண்மையிலேயே இவரது இயற்பெயர் சுருதி ராஜலட்சுமி என்பதாகும். தனது பள்ளி படிப்பினை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பயின்ற ஸ்ருதிஹாசன், தனது கல்லூரி படிப்பை மும்பையில் படித்து முடித்தார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய் வெளியிட்ட போஸ்டர்..! பரவசத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!
இதனை அடுத்து, கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் முறைப்படி இசையை கற்றுக் கொண்டார்.உண்மையிலேயே ஸ்ருதிஹாசன் தனது ஆறாவது வயதிலேயே கமலஹாசனின் தேவர்மகன் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார். அதன் பிறகு ஹிந்திலும் தனது பாடல்களை பாடி பலரது மனதையும் கவர்ந்தார். இதனை தொடர்ந்து, தனது தகப்பனின் எந்த சாயலிலும் சினிமாவில் நுழையக்கூடாது தனது முயற்சியிலே நுழைய வேண்டும் என்று நினைத்த ஸ்ருதிஹாசன், 2000 ஆவது ஆண்டில் வெளியான 'ஹே ராம்' திரைப்படத்தில் தனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்,
இதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்புகள் இடையே வெளியான 'லக்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்தப் படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததை அடுத்து, நடிகர் சூர்யாவுடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு வெளியான 'ஏழாம் அறிவு' திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழில் அவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.2009 ஆம் ஆண்டில் கமலஹாசனின் நடிப்பில் வெளியான 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படத்தில் இசை அமைத்து இசையமைப்பாளராக உருவெடுத்த ஸ்ருதிஹாசன்
அதற்கு பின்பு, ஏழாம் அறிவு, த்ரி, பூஜை, வேதாளம், செல்வந்தன், இஞ்சி இடுப்பழகி, புலி, s3, புத்தம் புது காலை, ஹாய் நான்னா, சலார் உள்ளிட்ட திரைப்படங்களில் இதுவரை நடித்தும் இருக்கிறார். மேலும் இதுவரை தேவர் மகன், ஹேராம், வாரணம் ஆயிரம், உன்னைப்போல் ஒருவன், மான் கராத்தே, என்னமோ ஏதோ, லாபம், தமிழ் மொழி உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை பாடி அசத்தி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இந்த நிலையில் தற்பொழுது தமிழில் ‛ரஜினியின் கூலி, விஜயின் ஜனநாயகன் மற்றும் டிரெயின்' போன்ற படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் அடுத்தபடியாக ‛சலார் 2' படத்தில் நடிக்க தயார் ஆகியிருக்கிறார்.
இந்த சூழலில் அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தனது திருமணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். அவர் பேசுகையில், " நானும் மனுஷி தான்.. ஆதலால் காதலிப்பது என்பது மிகவும் எனக்கு பிடித்தமான விஷயம் தான் என்றாலும் இதுவரை எனக்கு பிடித்தமான நபரை நான் சந்திக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் திருமணம் குறித்து நான் இன்னும் யோசிக்கவும் இல்லை. ஏனெனில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு துளிகூட இல்லை.
ஆனாலும் பார்க்கலாம் ஒருவேளை எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது இல்லையா..? கண்டிப்பாக அதற்கான சூழல் வந்தால் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது" என்று கூறி திருமணம் குறித்த கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: விஜயின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்.. பட்டையை கிளப்ப மீண்டும் வருகிறது தளபதியின் ஹிட் படம்..!