திடீர் உடல்நலக்குறைவு... பாரதிராஜாவின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?... அருகில் இல்லாத மனைவி, மகள்...!
இயக்குனர் இமயம் என போற்றப்படும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய, பின்னர் பல்வேறு படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் வேரூன்றி நின்ற பாரதிராஜா 84வது அகவையில் மரணமடைந்தது அவரது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கி போயிருந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா தற்பொழுது காலமானது அவரது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
1941ம் ஆண்டு தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்த பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. தேனி மாவட்டம் அல்லிநகரம் என்ற ஊராட்சியில் பெரியமாத்த தேவர் மீனாட்சி அம்மாள் என்ற கருத்தம்மாள் தம்பதிகளுக்கு 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி பிறந்தார். இவருக்கு மனோஜ் , ஜனனி என்ற இரு பிள்ளைகள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உடல்நல குறைவால் மகன் மனோஜ் காலமானார். 1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது திரைப்படத்தை தொடங்கினார் பாரதிராஜா. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், புதிய வார்ப்புகள், கருத்தம்மா, கல்லுக்குள் ஈரம், மண்வாசனை, டிக்டிக், காதல் ஓவியம், வேதம் புதிது உள்ளிட்ட பல காவிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு ராதிகா, ராதா, ரேவதி, ரஞ்சிதா போன்ற கதாநாயகளையும் கார்த்திக், நெப்போலியன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. சினிமா மீது கொண்ட ஈர்ப்பால் சென்னைக்கு வந்து பிரபல இயக்குனர்களின் உதவி இயக்குனராக பணியாற்றினார். வாழ்விலையும் கலாச்சாரத்தையும் அழகையும் திரையில் காட்டிய வித்தகர். இந்திய திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2004ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். ராக்கி, திருச்சிற்றம்பலம், குரங்கு பொம்மை, ஆயுத எழுத்து, மகாராஜா, திருச்சிற்றபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதல் மரியாதை, கருத்தம்மாள்,
இதையும் படிங்க: என் இனிய தமிழ் மக்களே...!! - மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!
தனது மகன் மனோஜ் மாரடைப்பால் திடீரென மரணமடைந்த தீவிர சோகத்தில் பாரதிராஜா இருந்து வந்துள்ளார். இந்த துயரமான இழப்பு மற்றும் வயது முதிவு காரணமாக ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமே அவரது உடல் நிலைக்கு பாதுகாப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அவரது குடும்பத்தினரும், திரைத்துறையினரும் தெரிவித்துள்ளனர். தீவிர நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரை இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாரதிராஜாவிற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். முதற்கட்ட சிகிச்சை கொடுத்துக்கொண்டிருக்கும் போதே அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
பாரதிராஜாவின் மனைவி மற்றும் மருமகள் அனைவரும் வெளியூரில் இருப்பதால் அவர்கள் இப்போது தற்போது சென்னை வந்து கொண்டிருக்கிறார்கள். 10 மணிக்கு மேல் அவர்கள் சென்னை வந்தடைந்த பிறகு இறுதிச் சடங்கு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: என் இனிய தமிழ் மக்களே...!! - மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!