இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் பாராட்டு மழை..!! கலக்கலான மாடர்ன் ட்ரெஸில் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா..!
‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானாவின் கலக்கலான மாடர்ன் போட்டோஸ் ரிலீஸ் ஆகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை உலகில் ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்ற தொடர்களில் ஒன்றாக ‘செம்பருத்தி’ தொடரை குறிப்பிடலாம்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த தொடர், 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி, இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை பரவலான ரசிகர்களை ஈர்த்தது.
இதையும் படிங்க: எப்போதுமே கவர்ச்சியாக இருந்த நடிகை ஷிவானி நாராயணனா இது..!! 15 ஆண்டு பழைய பட்டு புடவையில் எடுத்த போட்டோஸ் வைரல்..!
இந்த தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் ஆழமாக பதிந்தவர் நடிகை ஷபானா. பாரம்பரியமான கதாபாத்திரத்தில் வலுவான நடிப்பை வெளிப்படுத்தி, தொலைக்காட்சி நாயகிகளில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர் என்றே சொல்லலாம்.
‘செம்பருத்தி’ தொடரில் நாயகியாக நடித்த ஷபானா, தனது இயல்பான நடிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் கதாபாத்திரத்துடன் ஒன்றிய தோற்றம் ஆகியவற்றால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
நீண்ட காலம் ஓடிய இந்த தொடரின் வெற்றியில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்பட்டது. குடும்ப உறவுகள், காதல், சவால்கள் என பல்வேறு பரிமாணங்களில் நகர்ந்த அந்த தொடரில் அவரது கதாபாத்திரம் பல பெண்களுக்கு ஈர்ப்பானதாக இருந்தது.
‘செம்பருத்தி’ தொடருக்குப் பிறகு ஷபானா புதிய பயணத்தைத் தொடங்கினார். அதன்படி, சன் டிவியில் ஒளிபரப்பான மற்றொரு தொடரில் அவர் இணைந்தார்.
பெரிய எதிர்பார்ப்புடன் அந்த தொடரில் அவர் பங்கேற்றாலும், சில காரணங்களால் அது அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. இதனால் அந்த தொடரிலிருந்து அவர் நடுவிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும், அந்த அனுபவம் அவருக்கு புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.
சின்னத்திரை தொடர்களில் மட்டுமல்லாமல், ரியாலிட்டி ஷோக்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ஷபானா.
குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவரது சமைக்கும் திறமை மட்டுமல்லாமல், நகைச்சுவை தருணங்களிலும் அவர் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: ஒரு இன்ஸ்டாகிராம் REEL வீடியோவுக்கு ரூ. 76 லட்சம் வருமானமா..!! நடிகர் ஓரியின் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்..!