×
 

“எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

'கருப்பு' பட ரிலீஸ் இக்கட்டான சூழலில் தனக்கு நம்பிக்கை கொடுத்த ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா 'கண்ணுகளா, சாமிகளா' என உருகி வீடியோ வெளியிட்டுள்ளார்.

“மே 14-ஆம் தேதி படத்தை ரிலீஸ் பண்ண முடியல, என்ன பண்றதுன்னே தெரியல... ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. ஆனா அன்னைக்கு நைட்டே எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு. நீங்கதான் எல்லாத்தையுமே மாத்துனீங்க” என்று நடிகர் சூர்யா தனது ‘கருப்பு’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பைக் கண்டு நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் டாப் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கருப்பு' திரைப்படம் கடந்த மே 14-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருந்த சூழலில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போகும் இக்கட்டான சூழல் உருவானது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த சூர்யாவுக்கு, தமிழகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் கொடுத்த ஆதரவு ஒட்டுமொத்தக் கோலிவுட்டையும் நெகிழ வைத்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் இந்த அசாத்திய அன்பிற்கு நன்றி தெரிவித்து சூர்யா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் மல்கப் பேசிய சூர்யா, "எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது கண்ணுகளா... செல்லங்களா... சாமிகளா... என் சாமிகளா... முதல்ல இந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி. மே 14-ஆம் தேதி படத்தை ரிலீஸ் பண்ண முடியல, என்ன பண்றதுன்னே தெரியல... ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. ஆனா, நீங்க எல்லா திசையில இருந்தும் அனுப்புன ட்வீட்ஸ், வாய்ஸ் மெசேஜஸ், போன் கால்ஸ் எல்லாமே எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு. அன்னைக்கு நைட்டே எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு. நீங்கதான் எல்லாத்தையுமே மாத்துனீங்க" என்று தொண்டைக் கட்டிய குரலில் தனது நெஞ்சார்ந்த நன்றியைக் கொட்டியுள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் மாரி செல்வராஜ் யாரை சந்தித்து இருக்கிறார் தெரியுமா..? திரைத்துறையே அவரை தான் தேடி போகுதாம்.. வெளியான தகவல்..!

மேலும் பேசிய அவர், "இந்த அன்புக்கு என்ன வார்த்தை சொல்றதுன்னு தெரியல. 'கருப்பு' படத்திற்கு நீங்க கொடுத்திருக்கிற இந்த மரியாதைக்கும், வரவேற்புக்கும் எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது. என் அன்பான ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ். 'கருப்பு' படத்தை இவ்வளவு ஸ்பெஷலா மாத்துனது நீங்கதான்" என்று நெகிழ்ந்து போயுள்ளார். ரிலீஸ் தள்ளிப்போன இக்கட்டான முட்டுக்கட்டையை உடைத்து, சூர்யாவின் கேரியரிலேயே இந்த 'கருப்பு' திரைப்படத்தை ரசிகர்கள் தங்களின் சொந்தப் படம் போலக் கொண்டாடி மாபெரும் வெற்றியாக மாற்றியுள்ளனர். ஒரு உச்ச நட்சத்திரம் தனது ரசிகர்களைக் 'கண்ணுகளா, சாமிகளா' என்று உருகி அழைத்துள்ள இந்த எமோஷனல் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போதைய டாப் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. 

 

 

 

இதையும் படிங்க: சிம்பிள் புடவை லுக்கில் நடிகை ரித்திகா..!! அழகிய சூப்பர் ஹிட் போட்டோஸ் ரிலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share