காமெடி நடிகர் வீட்டை இடித்த ஆர்யா..! விடாமுயற்சியுடன் வீட்டை கட்டி குடிபுகுந்த சந்தானம்..!
ஆர்யாவால் இடிக்கப்பட்ட வீட்டை மீண்டும் கட்டி குடிபெயர்த்துள்ளார் நடிகர் சந்தானம். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஹரோக்களுக்கு ஹீரோயின்கள் இருக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக காமெடிக்கு சந்தானம் இருக்க வேண்டும் என்ற காலத்தை மீண்டும் மக்கள் மனதில் கொண்டு வந்த படம் சுந்தர் சியின் மத கஜ ராஜா, இந்த படத்தை பார்த்த பின் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்தாலும் ஓரிரு படங்களில் ஆர்யா மற்றும் சிம்புவுடன் மீண்டும் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற குரல் தமிழ்நாடு எங்கும் ஒலித்துவருகிறது. மேலும், நடிகர் சந்தானம், பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக பல படங்களில் நடித்த வடிவேலுவையே பின்னுக்கு தள்ளியவர்.
நடிகர் சந்தானத்தின் ஆரம்ப வாழக்கை லொள்ளு சபாவில் தொடங்கியது. இதனை அடுத்து அவரது நகைச்சுவை திறமைக்கு பலனாக எஸ்.டி.ஆரின் "காதல் அழிவதில்லை"படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். ஆனால் பெரிதும் அப்படம் பேசப்படவில்லை என்றாலும், 2004 ஆம் ஆண்டு சிம்புவின் 'மன்மதன்' திரைப்படத்தில் நடித்து தனது காமெடி கதாபாத்திரத்திற்கு தனி இடத்தை உருவாக்கினார். பின் சிம்புவுடன் வல்லவன், காளை, சிலம்பாட்டம், வானம் மற்றும் ஒஸ்தி போன்ற படங்களில் ஹிட் கொடுத்தார். அதனை தொடர்ந்து சிறுத்தை,சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி, என பல படங்களில் இவரது நடிப்பும் இவரது காமெடியும் இல்லாமல் இருந்ததில்லை.
இதையும் படிங்க: கோலிவுட்டின் அடுத்த அனுஷ்கா! அழகில் சொக்க வைக்கும் நடிகை கீதிகா திவாரி!
இதனை தொடர்ந்து தற்பொழுது டிடி ரிட்டன்ஸ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இங்கு நான் தான் கிங்கு, குளு குளு, சபாபதி என பல படங்களில் நடித்து ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை அடுத்து இப்படத்தின் அடுத்த பாக, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மே 16ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியான இப்படம் பார்க்க அதிரடி காமெடிகளை கொண்டு இருந்தாலும், சூரியின் 'மாமன்' படமும் அதே நேரத்தில் வெளியானதால் செண்டிமெண்ட் படம் இவரது காமெடி படத்தை விட அதிக வசூலை பெற்றது. இந்த சூழலில், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃப்ரமோஷன் விழாவின் பொழுது பேசியிருந்த நடிகர் சந்தானம், அதில், " சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வீடு வாங்கினேன். அதில் சிலபல வேலைகள் இருந்ததால் ஆட்களை வைத்து வீட்டில் சிறிய சிறிய அல்டெர்நேட் வேலைகளை செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது, வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை ஆனால் போதும், எனது அம்மாவும் எனது மனைவியும் அந்த வீட்டிற்கு சென்று பூஜை செய்து விட்டு வருவது வழக்கம்.
அப்பொழுது ஒரு நாள் திங்கள் கிழமை போல் ஆர்யா எனக்கு போன் செய்து மச்சான் அடுத்த படத்தில் இருவரும் கமிட் ஆகியுள்ளோம். கதை நன்றாக உள்ளது என கூறி எங்கே இருக்கிறாய் என கேட்டார். நான் புது வீட்டின் முகவரியை கொடுக்க அங்கு வந்து வீட்டை பார்த்த ஆர்யா, மச்சா... என்னடா வீடு இது நல்லாவே இல்ல. எப்படி இதுல குடும்பத்தோட தங்குவ என சொன்னான். அவன் எது சொன்னாலும் சரியாக இருக்கும் என நான் நம்புவேன். ஆனாலும் அவரிடம் வீடு வாங்கிட்டேன் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என நான் சொன்னேன். ஆனால் ஆர்யா, நீ சும்மா இரு.. இன்னைக்கு சரின்னு சொல்லுவ அப்புறம் புலம்புவ என சொல்லி வீட்டை இடித்து புதியதாக கட்டலாம் என கூறி அவரது நண்பர்களை வரவழைத்து மூன்றே நாட்களில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி கட்டிடம் இருந்த சுவடே இல்லாமல் அனைத்தையும் அள்ளிக்கொண்டு சென்று விட்டார்கள்.
பின் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு பூஜை செய்ய வந்த எனது அம்மாவும் மனைவியும் வீட்டை காணவில்லை என தெருத்தெருவாக சுற்றி அழைந்து என்னிடம் கேட்க, அதன் பிறகு தான் நான் ஆர்யா சொல்லி செய்ததை சொன்னேன். என் அம்மா உடனே ஷாக் ஆகி, ஏண்டா படத்தில் தான் இப்படி இருக்கீங்கன்னு பார்த்தா நிஜமாவே இப்படி தான் இருப்பிங்களா என கேட்டாங்க. அந்த அளவிற்கு எங்கள் நட்பு இன்றும் உள்ளது" என்றார்.
இப்படி இருக்க, ஆர்யா சொன்னதை போல் வீட்டை இடித்த சந்தானம், வாஸ்து சாஸ்திரங்ககளை பார்த்து, மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அவரது பல கோடி மதிப்பிலான வீட்டை மிகவும் பிரமாண்டமாக கட்டி முடித்துள்ளார். இந்த நிலையில், தனது புதிய வீட்டில் தனது அம்மா, மனைவி குழந்தைகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருடனும் இணைந்து வீட்டில் பூஜை நடத்தி பால் காய்ச்சி குடியேறியுள்ளார் சந்தானம்.
இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெருமாள தொட்ட நீ கெட்ட..! வார்னிங் கொடுத்த நீதிமன்றம்.. கம்ப்ளீட்டாக பாடலை நீக்கிய சந்தானம் டீம்..!