×
 

தன்னை பற்றி பேசிய நடிகர் கமல்ஹாசன்.. தரமான பதில் கொடுத்த நடிகர் நானி...!

தன்னை பற்றி பேசிய கமல்ஹாசனுக்கு எக்ஸ் தள வாயிலாக பதிலளித்துள்ளார் நானி.

கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் போற்றப்படுகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், "ராஜ்கமல் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

திரையுலகில் குழந்தையிலேயே நடிப்பில் நட்சத்திர நாயகன் பட்டத்தை வென்ற கமல், இதுவரை அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நட்சத்திரம், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, தில்லு முல்லு 1981, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, பகடை பன்னிரண்டு, சிங்காரவேலன், தேவர் மகன், மகராசன், கலைஞன், மகாநதி, மகளிர் மட்டும், நம்மவர், குருதிபுனல், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, இந்தியன், உல்லாசம், காதலா காதலா,

இதையும் படிங்க: டூரிஸ்ட் ஃபேமிலி படம் அல்ல.. அது ஒரு காவியம்..! நடிகர் நானி உருக்கமான பதிவு..!

தெனாலி, ஹே ராம், பார்த்தாலே பரவசம், ஆளவந்தான், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல் ராஜா எம் பி பி எஸ், மும்பை எக்ஸ்பிரஸ், நள தமயந்தி, புதுப்பேட்டை, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், மன்மதன் அம்பு, அன்புள்ள கமல், விஸ்வரூபம், பாபநாசம், தூங்காவனம், உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, விக்ரம், லியோ, இந்தியன் 2, தக் லைஃப், உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 

இப்படி இருக்க, மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இந்த சூழலில் இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. 

இதனை தொடர்ந்து, சமீபத்தில் இசைவெளியீட்டில் கமல் பேசிய ஒரு வார்த்தை கர்நாடகாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். அதன்படி, " உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை பார்த்த கர்நாடக மக்கள் கன்னட மொழியை குறித்து அவதூறாக கமல் பேசியிருப்பதாக கூறி தக் லைப் படம் வெளியிட கூடாது என பிரச்சனை செய்து வருகின்றனர். 

இதனை அடுத்து அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிப்போம் என எச்சரித்து வருகின்றனர். "நிறைய வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றைக் கற்பித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மொழி பிரச்சனை குறித்து பேச அரசியல் வாதிகளுக்கு தகுதியும் கிடையாது. தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்ப்பதில்லை.. ஆனால் அரசியல் எதிர்பார்க்கும் என கூறி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன்  சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது நடிப்பு குறித்து நாணி பேசியதை பற்றி கூறியுள்ளார். அதில் " இந்த வேளையில் நான் நாணி பெயரை குறிப்பிட்டதற்கு காரணம், அப்படிதான் சினிமா இருக்க வேண்டும். நன்றி நானி என்று சொல்வதை விட நாணி என சொன்னதே போதும் அவருக்கு.

அதுபோல் தான் நடிப்பும் இருக்க வேண்டும்" என பேசியிருந்தார். கமலின் பேச்சை கேட்டு மகிழ்ச்சியடிந்த நடிகர் நானி, அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் 'போதும் சார் போதும்' என பதிவிட்டதுடன் அருகில் ஹார்டிங் சிம்பிளுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.


 

இதையும் படிங்க: கர்நாடகத்தில் எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்க முடியாது.. கமல்ஹாசன் நெத்தியடி ரியாக்‌ஷன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share