ஏலேய்..பண்டிகைய கொண்டாடுங்களே..!! தியேட்டரில் ஜனநாயகன்.. CM விஜயின் படத்துக்கு நாள் குறிச்சாச்சி.. குஷியில் இளசுகள்..!
CM விஜயின் ஜனநாயகன் பட ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிய திரைப்படங்களில் முதன்மையான இடத்தை பிடித்திருப்பது “ஜனநாயகன்” திரைப்படம் தான் என்று சொல்லலாம். நடிகர் விஜய்யின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு அவர் நடித்த கடைசி திரைப்படமாக இது உருவாகியிருப்பதால், ஆரம்பத்திலிருந்தே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதிலும் குறிப்பாக சமூக கருத்துக்களையும் வணிக அம்சங்களையும் இணைத்து திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர் ஹெச். வினோத் இந்த படத்தை இயக்கியிருப்பது, “ஜனநாயகன்” குறித்த ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது.
“சதுரங்க வேட்டை”, “தீரன் அதிகாரம் ஒன்று”, “வலிமை”, “துணிவு” போன்ற படங்கள் மூலம் தனக்கென தனி பாணியை உருவாக்கிய ஹெச். வினோத், முதன்முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக இது விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டதால், ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான அரசியல்-ஆக்ஷன் திரைப்படமாக “ஜனநாயகன்” உருவாகும் என ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்க்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இளம் நடிகை மமிதா பைஜு, நடிகை பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரம்மாண்டமான தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்ற கே.வி.என் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய சினிமாவிற்கு கிடைத்த கௌரவம்..!! 10-வது சர்வதேச அனிமே விருது விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா..!
“ஜனநாயகன்” திரைப்படம் முதலில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டங்களுக்கு தயாராக இருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையில் சிக்கியது. அரசியல் சார்ந்த சில காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து சென்சார் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனால் படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதையடுத்து படக்குழு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினர் நீதிமன்றத்தை நாடியதாகவும், விரைவில் பிரச்சனை தீர்ந்து படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியானது. ஆனால் எதிர்பார்த்தபடி சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால், படக்குழு அந்த வழக்கை வாபஸ் பெற்று ரீவைசிங் கமிட்டியை அணுகியது. படத்தை மீண்டும் பரிசீலனை செய்து விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் அதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. “ஜனநாயகன்” திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதாக தகவல்கள் வெளியானது. பின்னர் முழு திரைப்படமே சட்டவிரோத இணையதளங்களில் பரவியதாக கூறப்பட்டதால், இது தயாரிப்பு நிறுவனத்திற்கும் மொத்த தமிழ் திரைப்படத் துறைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல கோடி ரூபாய் செலவில் உருவான ஒரு பெரிய திரைப்படம் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே கசிந்திருப்பது, திரையுலகில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் சூழலும் இந்த படத்தின் வெளியீட்டில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியது. தேர்தல் காலத்தில் அரசியல் சார்ந்த படங்களை வெளியிடுவது கூடுதல் சர்ச்சைகளை உருவாக்கக்கூடும் என்பதால், படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்.
தேர்தல் முடிந்த பிறகு தற்போது ரசிகர்கள் மீண்டும் “ஜனநாயகன்” திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து இதுகுறித்து ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக “விஜய்யின் கடைசி படம் எப்போது?” என்ற கேள்வி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர், “இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படம் வெளியாகும்” என்று தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவல்கள் வெளியாகத் தொடங்கின.
அதில் முக்கியமாக, திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் “புக் மை ஷோ” இணையதளத்தில் “ஜனநாயகன்” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜூன் 22ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அந்த நாளை முன்னிட்டு அல்லது அதற்கு சில நாட்களுக்கு முன்பாக படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும், மற்றொரு இணையதளத்தில் “U/A 16+” தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளதாக பதிவிடப்பட்டிருப்பதும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் இறுதிக்கட்ட பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தற்போது “ஜனநாயகன்” திரைப்படம் மீண்டும் தமிழ் சினிமாவின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதாலும், அவர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு வெளியாகும் முதல் படம் என்பதாலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வரலாற்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். தற்போது அனைவரது கவனமும் கே.வி.என் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நோக்கி திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: கிரிக்கெட் வீரரை கலாய்த்த நடிகர்..!! கடுப்பான நெட்டிசன்கள்.. மன்னிப்பு கேட்டு சரண்டரான ராம் சரண்..!