×
 

சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

காலை வாக்கிங் சென்ற பாக்யராஜுக்கு என்ன ஆச்சு? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். எழுத்தாளர், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்தவர்.

1953-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் கிருஷ்ணசாமி என்ற பெயரில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், அந்த கனவை நனவாக்க சென்னை வந்து திரைப்படத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். 1977-ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

தமிழ் திரைப்படங்களில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்ட அவர், பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் இந்தி மறு ஆக்கங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: 40 வருட வாழ்க்கை.. சிவாஜி.. எம்ஜிஆர் தலைமையில் நடந்த கல்யாணம்..!! அத்தனைக்கும் இன்று End.. பாக்கியராஜ் பூர்ணிமாவின் காதல் கதை தெரியுமா..!

ஒரு நடிகராக 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், இயக்குநராகவும் 75-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரது படங்கள் குடும்பக் கதைகள், நகைச்சுவை மற்றும் சமூக கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவானதால், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

1983-ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான சைமா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

'பாக்யராஜ்' என்ற பெயருக்கு முன் இடம்பெறும் 'பாக்யா' என்பது, அவர் ஆசிரியராக செயல்பட்ட 'பாக்யா' வார இதழின் பெயரிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது இயற்பெயர் கிருஷ்ணசாமி. பின்னர் 'ராஜ்' என்ற பெயரை இணைத்து 'பாக்யராஜ்' என்ற பெயரில் திரையுலகில் அறியப்பட்டார்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, பாக்யராஜுக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றன. முதல் மனைவி நடிகை பிரவீணா. 1981-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 1983-ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் அவர் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, நடிகை பூர்ணிமாவை 1984-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரண்யா மற்றும் சாந்தனு என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் சாந்தனுவும் திரைத்துறையில் நடிகராக பணியாற்றி வருகிறார்.

மகனின் திரைப்பயணம் தொடங்கிய பிறகு, பாக்யராஜ் திரைப்படங்களில் இருந்து படிப்படியாக விலகி, குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.

அண்மைக் காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் வீட்டிலிருந்தும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பாரதிராஜா இறுதிச்சடங்கில் பங்கேற்ற போது கூட பாக்யராஜ் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகக்கூறப்படுகிறது. 

இன்று காலை வழக்கம் போல் நடைபயிற்சி சென்ற பாக்யராஜ், வீடு திரும்பியதும் நெஞ்சு வலிக்கிறது என கூறிய படியே லேசான சிரிப்புடன் சோபாவில் சாய்ந்துள்ளார். உடனே இதைப் பார்த்து பதறிப்போன உறவினர்கள் அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மயங்கிய நிலையில் சுயநினைவை இழந்து காணப்பட்டாராம். அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் உயிரிழந்தார்.

இந்த செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து, தமிழ் திரைப்பட உலகைச் சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏராளமான ரசிகர்களும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நேற்று குஷ்பூ மகள் கல்யாணத்துல பட்டுவேட்டியுடன் கலக்கிய பாக்கியராஜ்..!! இன்று வெள்ளை சட்டையுடன் உலகை விட்டு பிரிந்து விட்டாரே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share