×
 

தமிழ் சினிமா இழந்த இரண்டு ஜாம்பவான்கள்..!! பாரதிராஜா - கே.பாக்யராஜை நினைவுகூரும் சிறப்பு நிகழ்ச்சி.. மிஸ் பண்ணிடாதிங்க..!

பாரதிராஜா - கே.பாக்யராஜை நினைவுகூரும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ் சினிமாவின் பொற்காலத்தை உருவாக்கிய இயக்குநர்களைப் பற்றி பேசும்போது முதலில் நினைவுக்கு வரக்கூடிய பெயர்களில் மிக முக்கியமானவர் பாரதிராஜா. கிராமத்து மண்வாசனையை திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற அவர், தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியாலும், இயல்பான கதாபாத்திரங்களாலும், புதிய திறமைகளை அறிமுகப்படுத்திய விதத்தாலும் தமிழ் திரையுலகில் அழியாத தடம் பதித்தவர். தனது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், "என் இனிய தமிழ் மக்களே" என்ற கம்பீரமான குரலில் ரசிகர்களை அழைக்கும் அவரது பாணி இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத நினைவாக உள்ளது.

ஆனால், தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிகுந்த வேதனையை ஏற்படுத்திய சம்பவமாக பாரதிராஜாவின் மறைவு அமைந்தது. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஜூன் 10-ஆம் தேதி காலமானார். இந்த செய்தி வெளியாகியதும் திரையுலகம் முழுவதும் அதிர்ச்சியில் மூழ்கியது. பல தலைமுறை நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

பாரதிராஜாவின் மறைவால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், அவரது சிஷ்யர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்பட்ட இயக்குநர், நடிகர் கே. பாக்யராஜின் மறைவும் திரையுலகை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே மாதத்திற்குள் குருவும், சிஷ்யனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: குஷ்பூ.. மகள் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடவே இல்ல..!! அப்படி என்ன நான் தப்பு செஞ்சேன்.. உருக்கமாக பேசிய ராதாரவி..!

கே. பாக்யராஜ், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர். குடும்பக் கதைகளை நகைச்சுவையுடன் இணைத்து ரசிகர்களை கவர்ந்த அவர், நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்திருந்தார். பாரதிராஜாவின் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் தனி இயக்குநராக உயர்ந்து ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்தார். குருவின் வழிகாட்டுதலால் உருவான முக்கியமான சிஷ்யர்களில் ஒருவராகவே அவர் எப்போதும் குறிப்பிடப்பட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமண நிகழ்ச்சியிலும் கே. பாக்யராஜ் உற்சாகமாக கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு திரை பிரபல்களுடன் அவர் இயல்பாக உரையாடிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனால் அவர் நலமாக இருப்பதாக அனைவரும் நினைத்திருந்த சூழலில், சில நாட்களிலேயே அவரது மறைவு செய்தி வெளியாகியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தகவல்களின் படி, தனது மனைவியுடன் வழக்கம்போல் காலை நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. சில நாட்களுக்கு முன்புவரை பொதுநிகழ்ச்சிகளில் சுறுசுறுப்பாக பங்கேற்ற ஒருவர் திடீரென உயிரிழந்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோரின் மறைவுக்கு பிறகு சமூக வலைதளங்கள் முழுவதும் அவர்களை நினைவுகூரும் பதிவுகள் அதிகரித்துள்ளன. பல நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள், இருவருடனும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பாரதிராஜா உருவாக்கிய நடிகர்களும், பாக்யராஜுடன் பணியாற்றிய கலைஞர்களும் அவர்களின் எளிமை, தொழில்முறை அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்தை நினைவுகூர்ந்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

பாரதிராஜா தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பல நடிகர்கள் பின்னர் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர். அதேபோல், பாக்யராஜும் தனது திரைக்கதைகள் மூலம் சாதாரண குடும்ப வாழ்க்கையை நகைச்சுவையுடன் இணைத்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். இவர்களின் படங்கள் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அதுவே அவர்களின் படைப்புகளின் காலத்தை வென்ற வெற்றிக்கு மிகப்பெரிய சான்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இருவரின் குரு-சிஷ்யன் உறவை நினைவுகூரும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'மகா நடிகை' நிகழ்ச்சியில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 'குரு – சிஷ்யன்' என்ற தலைப்பில் தயாராகி வரும் இந்த சிறப்பு எபிசோடில் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜின் திரைப்படப் பயணம், இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பு, தமிழ் சினிமாவுக்கு அவர்கள் அளித்த பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இருவரின் திரைப்படங்களில் இடம்பெற்ற முக்கியமான கதாபாத்திரங்களை மீண்டும் மேடையில் உயிர்ப்பிக்கும் வகையில் நடிப்பார்கள் என்றும், அவர்களின் பிரபலமான வசனங்கள் மற்றும் மறக்க முடியாத திரைப்பட தருணங்களும் இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர்களுடன் பணியாற்றிய சில திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டு நினைவுகளை பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே மாதத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஆளுமைகளை இழந்திருப்பது திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் கிராமத்து கதைகளை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பாரதிராஜா; மறுபக்கம் குடும்பக் கதைகளை ரசிகர்களின் இதயத்திற்கு கொண்டு சென்ற பாக்யராஜ்.

குருவும் சிஷ்யனும் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர்கள் உருவாக்கிய திரைப்படங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் சினிமா மொழி என்றும் ரசிகர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்த சூழலில், அவர்களை நினைவுகூரும் வகையில் ஒளிபரப்பாக உள்ள இந்த சிறப்பு நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அஞ்சலியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: இதுக்கப்பறம் நீங்க ரிலீஸ் பண்ணா என்ன..? பண்ணலைன்னா என்ன..!! 'ஜனநாயகன்' படத்தை online-ல பாத்தவங்க லிஸ்ட் தலையே சுத்தவைக்குதே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share