×
 

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? ஏற்றுமதி அதிகரிக்குமா? ரிசர்வ் பேங்க் கவர்னர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றமின்றி 5.25 சதவீதமாக தொடர முடிவு செய்துள்ளது. இன்று (பிப்ரவரி 6, 2026) நடைபெற்ற மூன்று நாள் நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் மானிடரி பாலிசி கமிட்டி (MPC) கூட்டத்தில் இது தீர்மானிக்கப்படும். இந்த முறை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மாற்றப்படவில்லை என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. நடுநிலை கொள்கை நிலைப்பாடு (Neutral stance) தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நிருபர்களிடம் பேசிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, "இந்தியப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாகவே தொடர முடிவு செய்துள்ளோம்" என்றார். பொருளாதாரம் நிலையானதாகவும், பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சர்ரென இறங்கி வரும் தங்கம், வெள்ளி விலை..!! இன்னைக்கு எவ்ளோ தெரியுமா..??

மேலும், ஏற்றுமதி வளர்ச்சி குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், சமீபத்தில் முடிவடைந்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் இறுதிக்கட்டத்தில் உள்ள இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும் என்றார்.

இதனால் அடுத்த நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் முறையே 6.9 சதவீதமும் 7 சதவீதமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த முடிவால் வங்கி கடன் வட்டி விகிதங்கள் தொடர்ந்து குறைந்த அளவிலேயே இருக்கும். வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் EMIகள் மாற்றமின்றி இருக்கும். பொருளாதார வல்லுநர்கள் இந்த முடிவை எதிர்பார்த்திருந்தனர். பணவீக்கம் குறைந்து, வளர்ச்சி வலுவாக இருப்பதால் ரெப்போ விகிதம் நிலைத்து நிற்கிறது.

இந்த அறிவிப்பு பங்குச் சந்தை, தொழில்துறை, வங்கித் துறை ஆகியவற்றில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நிலைப்பாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க: அந்தர் பல்டி அடித்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share