அப்படி என்ன போதை கேக்குது உடம்புக்கு..! விஜய் ஆண்டனி ஆவேசம்..!
புத்திமதி சொல்லும் சினிமாவிலேயே புலப்பக்கத்தில் இருக்கும் போதை பொருள் என விஜய் ஆண்டனி ஆவேசமாக பேசினார்.
தற்பொழுது காலம் மாற...மாற... போதை பொருட்களின் புழக்கமும் அதிகரித்து வருகிறது. என்று... போதை பொருளுக்கு சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அடிமையானார்களோ அன்றிலிருந்து வயதான மூதாட்டியை கூட விட்டு வைக்காமல் பல கொடூர பாலியல் சம்பவங்கள் முதல் கொலை, கொள்ள சம்பவங்கள் வரை அரங்கேறி வருகிறது. இதற்கு என்ன தீர்வு செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் அரசாங்கம் வேறு வழியில்லாமல் சினிமா பிரபலங்களை வைத்து இதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அந்த சினிமாவில் இருப்பவர்களே போதை பொருளுக்கு அடிமையாகி இருப்பது அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு விஷயம் என்றால் அதுதான் கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு 11 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக நடத்திய ரெய்டு. அப்பொழுது அங்கு தனது நண்பர்களுடன் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜன்னல் வழியாக எகிறி குதித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போலீசார் அவரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பிய போது நேரடியாக காவல் நிலையம் சென்று தான் போதை மருந்து உபயோகித்ததை ஒப்பு கொண்டார்.
இதையும் படிங்க: கோலிவுட்டில் கொக்கைன் மாஃபியா.. நடிகர் கிருஷ்ணா விவகாரத்தில் திடீர் திருப்பம்...!
இப்படி இருக்க, நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டதாகவும். இதில் அதிமுக பிரமுகரான பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும். மேலும் பிரசாந்திடமிருந்து ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக அவர் கூறியிருப்பதால் அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரசாந்திடம் இருந்து தான் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையில் பல சினிமா புள்ளிகள் போதை பொருட்களை பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. இதனால் அடுத்தடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்க, போதை பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், " அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதானதற்கு முன்புதான் அவரிடம் 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன், பின்னர் அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன். எனக்கு அதிமுக பிரமுகரான பிரசாத்தை மட்டுமே தெரியும். அவர் என்னை வைத்து படம் தயாரித்து இருக்கிறார்.
ஆனால் அவர் தயாரிப்பில் வெளியான படத்திற்கு எனக்கு தர வேண்டிய ரூ.10 லட்சத்தை அவர் தராமல் இருந்தார். அதனை குறித்து அவரிடம் கேட்டபோது, கொக்கைன் கொடுத்து என்னை பழக வைத்தார். பின்பு அவரிடம் நான் பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தினார்" என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதனை பார்த்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்பொழுது இந்த போதை பொருள் பயன்பாடு குறித்து இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதன் படி, அவர் கூறுகையில், சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு என்பது ஏதோ இன்று நேற்று மட்டும் புழக்கத்தில் இல்லை, அது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. போதை பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடந்து வருவதால், அதை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நாடு போதைக்கு அடிமையாகி வருகிறது...அவ்வளவுதான்" என தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: என்ன வார்த்தை சொல்லிட்டாருய்யா..!! 'தக் லைஃப்' படத்திற்காக மணிரத்னம் சொன்ன அந்த சொல்..!