என்ன விஜய் உங்க பிறந்த நாளில் பாஜக சாயல் அதிகமாக வீசுது..! விஜய்க்கு யார் வாழ்த்து சொல்லி இருக்காங்க தெரியுமா..!
தீய சக்திய அழிக்க விஜய் வரனுமா...என்ன பாஜக சாயல் தவெக பக்கம் வீசுது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
எப்பொழுதும் வளவள எனப் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு அறிவு சற்று குறைவு என்றே சொல்வார்களாம். ஆனால் அதுவே அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பவர்களை ஞானிகள் என்று சொல்வார்களாம். அதே போல்தான் நடிகர் விஜய் எப்பொழுதுமே பார்க்க அமைதியான குழந்தை போல் இருப்பார். ஆனால் மேடையில் ஏறி மைக்கை கையில் கொடுத்தால் போதும்.. 'பாஸ் உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்லட்டுமா..' என ஆரம்பித்து ரசிகர்களை மட்டுமல்லாது ஆப்போசிட் பார்ட்டிகளையும் திணறடித்து விடுவார்.
அந்த அளவிற்கு தனக்கு முன்பாக எப்படிப்பட்ட எதிரிகள் இருந்தாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்வதில் வல்லவர்தான் இளைய தளபதி விஜய். சரி... இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர் என்றால் அவர் தான் விஜய். இப்படிப்பட்ட அவருடைய சம்பளம் என்று பார்த்தால் ஒரு படத்திற்கே ரூபாய் 200 கோடி தாண்டும். இப்படி அதிக சம்பளம் வாங்கும் நடிகர் எதற்காக திடீரென எல்லாவற்றையும் விட்டுட்டு அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறுகிறார் என்று பலருக்கும் பல சந்தேகங்கள் எழுந்து தான் வருகிறது.
ஏனெனில், ஆரம்ப காலகட்டத்தில் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசான 'பாரதிய ஜனதா கட்சி' தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியல் உள்ளே நுழைத்தது. ஆனால் அவரது ரசிகர்கள் இதனை விரும்பாத காரணத்தினால் எனக்கு கட்சியும் வேண்டாம் ஆட்சியும் வேண்டாம் ரசிகர்களின் அன்பு மட்டுமே போதும் என பேக் அடித்து விட்டார் ரஜினி.
இதையும் படிங்க: பற்றி எரியும் நெருப்புக்கு நடுவில் விஜய்..! 12 மணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனநாயகன் டீம்..!
அவர் அப்படி செய்யவில்லை என்றால் இன்றைக்கும் தனது ரசிகர்களின் அன்பை இழந்திருப்பார். ஆனால் நேரம் பார்த்து தனது திரையுலகத்தையே நான் நம்பி இருக்கிறேன். அங்கே சென்று விடுகிறேன் என்று சொன்னதால் இன்று அவருடைய படங்கள் பல கோடிகளைத் தாண்டி வசூலித்து வருகிறது. சரி.. ரஜினிக்கு வந்த அதே எதிர்ப்பு விஜய்க்கு இன்னும் வரவில்லையே. ஏனெனில் அவருடைய கட்சி பெயரை கேட்டதிலிருந்து அவர் அரசியலில் நுழைந்த வரைக்கும் அவருக்கு பல ஆதரவுகள் தான் அதிகமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
ஆனால் தற்பொழுது விஜயினுடைய ஆக்டிவிட்டீஸ்களை பார்த்தால், உண்மையில் அவர் பக்கமாக பிஜேபியினுடைய சாயல் வீசுகிறது என்றே பலரும் கூறி வருகின்றனர். ஆனால் மக்களின் பணியே எனக்கு மகத்தான பணி என்று சொல்லி களம் இறங்கி இருக்கும் விஜய், ஜனநாயகன் திரைப்படத்தை முற்றிலுமாக முடித்துவிட்டு தற்பொழுது முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கி இருக்கிறார்.
அரசியல் என்றால் உங்களுக்கு என்ன என கூட தெரியாது விஜய்... என கூறிவரும் சீனியர்கள் மத்தியில் 'கத்துக்கிட்டா போச்சி' என கெத்தாக சுற்றி வருகிறார் விஜய். இப்படி இருக்க ஜூன் 22 ஆம் தேதியான இன்று அவரது பிறந்தநாளை நாடே கொண்டாடி வரும் வேளையில் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்துக்களை அள்ளி குவித்து வருகின்றனர்.
இப்படி இருக்க, தற்பொழுது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மிகவும் பிடித்தமான ஒருவர் என்றால் அவர்தான் "தமிழிசை சௌந்தரராஜன்". ஏனெனில் இன்றும் அவர் பாஜகவில் இருந்தாலும் அவரது பேச்சுக்கும் அவரது சிரிப்பிற்கும் அவரது பாவனைகளுக்கும் பல ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட அவர் இன்று விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தீய சக்திகளை ஒடுக்கி அழிக்க வேண்டுமென பதிவிட்டு இருப்பது பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அதன்படி தனது எக்ஸ தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் " என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்களும் தொண்டர்களும் விஜய் எது செய்தாலும் நன்மையை மட்டுமே செய்வார் என அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய குட்டி தளபதி..! இனிமே எல்லாம் இவர்தானாம்..!