மீண்டும் வேலை காட்ட ஆரம்பிக்கும் தங்கம் விலை.. தலைசுற்றி நிற்கும் பெண்கள்..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சமீபகாலமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. 74 ஆயிரம் ரூபாயை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது குறைந்துகொண்டே வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. குஷியில் துள்ளிகுதிக்கும் பெண்கள்..!!
தங்கம் விலை நிலவரம் (21/08/2025):
இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரமும் சரிவில் இருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.73,840க்கும், கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,230-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் ரூ.76 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை, தற்போது ரூ.74 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது இல்லதரிசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் 10 ஆயிரத்து 075 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் 80 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.126க்கும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை உயர்வுக்கான காரணம் என்ன?
வியாபாரிகள் கணித்தபடி, இதே வேகத்தில் தங்கம் விலை பயணிக்குமானால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என்ற விலையில் விற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அமெரிக்கா எடுக்கும் சில முடிவுகள், பொருளாதாரம், பங்கு சந்தைகளில் பிரதிபலிக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதே அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதால், மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரூ.74 ஆயிரத்திற்கு கீழ் இறங்கிய தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!