×
 

நடிகரை தூங்கவிடாமல் செய்த அந்த மாதிரி படம்..! பதற்றத்துடன் வெளியே சொன்ன மணிகண்டன்..!

மணிகண்டன் இன்டர்வியூ இணையத்தில் ட்ரெண்ட்டாகியுள்ளது.

உழைத்தால் முன்னேற முடியும் என்று பலர் கூறுவார்கள் ஆனால் கடுமையாக உழைத்தால் நம் முன்னேற்றம் வானளவு இருக்கும் என்பதற்கு உதாரணம் என்றால் அவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் ஆரம்ப சினிமா வாழ்க்கையில் கையில் பணம் கூட இல்லாமல், தான் உழைத்த சம்பளமான ரூ.150க்காக பல கிலோமீட்டர் அலைய வைக்கபட்டவர். மேலும், தனது நண்பர்களின் உதவியில் பல நாட்கள் வாழ்க்கையை கழித்து கொண்டு இருந்தவரை உற்சாகப்படுத்திய அவரது நண்பர்கள், பிரபல டீவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் உற்சாகப்படுத்த, நண்பர்களின் ஆசைக்காக தனது கெரியரை சினிமாவில் ஆரம்பித்தார்.

பின் சினிமாவில் பல பிரபலங்களுக்கு பின்னணியாக குரல் கொடுத்து வந்தார். நீண்ட நாட்கள் சினிமா வாழ்க்கையில் சரியான சம்பளமும் உணவும் இல்லாமல் கஷ்டப்பட்ட மணிகண்டனுக்கு பல நாள் உழைப்பின் பலனாக துணை நடிகராக "விக்ரம் வேதாவில்" மாதவன் மற்றும் விஜய்சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் 'காதலும் கடந்து போகும்' போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது நீண்ட நாள் துணை நடிகருக்கான உழைப்புக்கு பலனாக அமைந்தது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம். 

இதையும் படிங்க: என்ன விஜய்.. உங்க பேச்சுல பாஜக சாயல் தெரியுதே.. நீட்-க்கு ஆதரவா பேசுறீங்க..! சாட்டையை சுழற்றிய ப்ளூ சட்டை மாறன்..!

இதில் 'ராஜாக்கண்ணு' என்னும் கதாபாத்திரத்தை கண்முன் கொண்டுவந்து அனைவரையும் கண்கலங்க வைத்தார். இதனை தொடர்ந்து, ஒரு மனிதனுக்கு குறட்டை எவ்வளவு பாதிப்பை தருகிறது எனவும் காதலிப்பவர்களுக்கு குறைவுகள் பெரிதல்ல என்பதை உணர்த்தும் படமான 'குட் நைட்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதில் அவரது அபார நடிப்பின் திறமையை பார்த்த இயக்குனர் ஒருவர் 'லவ்வர்' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

கோபத்தை குறைத்து கொண்டு உழைப்பால் முன்னேறி காண்பிக்கும் கதாநாயகனாக இப்படத்தில் நடித்து இருப்பார். இதுவரை நடித்த அனைத்து படங்கள் அனைத்திலும் ஹிட் கொடுத்த மணிகண்டனுக்கு தற்பொழுது வெளியான "குடும்பஸ்தன்" திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடி தளங்களிலும் 50மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி அடைந்துள்ளது. இப்படி இருக்க, சமீபத்தில் தனியார் சேனலுக்கு மணிகண்டன் கொடுத்த பிரத்தியேகப் பேட்டியில் மனம் திறந்து பேசி இருந்தார். 

அதில், 'பொதுவாக நான் பேய் படங்களை அதிகம் பார்க்க மாட்டேன். காரணம் அதனை பார்த்து அதிகம் பயப்படுவேன். அப்படி தான் ஒருநாள் தெரியாமல் 'அன்னபெல்' திரைப்படத்திற்கு போய்விட்டேன். அவ்வளவு தான், படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த என்னால் தூங்கவே முடியவில்லை. எனக்கு ஆன்மீகத்தில் பெரிதாக நம்பிக்கையும் இருந்ததில்லை. ஆனால் எழுத்தாளராக என்னுடைய முதல் படமே பீட்சா2 தான். உண்மையில் எனக்கு பேய் படங்களில் நடிக்க வேண்டும், அன்னபெல் மாதிரி ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்பது தான் நீண்ட நாள் ஆசை' என தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: இப்படி ஒரு டைட்டில் உள்ள படத்தில் இசையமைக்கிறாரா இளையராஜா..! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share