×
 

கள்ள ஓட்டு போட தமன்னா, சமந்தாவை பயன்படுத்திய மோசடி கும்பல்..! ஆட்டம் கண்ட தெலுங்கானா அரசியல் களம்..!

தமன்னா, சமந்தாவை பயன்படுத்தி கள்ள ஓட்டு போட திட்டம் தீட்டிய கும்பலால் தெலுங்கானா அரசியல் ஆட்டம் கண்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் அடுத்த கட்ட இடைத்தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத் நகரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சம் பார்த்துள்ளது. பிரபல நடிகைகள் சமந்தா ரூத் பிரபு மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் போலியான பதிவு இடம் பெற்றுள்ளது. இதனால், தெலுங்கானா அரசியல் வட்டாரத்திலும், சினிமா உலகத்திலும் பரபரப்பு நிலவுகிறது.

குறிப்பாக ஹைதராபாத் நகரின் முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ஜூப்லி ஹில்ஸ் வட்டாரத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்தப் பகுதியில் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பட்டியலை சமூக ஊடகங்களில் சிலர் வெளியிட, அதில் தமன்னா, சமந்தா, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் பெயரும் போட்டோவும் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சில இடங்களில் அந்தப் போட்டோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, “நடிகைகள் வாக்களிக்க ஹைதராபாத் வரப் போகிறார்களா?” என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், பின்னர் விசாரணையில் இது போலியான பதிவு என்று உறுதி செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணையில், சிலர் பிரபலங்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை இணையத்திலிருந்து எடுத்து, சிரிப்புக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்துக்காகவோ போலியாக பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதுபோன்ற தவறான பதிவுகள் தேர்தல் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாக கருதப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், “இந்த வகையான போலி பெயர் சேர்த்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் யார் சம்பந்தப்பட்டார்கள் என்பதும் விசாரணையில் வெளிவரும்” என தெரிவித்துள்ளனர். மேலும் சமந்தா மற்றும் தமன்னாவின் ரசிகர்கள் இதை கண்டித்துள்ளனர். “இவர்களின் பெயர், புகைப்படம் பயன்படுத்தி போலி வாக்காளர் பதிவு செய்வது கடுமையான குற்றம்,” “பிரபலங்கள் என்பதால் யாரும் அவர்களது அடையாளத்தை இப்படிச் சுரண்டக்கூடாது,” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி இருக்க இதுவரை சமந்தா, தமன்னா, அல்லது ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் தரப்பில் இதுகுறித்து எந்த உத்தியோகபூர்வமான பதிலும் வெளிவரவில்லை.

இதையும் படிங்க: ஹிரோ நிறைய பேர் இருந்தாலும்..மனசுக்கு பிடிச்சது அவர் ஒருத்தர் தான்..! நடிகை ருக்மிணி ஓபன் டாக்..!

இருப்பினும், அவர்களது ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் “இது போலியானது, தவறான தகவலை நம்ப வேண்டாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர். தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டுள்ளது. ஜூப்லி ஹில்ஸ் வாக்காளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. “வாக்காளர் பட்டியலில் போலியான புகைப்படங்கள் சேர்க்கப்பட்டிருப்பது நம்ப முடியாதது. இது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கலாம்” என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், ஆணையம் டிஜிட்டல் அடையாள சரிபார்ப்பு முறையை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வாக்காளர் பெயருடனும் ஆதார் இணைப்பு மற்றும் முக அடையாள சரிபார்ப்பு அவசியமாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த தமன்னா, சமந்தா ஆகியோரின் போலியான புகைப்படங்கள் தற்போது எக்ஸ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. பலரும் அதைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். “நடிகைகள் வாக்காளர் பட்டியலில் எப்படி வந்தார்கள்?” என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தேர்தல் முறையின் நம்பகத்தன்மை குறித்து பெரிய கேள்வி எழுப்புகிறது. வாக்காளர் பட்டியல் என்ற அடிப்படை ஆவணமே இவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டால், தேர்தல் நேர்மை எப்படி உறுதி செய்யப்படும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சில அரசியல் கட்சிகள் இதைத் தேர்தல் ஆணையத்தின் அலட்சியமாகக் குறிப்பிட்டுள்ளன. “இப்படி பிரபலங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், சாதாரண மக்களின் பெயர்கள் எவ்வளவு தவறாக சேர்க்கப்பட்டிருக்கும்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே தற்போது, தேர்தல் அலுவலர்கள் போலியான பதிவுகளை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் 300க்கும் மேற்பட்ட பெயர்கள் மறுபரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது முழுமையாக மின்னணு முறையில் சரிபார்க்கப்படும். ஆகவே தெலுங்கானா தேர்தல் சூழலில் உருவான இந்த வாக்காளர் பட்டியல் சர்ச்சை, சினிமா பிரபலங்களின் பெயர்களை அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

சமந்தா மற்றும் தமன்னா போன்ற பிரபலங்களின் அடையாளம் சீர்குலைக்கப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் இதனை எடுத்துக்காட்டாகக் கொண்டு, எதிர்காலத்தில் வாக்காளர் பட்டியல் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: மாடர்ன் உடையில் மனதை கொள்ளையிடும் நடிகை சான்வி மேக்னா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share