×
 

பிரம்மாண்டமான கதைக்களத்தில் நடிக்கும் KPY பாலா..! இயக்குநரே சொன்ன ஹார்ட் பிரேக் ஸ்டோரி..!

KPY பாலா நடிக்கும் படத்தின் கதையை குறித்து பேசியுள்ளார் இயக்குனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி ஷோவில் போட்டியாளராக வந்து தன்னை தாழ்த்தி அனைவரையும் சிரிக்க வைத்து பிரபலமானவர் தான் சின்னத்திரை பாலா. ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்து 10 நிமிடங்கள் தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டு பணத்தை பெற்று சென்று விடுவார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் இவர் இருந்தாலும் சட்டை வாங்க காசு இல்லாமல் மிகவும் பழைய ஆடைகளை உடுத்தி கொண்டு செல்வாராம். இவரை கவனித்த அந்த தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அவருக்கு தைரியம் கூறி அவருக்கு சர்ப்ரைஸாக ஒரு பெட்டி முழுவதும் ட்ரெஸ் மற்றும் ஷுக்களை வாங்கி கொடுத்தாராம். அவர் யாரும் இல்லை தொகுப்பாளர் மகாபா ஆனந்த் தான். இதனை பலமுறை பாலா மேடையில் கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து தனக்கு வரும் சம்பளங்களில் ஒரு பகுதி பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்ய முடிவு எடுத்த பாலா, தனது இன்ஸ்ட்டா மூலம் உதவி என வருபவர்களை தேர்வு செய்து, உதவி செய்ய ஆரம்பித்தவர் இன்று பல குடும்பங்களில் உதவி செய்யும் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளார். இதனை அடுத்து இவர் மக்களுக்கு செய்து வரும் உதவிகளை பார்த்த ராகவா லாரன்ஸ் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேள் என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். 

இதையும் படிங்க: செய்யாதவனை விட்டுட்டு செய்யறவனையே பேசுங்க..! KPY பாலாவுக்கு சப்போர்ட் செய்த அமுதவாணன்..!

இதனை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து, ஆம்புலன் வாங்கி கொடுப்பது, லேப்டாப் வாங்கி கொடுப்பது, கடை வைத்து கொடுப்பது, குடிநீர் வசதி செய்து கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, வீடு கட்டி தருவது, மருத்துவ உதவிகள் செய்வது என பல உதவிகளை செய்து மக்கள் மனதில் லாரன்சும் பாலாவும் நீங்கா இடம்பிடித்து உள்ளனர். இவர்களை பார்க்கும் பொழுது மக்கள் மனதில் நினைவுக்கு வருபவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் தான் என பலர் கூறுகின்றனர். அவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்பொழுது "என்னடா காசு காசு, செத்தா அர்னா கொடிய கூட எடுத்துட்டு தான் புதைப்பாங்க இருக்குற வரைக்கு நாலுபேருக்கு நல்லது செஞ்சிட்டு போங்கய்யா" என்றார். அதுபோல தான் இன்று இவர்கள் இருக்கின்றனர் என பல மக்கள் கூறிவருகின்றனர். 

இப்படி இருக்க, மக்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்து வரும் பாலாவை எப்படியாவது ஒரு படத்தில் நடிகராக நடிக்க வைத்து அழகுபார்க்க வேண்டும் என நினைத்த ராகவா லாரன்ஸ், அவரை வைத்து படத்தை தயாரிக்க நல்ல தயாரிப்பாளரை தேடி வந்துள்ளார். தற்பொழுது அதற்க்கான தயாரிப்பாளர் கிடைக்க, தற்பொழுது பாலா கதாநாயகனாக களமிறங்கி உள்ளார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷெரிப் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில், நடிகர் பாலா கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் "BALA#01". இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிட்டனர் படக்குழுவினர். 

இந்த சூழலில், இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஆரம்பிக்க உள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஷெரீஃப் படத்தின் கதை குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  ‘ரணம் அறம் தவறேல்’ என்ற எனது த்ரில்லர் படத்திற்கு பிறகு, நான் kpy பாலாவை வைத்து இயக்கும் இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்த மனதிற்கு நெருக்கமான கதை. முதல் திரைப்படத்தை விட இரண்டாவது திரைப்படமாகவே இந்த படத்தை எடுக்க விரும்பினேன். நான் இந்தக் கதையை தயாரிப்பாளர் திரு.ஜெய்கிரணிடம் கூறிய உடனே அவர் யோசிக்காமல் உடனே படத்தை எடுக்க சம்மதம் சொன்னார். 

அவர் கொடுத்த நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் இப்படத்தை எடுப்பதற்கான உறுதியையும் கொடுத்தது. பாலா கதாநாயகனாகவும் , தேசிய விருது பெற்ற இயக்குனர்பாலாஜி சக்திவேல் சார்,தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமை அளிக்கிறது .இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. நேர்த்தியான சினிமா படமாக இதனை கொடுக்க வேண்டும் என நினைத்து இப்படத்தை இயக்குகிறேன்.
 

இதையும் படிங்க: மனசுக்குள் காதல் வந்துச்சா.. வந்தல்லோ.. வந்தல்லோ..! கிடைத்துவிட்டார் சமந்தாவின் புது காதலன்..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share