ஆர்.ஜே பாலாஜி - சூர்யா காம்போ.. டைட்டிலுடன் வெளியானது சூர்யாவின் 45வது பட போஸ்டர்..!
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. 1997ல் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த இவர் பிறகு மாஸான கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ஆனால் நடிகர் சூர்யாவிற்கு சில வருடங்களாகவே நேரம் சரியில்லை தான் போல. அவர் நடிக்கும் திரைப்படங்கள் இப்போது அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அவர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிகமான ட்ரோல் செய்யப்படுகிறது. அது கூட அவருடைய படம் ஃபிளாப் ஆவதற்கு காரணமா? என்று அவருடைய ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
2024ல் சிறுத்தை சிவா இயக்கிய பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் படம் தான் கங்குவா. இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து இந்த வருடம் தொடக்கத்தில் வெளியான சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம், ஓரளவு வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!
இந்நிலையில் நடிகர் சூர்யா, தன்னுடைய அடுத்த படத்தின் பூஜையை தொடங்கி இருக்கிறார். அதுவும் நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45 வது படத்தில் சூர்யா கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. "கட்சி சேரா", "ஆச கூட" போற்ற பாடல்களை இசையமைத்து பிரபலமான சாய் அபயங்கர் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கிறார்.
அதேபோல் இந்த படத்திற்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஜூன் 20ம் தேதி, சூர்யா படத்தின் டைட்டிலை போஸ்டர் உடன் திரை குழுவினர் வெளியிட்டு இருக்கிறனர். இந்த படத்திற்கு "கருப்பு" என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்திற்கு நடிகர் சூர்யா கமிட்டானது குறித்து ஆர்.ஜே பாலாஜி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் "சூர்யாவிடம் நான் கதை சொன்ன அரை மணி நேரத்தில் இந்த படத்திற்கு எனக்கு ஓகே சொல்லிவிட்டார். 15 வருடங்களாக நான் கேட்ட கதையில் இந்த படம் கதை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. இந்த படத்தில் கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று சூர்யா கூறினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல நடிகர்கள் படத்தின் கதையை கேட்டுவிட்டு நீங்க கிளம்புங்க, உங்களுக்கு போன் பண்றோம், மெயில் அனுப்புறோம் என்று என்னென்னலாமோ சொல்லுவாங்க. ஆனால் சூர்யா படத்தின் கதையைக் கேட்டதும் உடனே ஓகே சொல்லிவிட்டார்" என்று ஆர்.ஜே பாலாஜி நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.
இதையும் படிங்க: விவாதத்தை கிளப்பிய எக்ஸ் தள பதிவு... கமலஹாசனுக்கு தொடரும் சிக்கல்!!