வைஷ்ணவி எல்லாம் ஒரு ஆளு.. விஜய் நற்பணி மன்றம் பத்தி என்ன தெரியும் உனக்கு - கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..!
விஜய் நற்பணி மன்றம் பத்தி என்ன தெரியும் வைஷ்ணவிக்கு என ஆவேசமாக பேசியுள்ளார் பாடகி சுசித்ரா.
தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த வைஷ்ணவி மிகுந்த பிரபலமானவர் என்றே கூறலாம். ஆனால் இவரது வளர்ச்சியை கண்டு அக்கட்சியில் இருப்பவர்கள் இவரை பல காரணங்களுக்காக நிராகரித்து வந்துள்ளனர். மேலும் மக்கள் பணியில் அவரை ஈடுபட விடாமல் தடுத்தும் இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் மக்களுக்கான உதவிகளைப் பற்றி பேச செல்லும் பொழுதும் கட்சியில் முக்கிய பொறுப்புகளை குறித்து பேசும் பொழுதும், நீ கட்சி ஆரம்பித்த பின்னர் தானே வந்தாய் உனக்கு என்ன அவசரம் என்று கூறி அவரை நிராகரித்து உள்ளனர். மேலும் பெண்களுக்கு எதற்காக அரசியல் எனவும் அவரை வசை பாடி தீர்த்து இருக்கின்றனர். இதனால் மனம் வேதனை அடைந்த வைஷ்ணவி தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
இதையும் படிங்க: என்ன விஜய்.. உங்க பேச்சுல பாஜக சாயல் தெரியுதே.. நீட்-க்கு ஆதரவா பேசுறீங்க..! சாட்டையை சுழற்றிய ப்ளூ சட்டை மாறன்..!
இந்த சூழலில், சமீபத்தில் சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குடிசைகள் தீக்கரையாகி இருந்தன. அங்கு உதவி செய்ய வந்த தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மீது காவல்துறையினர் கைவைத்ததாக கூறி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இதனை பார்த்து பொறுக்க முடியாத வைஷ்னவி அவரது எக்ஸ் தளத்தில் " உங்கள் கட்சியை சேர்ந்த மகளிர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றவுடன் நீங்கள் ஒரு கட்சித் தலைவராக கண்டனம் தெரிவித்துள்ளீர்கள்.
சிறப்பு!! ஆனால் என்னை கடந்த ஒரு மாத காலமாக உங்கள் கட்சித் தொண்டர்கள் மிக ஆபாசமான வார்தைகளாலும் தரக்குறைவாகவும் வசைப்பாடுகிறார்கள், அதை கண்டித்து தாங்கள் ஏன் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை!? உங்கள் கட்சி பெண்களை மற்றவர்கள் தாக்கினால் மட்டும் தான் கண்டனமா… உங்கள் கட்சி அல்லாத பெண்களை உங்கள் கட்சிக்கார்ர்கள் தாக்கினால் அப்பொழுது நீங்கள் கட்சித் தலைவராக கண்டனம் தெரிவிக்க மாட்டீர்களா!? @TVKVijayHQ, உங்களுக்கு வந்தா ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? What bro very wrong bro!! " என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த சிலர் வைஷ்னவிக்கு ஆதரவாகவும் விஜய்க்கு எதிராகவும் பேசி வருவதாக தெரிகிறது. இதனை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத பாடகி சுசித்ரா அவரது இன்ஸ்ட்டா பகுதியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " நானும் வீடியோ போடவேண்டாம் என பார்த்தால், நீங்க ஏன் பயத்திகாரத்தனமாக போஸ்ட் கமெண்ட் எல்லாம் பண்ணுறிங்கனே எனக்கு தெரியல, தவெகவில் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தான் முதலிடம் கொடுக்கப்படுவதாக அனைவரும் சொல்லுகிறீர்கள். ஆமாம்.. அவர்களுக்கு தான் கொடுக்க முடியும். தமிழக வெற்றி கழகத்திற்கு முன்பே விஜய் ரசிகர் மன்றம் பல வருடங்களாக இருந்தது. அது ஒரு கார்ப்ரேட் நிறுவனம் போல் தான். அதில் இருந்த அனைவரும் பல வருடங்களாக பல வேலைகளை செய்துள்ளனர். பல இன்னல்களை கடந்து வந்துள்ளனர்.
படம் வெளியாகும் பொழுது வேலை பார்த்துள்ளனர். அஜித்தின் ரசிகர்கள் பிரச்சனை செய்யும் பொழுதும் விஜயின் போஸ்டர்களை கிழிக்கும் பொழுதும் பாதுகாத்து நின்றுள்ளனர். அடிஉதை வாங்கியுள்ளனர். பல நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். இப்படி உழைத்தவர்கள் மத்தியில் வைஷ்னவி என்ன செய்தார். இவர்கள் செய்த வேளையில் ஒன்று கூட செய்திருக்க மாட்டார். லைக்ஸ், ஹார்ட்ஸ் அதிகம் பார்த்த வைஷ்ணவிக்கு இது புரியல அதுனால தான் திமுகல சேந்துட்டாங்க பாவம். தயவு செய்து தவெக கூத்தாடி கட்சி என சொல்லாதீங்க, அவரும் அவர் வழியில் வந்தவர்களும் பல பாடுகளை கடந்து வந்தவர்கள். எனவே தயவு செய்து காமெட்ஸ் போடும் போது பாத்து போடுங்க.. தேவையில்லாம லேபிள் குத்தாதிங்க... எப்பயுமே சில்லியா யோசிக்காதிங்க கில்லியா யோசிங்க..." என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்ன விஜய்.. உங்க பேச்சுல பாஜக சாயல் தெரியுதே.. நீட்-க்கு ஆதரவா பேசுறீங்க..! சாட்டையை சுழற்றிய ப்ளூ சட்டை மாறன்..!